Friday, 10 February 2012
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:33
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
மக்களின் அற்ப சொற்ப உழைப்பு முதல் அவர்களின் சிறு சொத்துகளையும் கூட அழித்து கொள்ளையிட்டு செல்வது, உலகமயமாதல் விரிவாக்கத்தின் சுதந்திர ஜனநாயகமாகும். அண்மையில் ஆர்ஜென்ரீனா மக்களின் தன்னியல்பான எழுச்சியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமும் தெளிவுபடவே, உலமயமாக்கல் விளைவை மீண்டும் உலக மக்களின் முகத்தில் அறைந்தது.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:31
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
சமர் 26 இல் தேசபக்தன் மீதான விமர்சனத்துக்கு, தேசபக்தன் இதழ் 20 (ஆடி-2001) இல் ஒரு தொடர் விமர்சனத்தை எழுதியுள்ளனர். 24 பக்கங்;கள் கொண்ட இந்த விமர்சனம், சமர் எழுப்பிய கோட்பாட்டு பிரச்சனை ஒன்றுக்கும் கூட நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக கோட்பாட்டு விவாதத்துக்கு பதிலளிப்பதை விடுத்து, பொதுவான நிலைமையை கூறுவதன் மூலம் ஜனரஞ்சகமான சமூக அறியவியலுக்குள் வாசகர்களை அழைத்துச் சென்று திசை திருப்புவது நிகழ்கின்றது. இந்த ஜனரஞ்சகமான எல்லைக்குள் புதிய முரண்பாடுகளும், புதிய விமர்சன உள்ளடக்கமும் பிரச்சனையை வேறு திசையில் நகர்த்துகின்றது.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:28
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
கொரில்லா என்ற தலைப்பிலான நாட்காட்டி வடிவத்திலான தொகுப்பு ஒன்றை ஷோபாசக்தி அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த நூல் பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி புலிகளின் இயக்க நடத்தைகள் பற்றி பேசுவதால், மிக முக்கியத்துவமானதாகும். கடந்த காலத்தில் புலிகளால்; படுகொலை செய்யப்பட்ட கேசவனின் புதியதோர் உலகம், செழியனின் நாட்குறிப்பு, சக்கரவர்த்தியின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் சிறுகதை தொகுப்பு, வீரகேசரி (5.5.1996)யில் வெளிவந்த கூடில்லாத நத்தைகள்.. ஒடில்லாத ஆமைகள்... என்ற செங்கை ஆழியன் சிறு கதையின் தொடர்ச்சியில் கொரில்லா வெளிவந்துள்ளது. இது போன்று இயக்கங்களின் நடவடிக்கைகளைப் பற்றி, பல்வேறு வடிவங்களில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டிய வரலாற்று கால கட்டத்தில் நாம் உள்ளோம்.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:25
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
இலக்கியம் ஊடாகவே தத்துவத்தை பேசும் சக்கரவர்த்தியின் சிறுகதை தொகுப்பான "யுத்தத்தின் இரண்டாம் பாகம்" அண்மையில் வந்த முக்கிய படைப்புகளில் ஒன்றாகும்;. தெளிவான உள்ளடக்கம் மேல் கலையையும் பல்வேறு பிரதேச மொழியையும் சிறுகதைகள் மூலம்; வெகு சிறப்பாக கையாளும் இவர், தன்னை நேருக்கு நேர் தயக்கமின்றி ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டுகின்றார். இந்த வகையில் இவர் இன்றைய இலக்கியவாதிகளுக்குள், கதை சொல்லும் போக்கில் ஒரு நேர்மையைக் கையாளுகின்றார். இலக்கியம் அருவமானது. உருவம் பற்றி பேசத் தேவை இல்லை என்ற போலியை, இவர் தெளிவாகவே உடைத்துக் காட்டிவிடுகின்றார். ஒரு இலக்கியம் மூலம் மக்களுக்கு வழிகாட்ட, விளக்க முடியும் என்பதை படைப்பின் மூலம் நிறுவுகின்றார். இவரின் தத்துவம் சார்ந்த வழிகாட்டல், அது சார்ந்த உள்ளடக்கத்தை மக்களின் விடுதலை சார்ந்து முன்வைக்கின்றாரா? என்ற கேள்வி எமக்கு அடுத்து முக்கியத்துவமுடையதாகும். இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இரண்டு முக்கிய விடயங்களை பேசுகின்றது.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:20
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
மூலதனம் உலகமயமாகின்ற இன்றைய வரலாற்றுப் போக்கின் உள்ளடக்கமே, மக்களின் வாழ்வியல் மேலான பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதத்தை எதிர்த்து மக்கள் போராட, இதன் மீதான எதிர் பயங்கரவாதம் அவசியமான நிபந்தனையாகின்றது. இந்தவகையில் பாட்டாளி வர்க்கம்; மக்கள் முன்னெடுக்கும் பயங்கரவாதத்தின் உறுதிமிக்க பங்காளியாகவும், அதை தலைமையேற்று நடத்தும் முன்னணிப் படையுமாக, வர்க்க வரலாறு முழுக்க நீடிப்பது அதன் புரட்சிகர வர்க்க குணம்சமாகும்.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:16
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
செப்டம்பர் 11ம் திகதி மனித இனத்தின் வரலாற்றில் ஒரு காலக்கோட்டை கிழித்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் இருந்த உலகம் அதற்குப் பின்னர் சடுதியில் மாற்றமடைந்து தனது இயல்பிலிருந்து முற்றிலும் மாறிப்போய் விட்டது என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்கா 3000 பேர்களையும் தனது சுரண்டல் பொருளாதாரத்தின் சின்னமாக உயர்ந்தெழுந்து நின்ற இரட்டைக் கோபுரத்தையும், உலக ஆதிக்க ஆக்கிரப்பு இராணுவத்தின் கட்டளை மையமாக அச்சுறுத்தி நின்ற பென்டகனையும் அழிவுக்குள்ளாக்கிய போது மட்டும் தான் உலகம் மாறிப் போய்விட முடியுமா ?
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:13
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
வழமை போல் இம்முறையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தினச் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்தவும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எமது தேசியத்தை உயர்த்திப் போராடவும், செய்ய வேண்டிய வரலாற்று பணிகளை இந்தச் செய்தி அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. குறிப்பாக புலிகளின் விடுதலைப் போராட்டம் செய்த தவறுகள் மீதான சுயவிமர்சனம் மற்றும் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை திரட்டும் வகையில், ஒரு போராட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று தார்மீகப் பணியைப் பற்றி வழக்கம் போல் எதுவுமில்லை. புலிகள் தம்மையும் தமது தவறான அரசியல் வழியில் இருந்து மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதை, மீண்டும் நெருக்கடியான இன்றைய தருணத்திலும் செய்தியாக தாங்கி வெளிவந்துள்ளது. புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வால் பிடித்து செல்வதும், கருத்துக் கூறுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இம்முறை வழமையான வலது கண்ணோட்டத்துக்கு பதில், இடது தன்மை கொண்ட வலது கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் புலிகளின் தலைவரின் செய்தி, புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே ஒரு அதிர்ப்தியை வலது கண்ணோட்டம் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. மறு தளத்தில் சொல்லத் தவறியது, செய்யத் தவறியது என்ற விடயத்தை விட்டு, சொன்னதுக்குள்ளான சிலவற்றின் மீதான விமர்சனத்தைப் பார்ப்போம்.
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 10 February 2012 21:04
பி.இரயாகரன் - சமர்
/ சமர் - 30 : 01/02 - 2002
|
பராளுமன்ற சாக்கடையில் புளுத்தெழுந்த பன்றிகள் அனைவரும், உலகமயமாதலை ஆதரித்து அதை நிறைவு செய்வதில் தம்மை ஒத்த கருத்துடையவர்களாக, முரண்பாடு இன்றி திகழ்கின்றனர். ஜனநாயகம், சுதந்திரம், வாக்குரிமை என அனைத்தும், மக்களின் தன்னிறைவான சுயபொருளாதாரம் என்ற தேசியத்தை அழித்து, உலகமயமாதலை நிறுவி பாதுகாப்பதை குறிக்கோளாக கொள்கின்றது.
Read more...
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 10 February 2012 18:33
அரசியல்_சமூகம்
/ நேசன்
|
எமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம்
இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவும், இந்திய மத்தியத்துவத்துடனும் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னராக இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசினால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தத்தை முகம் கொடுத்து வந்த வடக்கு கிழக்கு மக்கள், அரசின் யுத்தநிறுத்தமும் இந்திய மத்தியத்துடனான திம்புப் பேச்சுவார்த்தையும் இனப்பிரச்சினைக்கொரு நிரந்தரத் தீர்வையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்த்தவர்களாகக் காணப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களுக்குப் பின்னான இந்திய அரசின் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த "அக்கறை"யும் "ஆதரவும்", இந்தியாவில் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியுடன் ஆயுதங்கள் வழங்கியமையும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகவே ஆதரவு வழங்கியமையும் தமிழ்மக்கள் மத்தியில் இந்திய மத்தியத்துவதுடனான பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை கொள்வதற்கு காரணமாய் அமைந்திருந்தது.
Read more...
|
Last Updated ( Sunday, 12 February 2012 13:56 )
|
|
|