Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 02 October 2012
வர்க்கக் கட்சிகள் ஐக்கியத்தை மறுத்து, கோட்பாட்டுரீதியாக இன ஐக்கியம் பேசுவது! - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 03 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 02 October 2012 07:43
பி.இரயாகரன் - சமர் / 2012

மார்க்சிய லெனினியவாதிகள் ஐக்கியப்படாமல், மக்களின் ஐக்கியத்தைப் பற்றி பேசுவது என்பது நடைமுறையற்ற கோட்பாடாகும். இந்த வகையில் இன்று இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்காத எவரும், மார்க்சிய லெனினியவாதிகள் அல்ல. இதற்கு நிபந்தனை விதிக்க முடியாது. கோட்பாட்டு வேறுபாட்டைக் கொண்டு இதில் இருந்து விலகி நிற்க முடியாது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சக்திகளை, போராட்ட நடைமுறையில் வைத்துத்தான் பரிசோதிக்க முடியும். இதுவின்றி யாரும் ஆரூடம் கூற முடியாது. இந்த போராட்டத்தை எவரும் தட்டிக் கழிக்கவும் முடியாது. அனைவரும் இனவாதத்துக்கு எதிரான களத்தில் இறங்கியாக வேண்டும். இதற்குத் தடையாக மார்க்சிய லெனினியவாதிகள் எவரும் செயற்பட முடியாது. உண்மையில் இனரீதியான பிளவு பாட்டாளி வர்க்க சக்திகளையும் கூட பிளந்து இருக்கின்றது. மார்க்சிய லெனினியவாதிகளைக் கூட இது விட்டுவைக்கவில்லை. குறுகிய இன உணர்வுகளுக்;குள்ளும், சந்தேகங்களுக்குள்ளும், தயக்கங்களுக்குள்ளும், தடுமாற்றங்களுக்குள்ளும் நின்றபடி அணுகுகின்ற பொதுப் போக்கு, இன ஐக்கியத்தை நோக்கி பயணிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 02 October 2012 11:16 )