Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 14 August 2012
சிங்கள தேசியத்தை எதிர்க்காத சிங்கள சர்வதேசியம் மார்க்சியமல்ல - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-13 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 14 August 2012 20:09
பி.இரயாகரன் - சமர் / 2012

தமிழ் தேசியத்தின் ஊடாக, இனமுரண்பாட்டையும், சிங்கள தேசியத்தையும் பார்த்தல் மார்க்சியமல்ல. மாறாக ஆளும் வர்க்கத்தின் பெரும் தேசிய வர்க்க உணர்வுகளின் மூலமும், சிங்கள தேசிய இன உணர்வுகளின் மூலமும் உருவானதே இனமுரண்பாடு. இப்படித்தான் இதை இனம் காணவேண்டும். இப்படி இனங்கண்டு போராடுவதே சர்வதேசிய உணர்வாகும்.

தமிழ் தேசியத்தின் ஊடாக இனமுரண்பாட்டை புரிந்து, அதற்கு ஏற்ப அரசியல் ஓட்டுப்போட முடியாது. மாறாக சிங்களப் பாட்டாளி வர்க்கம் தன்னை அரசியல் மயப்படுத்துவது என்பது, சிங்கள தேசியத்துக்கு எதிரான சர்வதேசியத்தை உருவாக்குவதன் மூலம தன் சொந்த வர்க்கப் போராட்டத்தை அது நடத்த வேண்டும். சிங்கள தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை உயர்த்துவதைத் தவிர, வேறு எந்தத் தேசியமும் இருக்க முடியாது. இங்கு தமிழ் தேசியம் பற்றிய விடையம், இங்கு இரண்டாம் பட்சமானவை. சிங்கள தேசியம் பற்றிய விடையமே முதன்மையானது. அதனூடாகவே இன முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்.

Read more...
Last Updated ( Thursday, 16 August 2012 13:48 )

அடுத்த கொலை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 14 August 2012 18:49
அரசியல்_சமூகம் / கனகமணி

"நான் வந்து உழைச்சு உங்களை காப்பாத்துவன் என்று சொன்னான், இப்ப எல்லாமே போச்சே"..... மரியதாஸ் நேவிஸின் அழுகுரலால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறை வாசலை ஏககாலத்தில் ஓராயிரம் கண்கள் நிலைகுத்தி நின்றன. அவர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம் என்னடா திடீரென இங்கு தமிழ் குரல் கேட்குதே என்று. அவ்வளவுதான். அடுத்தகணம் ஏதும் வாகன விபத்தில் ஆரும் தமிழர்கள் செத்திருக்கலாம் என்று ஒவ்வொருத்தரும் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு போயிருக்கலாம். அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தங்களின் உறவுகளால் அடித்துக் கொல்லப்பட்ட டில்ருக்‌ஷனின் தந்தையின் அழுகுரல்தான் அது என்று.

Read more...
Last Updated ( Tuesday, 14 August 2012 18:53 )