தீப்பொறிக் குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடரும் புலிகளின் நடவடிக்கைகள்
"தீப்பொறி"க் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும், சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர். இவர்களுடனான தொடர்புகளை கொழும்பிலிருந்து தொலைபேசியூடாக நாம் பேணிவந்த அதேவேளை, இங்கிலாந்தில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் இடதுசாரி அரசியலில் பரீட்சயம் உள்ளவருமான மகாலிங்கம் மகாஉத்தமன் தனது அரசியல் கருத்துக்களையும், மார்க்சிசம் குறித்த தனது பார்வைகளையும் கடிதத் தொடர்புகள் மூலம் பரிமாறிக் கொண்டிருந்தார். மகாஉத்தமனால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்களில் காணப்படும் அரசியல், தத்துவார்த்த விடயங்கள் குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மகாஉத்தமனினுடைய நவ-மார்க்சிசக் கருத்துக்கள் குறித்ததாகவே அமைந்திருந்தன.
Read more...
|