மகஇக வின் அறிக்கை மீது இரயாகரன் இரண்டு பதிவுகள் எழுதிவிட்டார். அறிக்கையை வரி வரியாகப் பிய்த்துப் போட்டு எதிர்வாதம் செய்வதாகவும், வாக்கியங்களுக்கு தவறான பொருள் கற்பித்து வியாக்கியானம் செய்வதாகவுமே அவரது பதில் அமைந்திருக்கிறது. தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக இல்லை. இணையத்தில் விவாதம் நடத்துவது அரட்டைக்கும், அவதூறுக்கும் பயன்படுமே தவிர குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை பயன்படாது என்பதனாலேயே ம.க.இ.க ஒரு பகிரங்க விசாரணையை முன்மொழிந்தது. நேரடி விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார். அதனை மறைப்பதற்காக வளைத்து வளைத்து எழுதுகிறார்.
அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !! - மகஇக
- 05 October 2010
- தமிழரங்கம்
- Section: சமகால நிகழ்வுகள் -
- சிறப்பு கட்டுரைகள்
Last Updated on Tuesday, 05 October 2010 19:05
நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை முன்னிறுத்தி, ம.க.இ.க.வின் அரசியல் நிலைப்பாடு
- 04 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
கட்டைப் பஞ்சாயத்து மூலம் பணம் அறவிட்டவர்கள், அதை தங்கள் சுயவாக்கு மூலமாக நியாயப்படுத்தியவர்கள், தங்கள் செயலை நியாயப்படுத்த ம.க.இ.க. ஊடாக எம்மை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஒரு விசித்திரமான அரசியல் வழக்கு. சம்பந்தப்பட்ட இருதரப்பும், தங்கள் சார்பாக தமது தரப்பு வாக்குமூலங்களைக் கொடுத்திருக்கின்றது. அப்படி உண்மைகள் இருக்க, இல்லை அதை நீங்கள் நிறுவ வேண்டும் என்கின்றது மகஇக.
Last Updated on Monday, 04 October 2010 13:17
ம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும்
- 03 October 2010
- தமிழரங்கம்
- Section: சமகால நிகழ்வுகள் -
- சிறப்பு கட்டுரைகள்
//இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்திஇ சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்) சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன் குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன் அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். //
Last Updated on Sunday, 03 October 2010 21:17
யுத்தத்தில் "மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது" யார்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)
- 03 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்" உங்களைப்போன்ற அனைத்துத் தரப்பும் வீதியில் இறங்கி கோரிய போது, நாங்கள் மட்டும் விதிவிலக்காக மாறுபட்ட கோசத்தை முன்வைத்து அதைக் கோரினோம். இதன் மூலம் தான் இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்று கூறினோம்;. இதுவல்லாத உங்கள் கோசம் மக்கள் மற்றும் புலியின் அழிவைத் தவிர, வேறு எதையும் பெற்றுத்தராது என்ற உண்மையினை நாம் மட்டும் சொன்னோம்.
Last Updated on Sunday, 03 October 2010 06:37
கேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்
- 02 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது.
Last Updated on Saturday, 02 October 2010 08:57
2500 மேற்பட்ட ஆவணங்கள், 1000 மேற்பட்ட போர்க்குற்ற படங்கள், விரைவில் 1000 மேற்பட்ட ஒலி ஒளி ஆவணங்கள்
- 02 October 2010
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
எம் மக்களை அழித்த புலிகளும், அரசும், அதைப் பற்றிய அனைத்து விடையங்களையும் வரலாற்றில் இருந்து அகற்றியுள்ளது. இந்த வரலாற்றில் இயங்கிய மற்றைய இயக்கங்களும் அதைத்தான் செய்தனர். உண்மையில் தங்களின் மக்கள்விரோத வரலாற்றுக் குறிப்புகளை அவர்கள் இல்லாதாக்கினர். இதன்பின் மக்களின் கண்ணீர்களும், அவர்களின் வாழ்வும் கேட்பாரின்றி புதைக்கப்பட்டது. அவர்கள் சொல்வது தான் வரலாறு என்ற எல்லைக்குள், சமூகம் மலடாக்கப்பட்டது. இதற்கு மாறானதை அவதூறு என்றனர்.
Last Updated on Saturday, 02 October 2010 05:58
செஞ்சோலையில் நடந்தது என்ன? யுத்தத்தை தொடங்கியது யார்? இதை விமர்சிக்காத அரசியல் எது? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)
- 01 October 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
அனைத்துவித உண்மைகளையும் புதைத்து விடும் போது, பொய்கள் அரசியலாகிவிடுகின்றது. சரியான நேர்மையான தரவுகள் தான், உண்மையை பகுத்தாய உதவுகின்றது. இதை யார்தான் செய்தனர், செய்கின்றனர். நடந்து முடிந்ததைக் பற்றி முழுமையான பகுத்தாய்வு இன்றி புதிய அரசியல் வழிமுறையை படைக்க முடியாது. மே 16ம் திகதி புலிகள் சரணடைந்ததன் பின்னான அரசியல், எந்தவிதத்திலும் எங்கும் நடந்ததை பற்றிய சுய விமர்சனமுமின்றி தான் அரசியலில் தாளம் போடுகின்றனர்.
Last Updated on Friday, 01 October 2010 06:17