இன்று புரட்சிகர சக்திகள் யார்? இன்று புரட்சிகர சக்திகளை வேறுபடுத்துவது எது? இதற்கு அனைவரும் இன்று விடை காணவேண்டும். இதில் நான் யார் என்பதற்கு நடைமுறையில் பதிலளிக்கவேண்டும். இந்த வகையில் எம்மை மட்டுமல்ல, எம்மைச் சுற்றிய அனைத்தையும் மீள் பரிசோதனைக்கு உள்ளாக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தவேண்டும்.
இன்று யார் சுரண்டப்படும் மக்களைச் (வர்க்கத்தை) சார்ந்து நிற்கவில்லையோ, யார் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைப் போராட்டத்துடன் இணைந்து போராடவில்லையோ, அவர்கள் அனைவரும் மக்களின் எதிரிகள்!
யார் இன்று வர்க்க அரசியலை ஏற்கவில்லையோ, யார் வர்க்க நடைமுறையை சார்ந்த செயற்பாட்டை மறுக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களை ஏமாற்றுகின்ற முதல்தரமான எதிரிகள். அரசு போன்று, மக்களை தம் அறிவு மேலாண்மை மூலம் ஏமாற்றி வாழ்கின்ற பொறுக்கிகள். ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தப்பபட வேண்டியவர்கள்.
Read more...
|