Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 10 October 2010
தீர்ப்புகளும், புலியின் பெயரால் பெண் உடலை குதறிய கொடுமையும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 10 October 2010 08:59
பி.இரயாகரன் - சமர் / 2010

சட்டம், நீதி, ஒழுங்கு என்பது, மக்கள் சார்ந்ததல்ல, அதிகாரம், பணப்பலம், செல்வாக்கு முதல் வர்க்கம், இனம், அரசியல் என்பதற்கு உட்பட்டது என்பதையே, இந்த நிகழ்வு மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

அண்மையில் வெளியாகிய செய்தி ஒன்று "வவுனியா அருணாச்சலம் முகாமில் தங்கியிருந்தபோது இராணுவத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் என்னுடன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லையெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டியநிலை ஏற்பட்டது." இப்படி திருமணமாகாத 20 வயது பெண் எப்படி குழந்தைக்கு தாயானாள் என்ற சமூகக் கண்காணிப்பு பொதுத் தளத்தில் தான், நடந்த கொடுமை வெளிவருகின்றது. அந்தப் பெண் "அந்தக் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பமில்லையென்றும் அதனைச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க விரும்புவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்துக்கும் அப்பெண் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்த" போது இந்தச் சம்பவம் வெளி உலகுக்கு முன் வருகின்றது. இதற்கு முன் இதை தெரிந்திருந்தும்,  சொல்ல முடியாது. நடந்ததைச் சொல்லச் சாட்சியங்கள் இருப்பதில்லை. சொன்னால் அதை அவர் நிறுவவேண்டும், இல்லையென்றால் தண்டனை.

Read more...
Last Updated ( Sunday, 10 October 2010 09:35 )