இந்தியப் படை இலங்கையிலிருந்து முற்றாக வெளியேற்றம்
இந்தியப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் இந்தியாவில் நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆளும் இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கெதிராகக் கூட்டுச்சேர்ந்த ஜனதா தள் கூட்டணி இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இந்தியப் பிரதமராக ஜனதா தள் கூட்டணியைச் சேர்ந்த விஸ்வநாத் பிரதாப் சிங் பதவி ஏற்றார். ஜனதா தள் கூட்டணியின் ஆட்சி ஏற்று இந்தியாவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருந்தது. பிரதமராகப் பதவியேற்ற விஸ்வநாத் பிரதாப் சிங் மார்ச் 1990 இறுதிக்குள் இந்தியப்படைகள் அனைத்தும் இலங்கையிலிருந்து வெளியேறும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்
Read more...
|