மனித வாழ்வை எப்படி எந்த வழியில் நாம் புரிந்து கொள்வது? நாம் புரிந்து வைத்திருப்பது முழுமையானதா? என் வாழ்வைக் கூட நான் புரிந்து கொண்டுள்ளேனா? இப்படி நான் என்னை, என்னை சுற்றிய மனிதர்களை, முழு உலகத்தை எப்படி, எந்த அடிப்படையில் புரிந்துகொண்டு இருக்கின்றேன்? இப்படி என் அறிவையும், என் புரிதலையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நான் என் வாழ் நிலையின் எல்லைக்குள் தான், அந்த வாழ்வின் இருப்புக்கும் இயல்புக்கும் ஏற்றதான அறிவும் புரிதலுமே, எனது சொந்த வெளிப்பாடாகின்றது. நான் என் என்ற குறுகிய அறிவு மற்றும் புரிதல் சார்ந்த கண்ணோட்டத்தைக் கடந்து, நாங்கள் எங்கள் சார்ந்த அறிவையும் புரிதலையும் பெறுவது எப்படி? இதற்கு மனித சிந்தனை எதன் பிரதிபலிப்பு என்ற தெளிவு எமக்கு அவசியமானது.
Read more...
|