இந்தக் கைதுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கூறிக்கொண்டு கும்மியடித்த பலர், நாய் உண்ணிபோல் கழன்று ஒடுகின்றனர். பலர் தமது தலையை மண்ணுக்குள் குத்திக் கொண்டு, சம்பந்தமில்லாதவர்களாகி விட்டனர். இனம் தெரியாத ஒரு அச்சம் பீதி கலந்த மௌனம். எதுவும் நடவாத மாதிரி இருக்க முற்படுதல். எதுவும் தெரியாதவர் போன்று பிரமை. பலர் மௌனவிரதம். வசனம் பேசிய வீரர்கள், நடைப்பிணமாக நடமாட முனைகின்றனர்.
Read more...
|