Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 27 October 2010
நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:16
புதிய ஜனநாயகம் / 2010

உ.பி. மாநிலத்தின் காசியாபாத் மாவட்டக் கருவூல அதிகாரிகளும் நீதிபதிகளும் கூட்டுச் சேர்ந்து,  கடைநிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து  ரூ.34.56 கோடியைச் சட்டவிரோதமாக மோசடி செய்து சுருட்டி ஏப்பம் விட்டனர். கருவூல அதிகாரியான அஷுடோஷ் அஸ்தானா என்பவனுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து,  நீதிபதிகளும் கருவூல அதிகாரிகளும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்து பணத்தைப் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர். 2001-இலிருந்து 2008-வரை நடந்துள்ள இந்த மோசடி மெதுவாகக் கசிந்து ஏப்ரல் 2008-இல் அஸ்தானா கைது செய்யப்பட்டான். அவனுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Read more...


இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக....தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:15
புதிய ஜனநாயகம் / 2010

இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பயங்கரவாத ராஜபக்சே கும்பல், இப்போது ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி சிங்களக் குடியேற்றத்தை நடத்தி வருகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்படவில்லை. சிறையிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் ஊடகவியலாளர்களும் இன்னமும் விடுவிக்கப்படவுமில்லை.


Read more...


செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:13
புதிய ஜனநாயகம் / 2010

ஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.


Read more...


தொடரும் அரசியல் கூத்துக்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:11
புதிய ஜனநாயகம் / 2010

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் - அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.


Read more...


நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்... PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:10
புதிய ஜனநாயகம் / 2010

முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த போலீசு எஸ்.பி பிரேம்குமாரை, 2.8.2010 அன்று, மாரக்கண்டேய கட்ஜு, சி.பி.தாகுர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நீதிபதிகளுக்குக் கும்பிடு போட்டார், பிரேம்குமார்.


Read more...


காஷ்மீர் இந்திய இராணுவமே வெளியேறு! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:07
புதிய ஜனநாயகம் / 2010

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!", "இப்பொழுதே வேண்டும் விடுதலை!" என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. "இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது" என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.


Read more...


போபால்: கொலைகார 'டௌ'-வே வெளியேறு! புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:06
புதிய ஜனநாயகம் / 2010

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்துக் குற்றவாளிகளை ஒருநாள்கூடச் சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது, போபால் நீதிமன்றம். 23,000 இந்திய மக்களைப் படுகொலை செய்து, 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் பயங்கரவாதியான  யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது, அமெரிக்க  அரசு.


Read more...


இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 27 October 2010 19:03
புதிய ஜனநாயகம் / 2010

இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. Read more...


தமிழ் இனவாதம் கக்கும் "மார்க்சியம்" பேசும் இடதுசாரியம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 27 October 2010 11:40
பி.இரயாகரன் - சமர் / 2010

யுத்தத்தின் பின் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தொடர் இனவொடுமுறை என்பது, மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. மறுபக்கத்தில் அனைத்தையும் இனவாத சாயம் பூசி, விடுகின்ற தமிழ் இடதுசாரிய அரசியலும் அரங்கேறுகின்றது. யார் அதிகம் இனவாதம் பேசி தமிழ்மக்களைக் கவருவது என்ற போட்டியில் வலதுகளும் இடதுகளும் ஈடுபடுகின்றனர். முன்பு புலிகள் செய்ததையே, இன்று பழைய இடதுசாரிய பெருச்சாளிகள் செய்கின்றனர். தமிழ் இனவாதத்தை உயர்த்துவதன் மூலம், புலிகளை நிரவ முடியும் என்பதுதான் இன்றைய இடதுசாரிய அரசியலாக உள்ளது. சொந்த இடதுசாரிய கருத்துகள் மூலம், வலதுசாரியத்தை வெல்ல முடியாது என்பது இடதுசாரி அரசியல் திரிபாகும். இனவாதத்தைக் கக்குவதன் மூலம், வலதுசாரியத்தை தமதாக்க முடியும் என்பதே, இன்றைய இடது தமிழ்தேசியமாக மாறிவருகின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 27 October 2010 12:58 )