Thursday, 13 May 2010
Written by பி.இரயாகரன்
|
Thursday, 13 May 2010 07:51
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
பிரபாகரன் உயிர் வாழ்ந்திருக்க முடியாதா? முடியும் என்றால்! என்னதான் செய்திருக்கவேண்டும். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், குறைந்தபட்சம் சில உண்மைகளைத் தன்னும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதை இன்றுவரை மறுப்பவர்கள் தான், பிரபாகரனை கொன்ற உண்மையான கொலைகாரர்கள். இதுதானே உண்மை. சரி அவர்கள் யார்? நீ யாரை நம்பி, ஏன் எதற்கு என்று எந்தக் கேள்வியுமின்றி யார் பின்னால் சென்றாயோ, அவர்கள்தான்; பிரபாகரனைக் கொன்றனர். இது ஒரு உண்மையில்லையா? இதற்கு மாறாக உன்வழியில் சென்று இருந்தால், அவர்கள் உயிர்வாழ்ந்திருக்க முடியுமல்லவா? இதை நீ உணர்ந்தால், யார் அந்தக் கொலைகாரர்கள் என்பதை தெளிவாக இனம் காண்பாய்.
Read more...
|
Last Updated ( Thursday, 13 May 2010 07:54 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 13 May 2010 05:15
அரசியல்_சமூகம்
/ தேவன்
|
சிங்களஅரசினை மூச்சுக்கு மூச்சு பேச்சிலும், எழுத்திலும் இனவாத அரசு என்று குற்றம் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாதம் பேசியே அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்திக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் வெறும் இனவாதத்தினை வைத்தே தங்கள் அரசியலை ஓட்டுகிறார்கள். மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளை மறைத்து அவர்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்த இந்த இனவாத அரசியலை பயன்படுத்துகிறார்கள்.
Read more...
|
Last Updated ( Thursday, 13 May 2010 05:12 )
|
|
|