Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 27 October 2008
மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 27 October 2008 20:30
பி.இரயாகரன் - சமர் / 2008

செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர்.  மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

 

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.

 

Read more...
Last Updated ( Friday, 14 November 2008 12:14 )

புலிகள்,தமிழகக் கட்சிகள், இந்திய அரசு மற்றும், இலங்கை அரசும் மக்களும். PDF Print Write e-mail
Written by admin2
Monday, 27 October 2008 06:46
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழகத் திரையுலக மற்றும் ஓட்டுக் கட்சிகளினது "இனவுணர்வுப் போராட்டம்" தமிழக மக்களை எழிச்சியுற வைத்து, ஈழ மக்கள் விடுதலைக்கு உந்து சக்தியாக்குமா?-சில புரிதல்கள்.

 

ஈழ மக்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தருணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.இதுவரை நாம் இலட்சம் மக்களையும்,90 வீதமான வாழ்விடங்களையும் இழந்துவிட்டோம்.ஊர்கள்,விளை நிலங்கள் யாவும் காடுகளாக மாறிவிட்டன.மரித்த மக்களின் எலும்புகளும்,சிதைவுற்ற கட்டிடங்களுமே நமது பண்பாட்டுச் சின்னமாக எஞ்சப் போகிறது!

Read more...
Last Updated ( Monday, 27 October 2008 06:50 )