மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். மனித வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இந்த வகையில் மனித வாழ்வையும், அதனுள்ளான முரண்களையும், இயங்கங்களையும் புரிந்து கொள்ள மார்க்சியம் உதவுகின்றது. இது கற்பனையான வெறும் தத்துவமல்ல. இது எமக்கு வெளியில் இருந்து வருவதுமில்லை. மாறாக எம் வாழ்வின் எதார்த்தம் சார்ந்து, அதை பகுப்பாய்வு செய்யும் சமூக விஞ்ஞான முறைமையாகும்.
இயற்கைக்கு வெளியில் மனிதன் சந்திக்கின்ற வாழ்வியல் முரண்பாடுகள் ஏன்? எங்கிருந்து? எப்படி? தோன்றுகின்றது என்பதை தன் அறிதலுக்கு உட்படுத்தி, அதற்கான தீர்வையும் முன்வைக்கின்றது. அந்தத் தீர்வை எந்த நடைமுறை மூலம், எப்படி அடைய முடியும் என்பதையும் முன்வைக்கின்றது. இதில் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வது அல்லது தேர்ந்தெடுத்துக் கொள்வது மார்க்சியமல்ல.
Read more...
|