நடைமுறையுடன் இணையாத கருத்துகளில் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து அமைப்பாக்காக முனையாத வெற்றுக் கருத்துகளை நாம் போற்ற முடியாது. இந்தக் கருத்துக்கள் எதுவும் சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பயணிப்பதில்லை. கருத்துகள் மனித வாழ்வியல் சார்ந்து பிறக்கும் போது, அதை நடைமுறையுடன் மீளப் பொருத்தாத வரை, கருத்துக்கள் சமூக இயக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் கருத்துகளல்ல, அது நடைமுறைத் தத்துவமாகும். அதுபோல் வெறும் வரட்டுவாதமல்ல, மாறாக நடைமுறைக்குரிய தத்துவம். இது உலகை மாற்றியமைக்கும் கோட்பாடாகும். கருத்துக்களை வெறும் விவாதத்துக்குரிய எல்லைக்குள் முடக்குவது, அதை வாழும் சூழலுக்கும் தனக்கு ஏற்ப தகமைத்துக் கொண்டு, கருத்தை வெறும் கருத்தாக நடைமுறையில் இருந்து பிரிப்பது புரட்சியாளனின் அரசியலல்ல.
Read more...
|