பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.
தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்சங்களில் இருந்து ஆராயப்பட்டது. உலகில் முதலில் தோன்றியது பருப்பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஓர் அடிப்படை அம்சமாகும். உலகம் அறியப்படக் கூடியதா? மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச்சென்று அதன் விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு,… "உலகம் அறியப்படக் கூடியதே" என தத்துவஞானிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் இவ்வுலகு அறியப்படக்கூடிய ஒன்றல்ல என வாதிட்டவர்களும் இருந்தனர். இவர்களை இருவகை கொண்டு அன்றைய மக்களின் தத்துவஞானம் அதை உலகிற்கு சாட்சியமாக்கிற்று.
Read more...
|