Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 08 August 2012
கருத்து முதல் வாதம் என்றால் என்ன? - மார்க்சியத்தை புரிதல், கற்றல், நிறுவுதல் பகுதி - 03 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 08 August 2012 08:45
பி.இரயாகரன் - சமர் / 2012

"கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை" என்றார் மார்க்ஸ். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் பொருள் முதல்வாதம், ஒருமைப் பொருள் முதல்வாதமாகும்.

ஒருமைப் பொருள் முதல்வாதம் கருத்தியல் ரீதியிலான அம்சத்திற்கும் பொருளாய ரீதியிலான அம்சத்துக்கும் இடையிலான உட்தொடர்பை விஞ்ஞானபூர்வமாக அணுகுகின்றது. இது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஓரே கோட்பாட்டில் இருந்து எழுகின்றது. இது பொருள் மற்றும் கருத்தியல் வடிவத்தைக் கொண்டு இருக்கின்றது. கருத்தியல் மற்றும் பொருளாயதம் என்ற இரு நிகழ்ச்சி போக்குகள், இயற்கை அல்லது சமுதாயத்தின் இருவேறு வடிவங்களே ஒழிய வேறல்ல என்பதே ஒருமைப் பொருள் முதல்வாதத்தின் உள்ளடக்கமாகும். இங்கு கருத்தியல் மற்றும் பொருளாயதம் இரண்டில் ஒன்று இன்றி மற்றொன்றை நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிலவுகின்றது, சேர்ந்தே வளருகின்றது. ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத இயற்கையாகவும், அதே நேரம் கருத்தியல் மற்றும் பொருளாதாய என்ற இரு வேறுபட்ட வடிவங்களில் இது தன்னை வெளிப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் கூட பிரிக்க முடியாத, அதே நேரம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதாவது பிரிக்க முடியாத நாணயத்தின், இரு வேறுபட்ட பக்கங்கள் இருப்பது போன்றது.

Read more...
Last Updated ( Wednesday, 08 August 2012 16:55 )