தளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்
உமாமகேஸ்வரனும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டின் செயற்பாடுகளிலும் உறுப்பினர்களிடையே தோன்றிவிட்டிருந்த அதிருப்தியும் உள்முரண்பாடுகளும் தளமாநாடு ஒன்றைக் கூட்டுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. உமாமகேஸ்வரனின் உண்மையான சொரூபத்தையும் புளொட்டின் உண்மைநிலையையும் உணர்ந்து கொண்ட பலர் புளொட் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.
எமது வெளியேற்றத்தின் பின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த வனிதா(சாந்தி) யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். வனிதாவின்(சாந்தி) பொறுப்புக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி முடித்து தளம் திரும்பிவந்திருந்த பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவப் பயிற்சி முடித்தவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதன் மூலம் புளொட்டை மீண்டும் ஒழுங்குபடுத்தி, புத்துயிரளித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என உமாமகேஸ்வரனும் அவரது துதிபாடிகளும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
Read more...
|