Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 21 October 2010
பெண் போராளிகளை அச்சுறுத்தி மிரட்டிய ரிவால்வர் ரீற்றா - (புளட்டில் நான் பகுதி 19) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 21 October 2010 21:56
அரசியல்_சமூகம் / சீலன்

இரண்டு நாட்களில் கண்ணன் இந்த முகாமில் இருந்து இடம் மாற்றப்பட்டார். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனெனில் கண்ணன் வாமதேவனை வழிமறிக்கும் போது அவருடன் நான் நின்றிருந்தேன். மேலும் ஏற்கனவே வாமதேவனுக்கு என் மீது வெறுப்பு இருந்ததாலும், எனக்கு ஏதாவது செய்வார்கள் என்ற பயத்திலும் இருந்தேன். நான் நினைத்தது சரியாகவே இருந்தது. ஒரு வாரத்தினுள் என்னை ஒரத்தநாட்டுக்கு வரும்படி அழைப்பு வந்தது. அங்கு சென்றதும் என்னை மீண்டும் பீ முகாமிற்கு பயிற்சிக்கு அனுப்ப உள்ளனர் என்பதனை கலாரூபன் மூலம் (இவர் ஒரத்தநாட்டு காரியாலயத்தில் வேலைபார்த்தவர், என்னுடன் ஒன்றாக கல்வி கற்றவர்) அறிந்து கொண்டேன். இதை உடனடியாக அழகனிடம் தெரிவித்தேன். அழகன் என்னை அழைத்துக் கொண்டு செல்வராஜாவிடம் சென்று, அவரிடம் இது குறித்து கதைத்தோம். அழகன் என்னை தனக்கு உதவியாக இருப்பதற்கு அனுமதிக்குமாறு ஏற்கனவே கேட்டிருந்த விடையத்தைப் பற்றி, அவருடன் கதைத்தார். அதற்கு செல்வராஜா தன்னால் மாத்திரம் எதையும் முடிவெடுக்க முடியாது என்றும், அனைத்துமுகாம் பொறுப்பாளரான சுபாஸிடமும் கதைக்கும்படி கூறினார். அவ்வேளையில் சுபாஸ் ஒரத்தநாட்டில் இல்லை என்பதால் என்னை பீ முகாமிற்கு அனுப்புவதை தள்ளிப் போட்டார் செல்வராஜா.

Read more...
Last Updated ( Thursday, 21 October 2010 22:01 )

மார்க்சிச முகமூடியுடன் பாசிசத்துடன் உறவா ? புதியதிசைகளிடம் சிலகேள்விகள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 21 October 2010 19:07
அரசியல்_சமூகம் / மா.நீனா

சில விடையங்கள் தமிழரங்கம் பிரசுரித்தால் ஆதாரம் எங்கே, விசாரணைக்கு வா இங்கே என கட்டளையிடும் நிலையில் இன்று புலத்தில் நடைபெறும் அரசியல் கூத்துகள் பற்றி சில தகவல்களையும், அது சம்பந்தமான என் கேள்விகளையும், கருத்தையும் இங்கு முன்வைக்க,  சொல்ல விழைகிறேன்.


யார் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்...?

"லண்டனில் இன்று (19-10-2010) செவ்வாய்க் கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ........." பிரித்தானிய தமிழர் பேரவையால் குறுகியகால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை நாளாக இருந்தும் கொட்டும் மழையிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.." இது புலிகளின் புலம்பெயர் இணையங்களில் ஒன்றான பதிவு இணையத்தில் வந்த செய்தி.

Read more...

Last Updated ( Thursday, 21 October 2010 19:18 )