இலங்கை மார்க்சிய லெனினியக் கட்சிகளில் இந்தத் தவறான போக்கு காணப்படுகின்றது. இலங்கையில் 80 வருட காலமாக ஊடுருவிய திரோஸ்கியவாதத்தின் விளைவு இது. இது எந்த இடைக்கட்டமுமின்றி கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்ற கோட்பாட்டுத் தவறை பல்வேறு மட்டத்தில் வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவ நாடுகளுக்கும், முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நவகாலனிய நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்க்க ரீதியான வேறுபாட்டை மறுப்பதுடன், புரட்சியின் வேறுபட்ட கட்டங்களையும் வேறுபட்ட வர்க்க அணிச்சேர்க்கைகளையும் மறுக்கின்ற போக்கு பொதுவாகக் காணப்படுகின்றது. இது தவறான அரசியல் யுத்த தந்திரத்தை உருவாக்குகின்றது.
Read more...
|