Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 25 August 2012
வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லையாம்!, இன ஐக்கியமும் சாத்தியமில்லையாம்!! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 25 August 2012 19:25
பி.இரயாகரன் - சமர் / 2012

"போராட்டத்தின்" பெயரில், "இடதுசாரியத்தின்" பெயரில், "முற்போக்கின்" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது தனித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.

Read more...
Last Updated ( Saturday, 25 August 2012 19:30 )

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 25 August 2012 05:09
அரசியல்_சமூகம் / நேசன்

"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.

இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.

கொழும்பில் அமைந்திருந்த சோவியத் கலாச்சார நிலையத்துக்கு சென்றிருந்த நான் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என்பதால் நுகேகொட என்னுமிடத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அறைக்குள் இருந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குள்ளாகவே எனது பெயரை அழைத்தவாறு வீட்டின் உரிமையாளர் அறைக்கதவைத் தட்டினார்.

Read more...
Last Updated ( Saturday, 25 August 2012 13:00 )