இப்படி எம்மைப் பற்றி இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லித் திரித்துப் புரட்டுகின்றனர், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று கூறிக்கொள்வோர். அதேநேரம் அவர்கள் கூறுகின்றனர் "ஜக்கியம்" என்பது "அடிமைத்தனமாம்"! "அயோக்கியத்தனமாம்"!! மக்கள் தங்கள் மத்தியில் ஐக்கியப்படுவதை விரும்பாதவர்கள், அதற்காகப் போராடாதவர்கள், தங்களைத் தாங்கள் "மார்க்சியவாதிகள்" என்கின்றனர். "முன்னேறிய பிரிவுகள்" என்கின்றனர். “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” என்கின்றனர். சிலர் தம்மை "சுதந்திர ஊடகவியலாளர்கள்" என்கின்றனர். ஆளும் வர்க்கங்களோ, மக்களைப் பிளந்து அதில் குளிர்காய்கின்றது. அதை எதிர்த்துப் போராட, மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தாத கருத்துகள், பிரச்சாரங்கள் அனைத்தும் இனவாதம் சார்ந்தவை தான். இந்த வகையில் திடீர் "மார்க்சியம்" பேசுகின்றவர்கள், அரசு சார்பானவர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தங்கள் இணையங்கள் மூலம் எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தவகையில் "இனியொரு" இணையத்திலும், "தேசம் நெற்" இணையத்தி;லும், "குளோபல் தமிழ்"நியூஸ்" இணையத்திலும் "ஐக்கியம்" "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாக" வோ இருக்கும் என்கின்றனர்.
Read more...
|