முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா, உங்கள் தீர்வுத் திட்டம் என்ன என்ற கேள்வியைத்தான் மாற்றி மாற்றி பலரும் எழுப்பினர். வர்க்கப்போராட்டம் மூலமான அவர்களின் தீர்வை மறுக்கின்றவர்கள், அதை சாத்தியமில்லை என்று கருதுகின்றவர்களின், தர்க்கங்களும் வாதங்களும் தான் இவை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இந்த வர்க்க அமைப்பில் தீர்வுகளைக் காணமுடியும் என்று கருதுகின்றவர்களின் கேள்விகள் தான் இவை. சுயநிர்ணயம் பற்றிய இவர்களின் அரசியல் வரையறை கூட, பிரிவினையாக அல்லது தமிழனின் அதிகாரத்தைக் கோருவதாகத்தான் இருந்தது. இந்த வகையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாமும் சரி, சுயநிர்ணயத்தை முன்மொழியாத அவர்களும் சரி, மேற்சொன்னவர்களின் அடிப்படையிலான இவர்களின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
Read more...
|