மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.
Fri05032024
Last update11:47:46 am
2020 தேர்தல் குறித்து, யாழ் மையவாத சிந்தனையானது முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றது. எது பாதை என்று குழம்புகின்றது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது.
தமிழ் இனவாதமும், பிரதேசவாதமும், மதவாதமும், சாதியமும் பேசுகின்ற தங்கள் மனித விரோத வக்கிரத்துக்கு வாக்களிக்கக் கோருகின்றனர். மறுபுறம் ஒடுக்குபவனுடன் சேர்ந்து அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று கூறி, ஒடுக்கப்பட்டவன் மற்றொருவனுக்கு அடிமையாக இருக்க வாக்களிக்குமாறு கோருகின்றது. இன்று தேர்தல் வெற்றிக் கனவுகளுடன் பயணிக்கின்றவர்களின் அரசியல் சார...
அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...
அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...
கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...
செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...
மார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.
Last Updated on Tuesday, 08 March 2011 06:57
உயிருடன் உள்ள கொலைகாரர்கள் தங்கள் பங்கை மூடிமறைத்தபடி, செத்தவர்களின் பெயரில் மட்டும் குற்றங்களைச் சுமத்தியபடி சொல்லும் வரலாற்றுக்கு பெயர் சுயவிமர்சனமாம். கொலைகாரர்கள் சுயவிமர்சனம் என்றால், தங்களை மூடிமறைத்தல் தான் என்கின்றனர். யாரெல்லாம் அன்று புளட் உட்படுகொலைகளை முன்னின்று செய்தனரோ, யாரெல்லாம் இதற்கு துணை நின்றனரோ, அவர்கள் மறுபடியும் அதை திரித்து புரட்டியதை சுயவிமர்சனம் கொண்ட வரலாறு என்கின்றனர். அன்று இவர்கள் கொன்றவர்களை மறுபடியும் கொன்று, இதற்கு எதிராக போராடியவர்களை கொச்சைப்படுத்தி எழுதும் புரட்டுத்தனம் தான், இந்த வரலாறு. இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலின் மகுடிகள்தான் இவர்கள்.
அன்று தீப்பொறி, கொலைகாரர்களிடம் இருந்து தப்பி தலைமறைவான பின், அவர்களை கொல்ல அலைந்த கூட்டம் தான், தங்களால் கொல்லப்பட்ட அகிலன்-செல்வன் கொலை பற்றி திரித்து கதை சொல்லுகின்றது.
Last Updated on Wednesday, 02 March 2011 10:01
மக்களின் விடுதலை, புரட்சி, மார்க்சியம்.. என்று கூறிக்கொண்டு உருவான முரண்பாடுகளும், அமைப்பு உடைவுகளும் மீண்டும் ஒருமுறை எம்மை ஏமாற்றியே வந்துள்ளது. கடந்த 23 வருடத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சார்ந்த ஒரு உண்மை, அண்மையில் தான் அம்பலமாகியது. ஆம், அன்று கிட்டுவுக்கு குண்டெறிந்தது யார் என்ற உண்மையினூடு தான். மார்க்சியம் பேசியபடி, தனிநபர் பயங்கரவாதத்தில் தீப்பொறி முடங்கிக் கிடந்த உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.
இதை இவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று கூறி, இன்று வகைதொகையற்ற தாக்குதலை தீப்பொறியின் வாரிசுகள் என்று இன்று கூறுகின்றவர்கள் தொடங்கியுள்ளார்கள். தீப்பொறியின் மற்றைய முக்கிய உறுப்பினர்களை வெளியேற்றிய போது, முன்வைத்த விமர்சன ஆவணங்களைக் கூட, வரலாற்றின் முன் திட்டமிட்டு புதைத்து வைத்துள்ளனர். விமர்சனம், சுயவிமர்சனமற்ற வகையில் தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்தபடி தான், புதிய அரசியல் மோசடிகளில் மறுபடியும் ஈடுபடுகின்றது. அது தன்னை மறுபடியும் மே 18 நீட்சியாக கூறிக்கொண்டு, திடீரென அரசியலில் ஈடுபடுகின்றது. கேசவன் உட்பட சிலர் புலியால் கொல்லப்பட, முன்னணி தீப்பொறி உறுப்பினர்கள் தீப்பொறியின் தவறான அரசியலை விமர்சித்து விலகிய நிலையில், மார்க்சியத்தின் பெயரில் புலிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது எஞ்சிய தீப்பொறி. இறுதியில் புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக செயல்பட்டு, புலியுடன் சங்கமமாகிய வரலாற்றில் காணாமல் போனது. இன்றும் தாம் தான் தொடர்ந்து தீப்பொறியின் இன்றைய வாரிசுகள் என்று கூறிக்கொண்டு, மே18 நீட்சியாக தன்னை வெளிப்படுத்தி வருகின்றது.
Last Updated on Tuesday, 01 March 2011 00:08
சிவராம் படுகொலை செய்யப்பட்டான் யாரால்? எதற்காக? படுகொலை வரலாற்றில் இது முதலாவதும் அல்ல, இறுதியுமல்ல.
இயக்கத் தலைமைகள் தமது தலைமையைத் தக்கவைக்கவும், குறுந்தமிழ் தேசியத்தின் தற்பாதுகாப்பே படுகொலை அரசியலாக வளர்ந்தது. அது முதல், படுகொலைகளே அரசியல் ஆணையாக மாறியது. படுகொலைகளின் போது எதிர்தரப்பு குதூகலிப்பதும், மறுதரப்பு புலம்புவதுமாக, தமிழ்க் குறுந்தேசிய வரலாறு தொடருகின்றது. எங்கும் சூனியம் நெற்றியில் செதுக்கப்படுகின்றது.
Last Updated on Sunday, 27 February 2011 07:53
சந்ததியாரின் கண்ணையே தோண்டி பின் அவரைக் கொன்றவர்கள், அவரின் உடலை சாக்கில் கட்டி கூவம் நதியில் போட்ட கொலைகாரர்கள் ஜெர்மனியில் கூடுகின்றனர். இப்படி புளாட் என்ற கொலைகார சதிக் கும்பல், தமது கொலைகளை தொடர்வதற்கு பெயர் சர்வதேச மாநாடு. இந்த மாதம் நடுப்பகுதியில்,
Last Updated on Sunday, 27 February 2011 07:51
இன முரண்பாடும், முரண்பாட்டின் தன்மையும், முழுமை தளுவியதல்ல. அதாவது இலங்கை தளுவியதில்லை. வடக்கு கிழக்கு தமிழர் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக கருதுகின்ற போது, வடக்கு கிழக்கு அல்லாத பகுதிகளில் வாழும் தமிழரும் சிங்களவரும் அப்படிக் கருதவில்லை. இங்கு அவர்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாக உள்ளது. அதேநேரம் இதே முரண்பாடு, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதே நிபந்தனையின் கீழ் உள்ளது. ஒரு நாட்டின் உள்ளான நிலைமை இது. அதேநேரம் வடக்கு கிழக்கு மக்களுக்குள் பிரதேச சாதிய வர்க்க முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது.
இந்த நிலையில் இதை எல்லாம் மறுத்து, இன முரண்பாட்டை மட்டும் முன்னிலைப்படுத்துவது யார்? வடக்கு கிழக்கில் உள்ள சுரண்டும் வர்க்கம்தான். அவர்கள் தான் பிரிவினையை முன்வைக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் சந்திக்கின்ற மேலதிகமான இனவொடுக்குமுறை, அந்த மக்கள் சந்திக்கின்ற வர்க்க ஒடுக்குமுறையை இல்லாததாக்கிவிடுவதில்லை. சாதிய பிரதேச முரண்பாடுகளை களைந்துவிடுவதில்லை.
பிரிவினையை முன்தள்ளும் சுரண்டும் வர்க்கம், இலங்கை தளுவிய வர்க்க முரண்பாட்டை மூடிமறைத்து, பிரிவினை மூலம் அதைப் பாதுகாத்து தன் சுரண்டும் உரிமையாக அதை மாற்றுகின்றது. இந்தப் பிரிவினைவாதத்தின் அரசியல் உள்ளடக்கம் இந்த அடிப்படையில் தான் கருக்கொள்கின்றது. ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கம் தன் இன மக்களையும் சுரண்டுகின்றது என்பதையும் மறுத்து அல்லது மூடிமறைத்து, அனைத்தையும் வெறும் இன ஒடுக்குமுறையாகக் காட்டுகின்றது. இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகவும் காட்டுகின்றது. இதன் மூலம் தான் சுரண்டும் உரிமையை, முன்னிறுத்தி பாதுகாக்கின்றது.
Last Updated on Saturday, 26 February 2011 11:20
சமர்-13 ல் நாம் டி.சிவராம் பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தோம். எமது விமர்சனம் சரியாகவோ இருந்ததை மீண்டும் சரிநிகர் - 69 ல் டி. சிவராமின் கட்டுரை உறுதி செய்துள்ளது.
கடந்த சமர் இதழ்கள் முதல் புலிகள் தொடர்பான எமது நிலை என்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் எல்லைக்குள்ளேயே விமர்சித்து வந்தோம். அதாவது தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டம் சாராத எந்த வகையான புலிகளின் தோல்வியும் மொத்த தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும் என்பது சமரின் நிலை. இந்த வகையில் தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டத்தை கட்டி அமைக்கும் வகையில் புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றோம். இன்னும் ஒரு நிலையில் புலிகளின் வெற்றி என்பது சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே. இது மட்டுமே உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக இருக்கும்.
Last Updated on Sunday, 27 February 2011 07:44
இனவொடுக்குமுறைக்கு எதிரான சுயநிர்ணயம் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் (பூர்சுவா வர்க்கத்தின்) பிரிவினையையோ, ஐக்கியத்தையோ குறிப்பதில்லை. அதனால்தான் அதை சுயநிர்ணய கோட்பாடாக மார்க்சியம் முன்வைக்கின்றது. இதன் வர்க்க சாரம், சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கின்றது.
சுரண்டும் வர்க்க பிரிவினையையும், ஐக்கியத்தையும் மறுக்கும் சுயநிர்ணயம், பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோருகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் பிரிவினையையல்ல. இது சர்வதேசியத்தின் உள்ளார்ந்த அரசியல் ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. இப்படியிருக்க ஒடுக்கப்பட்ட இரண்டு இன வர்க்கங்களுக்குள் பிளவை விதைப்பது, அதை நியாயப்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசியலல்ல. அது மார்க்சியமுமல்ல. பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை மறுப்பது என்பது, மார்க்சியத்தின் பெயரிலும், இடதுசாரியத்தின் பெயரிலும்; சுரண்டும் வர்க்கம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கும் பிளவுவாதமாகும். இந்த பிளவுவாதம் தான் "தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது" என்று கூறுகின்றது. இனங்கள் மத்தியில் பிளவுவாதத்தை முன்தள்ளிய சுரண்டும் வர்க்கத்தின் ஒடுக்கும் அதே அரசியலை, மீள முன்னெடுத்து பிளவுவாதத்தை அகலமாக்குவதாகும்;. இதற்கு எதிரான போராட்டத்தை மறுத்தலாகும்.
Last Updated on Friday, 25 February 2011 09:04
இன்று இலங்கையில் வடக்கு மீனவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் பல. அதை யாரும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அரசோ இதைப் பயன்படுத்தி இதில் குளிர் காய்கின்றது. வடக்கு மீனவர்களின் இன்றைய நிலை என்ன?
1.தங்கள் சொந்தக் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடிவதில்லை.
1.1.அந்த வகையில் இலங்கை அரசு இராணுவ மற்றும் கடற்படையின் கெடுபிடி
1.2.இந்தியா றோலர்களின் அழிவுகரமான மீன்பிடி முறைமையும், நூற்றுக்கணக்கில் இலங்கையின் வடக்குக் கரையில் படையெடுத்து ஆக்கிரமித்து நிற்கும் முறைமையும்
2.வடக்கு மீனவர்கள் யுத்தத்தின் பின்னான சிறியளவிலான முதலீட்டைக் கொண்ட மீன்பிடி உபகரணங்களை கூட, இந்திய றோலரால் இழந்து விடுகின்ற பரிதாபம். இதன் மூலம் இலங்கைக் கடலை முழுமையாக, இந்திய அரசின் ஒத்துழைப்புடன் தமதாக்கி வருகின்றனர்.
Last Updated on Wednesday, 23 February 2011 09:28
இனவொடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறைக்கும், தேசியவாதிகளின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுப்பது தான், குறுகிய தேசியவாதமாகும். பாட்டாளிவர்க்கமோ இதில் இருந்து தன்னை தெளிவாக வேறுபடுத்தி நிற்கின்றது. லெனின் இதை மிகத் தெளிவாக 'எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது." என்கின்றார். இதுவல்லாத அனைத்தும் மாக்சியமல்ல. இவை அல்லாத அனைத்தும், சுரண்டும் வர்க்கத்தின் கோட்பாடாகும்.
Last Updated on Tuesday, 22 February 2011 20:17
சோபாசக்தி ஒரு பெண்ணின் (தமிழச்சி) வாயை அடைக்க கையில் எடுத்த ஆயுதம், "நான் உன்னுடன் படுத்தேன்" என்ற கதை தான். கதையெழுதுபவராச்சே சோபாசக்தி. எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் கையாளும் அதே ஆயுதம் தான். தமிழச்சி நடந்தது என்ன என்று "சோபா சக்தி! உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை!!"என்ற கட்டுரை மூலம் பதில் அளித்துள்ளார்.
இது நடந்த காலகட்டத்தில் தமிழச்சி அவருடன் தன் உறவை முறித்தது மட்டுமின்றி, அன்று நடந்த நிகழ்வையும் தான் தாக்கியதையும் கூட எனக்குக் கூறியிருந்தார். தமிழச்சியின் இன்றைய எதிர்வினையின் உள்ளடக்கம், அன்று எனக்கு தெரிவிக்கப்பட்ட ஒரு உண்மை. இந்த நிகழ்வின் பின் தமிழச்சியின் உதிரியான எதிர்வினைகளையும், அவரின் கோபமான ஒழுங்கற்ற எதிர்த்தாக்குதலையும் தான் சோபாசக்தி தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தன் பொறுக்கித்தனத்தை சோபாசக்தியால் பாதுகாக்க முடிந்தது. இன்று ”நீ என்னுடன் இணங்கிப்படுத்தாய்” என்ற ஆணாதிக்க அயோக்கியத்தனத்தை கொண்ட கதையுடன், களத்தில் இறங்கியுள்ளார்.
இதற்கு தமிழச்சியின் பதில் போதுமானது. இதுபற்றி வேறு தோழர்களின் பதில்கள் பின்னிணைப்பில் பார்க்கவும்.
Last Updated on Monday, 21 February 2011 12:44
எல்லையைத் தாண்டிச் செல்வது எல்லை தெரியாததாலும், நீரோட்டத்தினாலும் தான் என்ற தர்க்கத்தை முன்தள்ளியவர்கள், விரித்த வலையை இழுத்துச்செல்லுதல் இந்தியாவில் நடப்பதுதான் என்று மற்றொரு தர்க்கத்தையும் முன்வைக்கின்றனர்.
உண்மையில் இதன் பின்னுள்ள பல வர்க்க சமூகக் கூறுகளை, இந்தத் தவறான தர்க்கங்கள் மூலம் தவிர்த்துச் செல்ல விரும்புகின்றனர். இதுவே தவறான அரசியலாக மாறுகின்றது.
1. வலையை விரித்து வைத்து மீன்பிடிக்கும் மீனவனுக்கும், வலையை இழுத்துச் செல்லும் மீனவனுக்கும் உள்ள அடிப்படையான வர்க்க முரண்பாட்டை, முதலில் இனம் காணத் தவறுகின்றனர். இது இரண்டு வர்க்கங்கள் கையாளும், வேறுபட்ட மீன்பிடி முறைமையுமாகும்.
2. இலங்கை மீன்பிடியில் மீன்வலையை இழுத்துச் செல்லும் ரோலர் வகைகள் உள்ளிட்ட மீன்பிடி முறைமை தடை செய்யப்பட்டு இருக்கின்றது. அவர்கள் வலையை விரித்து வைக்கும் மீன்பிடி முறைமையையே கையாளுகின்றனர். ஆயிரக்கணக்கில் உட்புகும் இந்திய ரோலர்கள், விரித்த வலைகளை இழுத்து செல்லும் மீன்பிடி மூலம், இலங்கை மீனவர்களின் வலைகளை அழித்துச் செல்லுகின்றனர். திரும்பி வரும்போது வள்ளத்தில் பிடித்த மீனின் பாரத்துக்கு ஏற்ப வள்ளம் கடல்நீரில் தாழப்பதிகின்ற போது, விரித்து வைத்த வலைகளை வள்ளமும் வெட்டியபடியும் திரும்புகின்றது. இப்படி இலங்கை மீனவர்களின் மீன்பிடி முறைமைக்கு எதிரான மற்றொரு மீன்பிடி முறைமை. இதனால் கூட, ஓரே கடலில் இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க முடியாது. இதுவும் கூட அடிப்படையான முரண்பாடு. இது இரண்டு வர்க்கங்கள் கையாளும் மீன்பிடி முறைமைசார் முரண்பாடு கூட. இலங்கைக் கடலில் விரித்து வைத்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதில்லை. விரித்துவைத்து இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை நாங்களும், இலங்கை மீனவர்களும் எதிர்க்கவில்லை.
Last Updated on Sunday, 20 February 2011 09:26
29- 30.01.2011 ஆகிய இரு தினங்கள் தனது இரண்டாவது மாநாட்டினை ஜரோப்பிய நகரம் ஒன்றில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடத்தியிருந்தது. முதல் மாநாட்டின் பின் (18 மாதங்கள் கழிந்த நிலையில்) சில புதிய உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த மாநாடு நிகழ்ந்தது. இதில் இலங்கை உள்ளிட்ட பல ஜரோப்பிய நாடுகளிலும் இருந்து 19 உறுப்பினர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.
•தோழமையையும் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளையும் கொண்ட உறுதியுடன் மாநாடு தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டதுடன் ஒரு அரசியல்திட்டம் மற்றும் வேலைமுறைகள் என்று பல்வேறு விரிந்த தளத்தில் தன்னைத்தான் ஒழுங்கமைத்து கொண்டுள்ளது.
•அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியது இந்த மாநாடு. உலகெங்கும் இருக்கக்கூடிய இலங்கையைச் சார்ந்த மார்க்சிய லெனிய மாவோசிய சிந்தனை கொண்டவர்கள் முதல் புதிய ஜனநாயக புரட்சிகர அரசியலை நேசிக்கின்ற அனைத்து சக்திகளையும்; பிரதிநிதித்துவப்படுத்தியது. அதேவேளையில் இது இலங்கைக்கான ஒரு கட்சி அல்ல என்பதனை மிகவும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக் கொண்டது.
Last Updated on Saturday, 19 February 2011 22:37
இவை பற்றி பல்வேறு கட்டுரைகளில் (எமது தோழர்கள் உள்ளடங்க) நாம் மிகத் தெளிவாக பதில் சொல்லியிருக்கின்றோம். இருந்தும் குறிப்பாக
1."இலங்கை இறையாண்மை என்ற போதி மூட்டையின் பின் வைத்து சொல்லுவது ஏன்?"
நாங்கள் சர்வதேசியத்தைக் கடந்து, இதை அணுகவில்லை.
1.1.வாழ்வுக்காக மீன்பிடிக்கும் தமிழக, இலங்கை (தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள) மீனவர்கள் தம் எல்லை கடந்து மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியே வருகின்றோம். எமது முந்தைய கட்டுரைகளில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1.2.இலங்கையின் இறையாண்மை பற்றி நாம் பேசும் இடம் எப்போது என்னால், இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராகத்தான். மூலதனத்துக்காக அத்துமீறி மீன்பிடிக்கும் போக்கையும், அதை ஆதரிக்கும் அரசியல் போக்கை எதிர்த்துதான், நாம் இலங்கை மக்களின் இறையாண்மை பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்தவகையில் ஈழ தமிழினவாதிகளையும், இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்துதான், இலங்கை மக்களின் இறையாண்மைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்;. இந்த இடத்தில் இந்திய மார்க்சிய லெனினிய கட்சிகள் நிலை என்னவாக இருக்கின்றது என்பது இதுவரை புதிர்தான்.
2."ஒரு அடிப்படையான விசயத்தை மறந்துவிட்டு பேசுவதுதான் இவ்வாறு பார்ப்பதற்கு ஏதுவாகிறது. 40 கிலோ மீட்டரே உள்ள சிறு பிராந்தியத்தை நம்பி 2 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர் (இரு நாடுகளிலும் சேர்த்து, தோராயமாக) என்பதும் இரு நாட்டு மீனவர்களுமே பாரம்பரியமாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்பதும், எல்லைகள், இறையாண்மை போன்றவையெல்லாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகான விசயம் எனப்தையும், மீன்வர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்பதையும் ஏன் தோழர் ராயகரன் உள்ளிட்ட இலங்கை மார்க்ஸியர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்?"
இப்படி நாம் கூறுவதாக கூறுவது தவறானது. வாழ்வுக்காக மீன்பிடிக்கும் இந்திய இலங்கை மீனவர்களுக்கு எல்லை அவசியமில்லை. இது தான் எமது சர்வதேசிய நிலை. வாழ்வுக்காக மீன்பிடிப்பவர்கள் மீன்வளத்தை அழிப்பதில்லை. அதைப் பாதுகாத்து வாழ்பவர்கள்.
Last Updated on Saturday, 19 February 2011 09:51
அரசியலில் திடீர் ஞானம். இது மீனவர் நலன் சார்ந்ததல்ல. மீனவர்களை ஏமாற்ற முனையும், சந்தர்ப்பவாத திருப்பம். எந்த சுயவிமர்சனமும் அல்லாத அரசியல் மோசடி.
இதை செய்வது வேறுயாருமல்ல, இதையே தொழிலாக செய்யும் இனியொரு புதியதிசையைச் சேர்ந்த நாவலன் தான். திடீரென ஒடுக்கப்பட்ட மீனவர் பக்கம் தான் நிற்பதாக, பச்சைக் கொடி காட்டுகின்றார். அறிவு மற்றவனை ஏமாற்றவும், ஏமாளியாக்கவும் தான் என்று நினைக்கின்ற அரசியல் போக்கிரித்தனம்.
Last Updated on Friday, 18 February 2011 09:07
இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.
இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.
Last Updated on Wednesday, 16 February 2011 20:00
அரசியல்ரீதியாக வக்கற்றவர்கள், மக்களை தலைமை தாங்க வேண்டிய அரசியலையும் பொறுப்பபையும் ஏற்காத கூட்டம், மக்களின் கிளர்ச்சியை ஏகாதிபத்திய - இராணுவ கூட்டுச்சதி என்கின்றனர். இப்படி அரசியல் ரீதியாக மக்களின் கிளர்ச்சியை கொச்சைப்படுத்துவது தான், ஏகாதிபத்திய சதி அரசியலாகும்.
மக்களின் கிளர்ச்சியை தொடர்ந்து அதிகாரம் ஏகாதிபத்திய கைக்கூலிகளிடம் மாற்றப்பட்டுவிட்டது. இது எதனால், எந்த சூழலில், யாரால் ஏற்பட்டது என்ற உண்மையை மூடிமறைக்க, இதைத் திரிக்கின்றனர். ஐயோ, இது அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய சதிப் புரட்சி என்கின்றனர். மக்கள் இந்தச் சதியில் ஈடுபடும் வண்ணம், ஏகாதிபத்தியங்கள் தான் அவர்களை இறக்கியது என்கின்றனர். இப்படி மக்கள் நடத்திய போராட்டத்தை ஏகாதிபத்திய சதி என்று கூறுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை முன்தள்ளுகின்றனர்.
Last Updated on Tuesday, 15 February 2011 17:05
தமிழக மீனவர் படுகொலை என்பது, எல்லை தாண்டுவதாலான ஒரு படுகொலையல்ல. இந்தியா கடல் எல்லைக்குள்ளும், படுகொலைகள் நடந்திருக்கின்றது. ஏன் இது இரு நாட்டு மீனவர் சார்ந்த முரண்பாட்டுக்குள்ளான ஒரு படுகொலையுமல்ல. இதனால் மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை என்று அர்த்தமல்ல.
இது போல் இன்று பேசப்படுவது, வெறும் மீனவர் படுகொலை பற்றியதல்ல. எல்லை கடந்த மீன்பிடி பற்றியும், எப்படி மீன்பிடிப்பது என்பது பற்றியும், யார் மீன்பிடிப்பது என்பது பற்றியதுமான பல தொடர் விடையங்கள்.
இதில் ஈழ தமிழினவாதம் முன்னிறுத்துகின்ற குறுகிய இனவாத அரசியல் முதல் அதன் திரிப்பு உள்ளடங்கிய வழியில், மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பின்பற்றுகின்ற கொள்கைகளும் கூட இங்கு விவாதத்துக்கு உள்ளாகின்றது. இலங்கை - இந்திய மீனவர்கள் நலன்கள் மறுக்கப்பட்டு, குறுகிய ஈழ அரசியல் இங்கு இதற்குள் புகுத்தப்படுகின்றது.
படுகொலைக்கான நோக்கங்கள், புலி இருந்த காலத்தில் இருந்து இன்று மாறுபட்ட காரணங்களை உள்ளடக்கியது. இப்படியான நிலையில், இதற்கு எதிரான போராட்டங்களும், விளக்கங்களும் கூட குறுகிய அரசியல் சார்ந்தது. ஈழ தமிழினவாத விளக்கங்கள், மீனவர் நலன் சார்ந்ததல்ல. அது குறுகியது. அனைத்தையும் அதற்குள் குறுக்கிக் காட்டுகின்றது.
Last Updated on Sunday, 13 February 2011 12:55
அரபுலகில் தொடரும் மக்கள் கிளர்ச்சிகள், மக்களின் சொந்த அதிகாரத்தை நிறுவவில்லை. மறுபடியும் மக்களுக்கு எதிரான, ஏகாதிபத்திய தலைமையிலான சர்வாதிகாரத்தையே உருவாக்குகின்றது. இது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் தலைமையையோ, இஸ்லாமிய அடிப்படைவாத தலைமையையோ உருவாக்கவில்லை. ஏன் முரணற்ற முதலாளித்துவ தலைமையையும் உருவாக்கவில்லை. மறுபடியும் மக்களை தொடர்ந்து ஒடுக்கும், புதிய ஏகாதிபத்திய தலைமையைத்தான் உருவாக்கியுள்ளது. மக்களே தங்களைத் தாங்கள் தலைமை தாங்கும் வண்ணம், தமக்கான ஒரு தலைமையை கொண்டிருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் தான், மக்களின் கிளர்ச்சிகள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றது. அடக்குமுறையும், வாழ்விழந்த மக்களின் எதிhப்புகளும் தான் ஆட்சியாளரை தூக்கியெறியும் கிளர்ச்சியாக மாறியது.
Last Updated on Friday, 11 February 2011 08:49
"முதலில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மீனவர்களின் பிரச்சனை என்னவென்பதை நாம் பார்த்து விடுவது நல்லது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போது அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் இந்திய மீனவர்களின் நலன்கள் எங்குமே பாதுகாக்கப்படவில்லை" இப்படி இனியொருவில் இனவாதிகள் வாதிடுகின்றனர். ஈழம் (புலியிசம்) சார்ந்த தமிழினவாதிகள், மீனவர் பிரச்சனையை கச்சத்தீவு தொடர்பான ஒரு பிரச்சனையாக சுருக்கிக் காட்டுகின்றனர். தமிழக மீனவர் படுகொலைகளை மட்டும் குறிப்பாக எதிர்த்தல் என்பதற்கு அப்பால், பல பரிணாமங்களில் தமிழினவாதிகள் தமது இனவாதத்துக்கு ஏற்ப குறுகிய அரசியல் தளத்தில் அனைத்தையும் திரிக்கின்றனர். இலங்கை கடலில் மீன்பிடித்தலை நீர் ஓட்டம், எல்லை தெரியாது செல்லுதல் என்று, எல்லை கடந்த மீன்பிடித்தலாக திரித்துக் காட்டியவர்கள் (வினவு உட்பட) தான், இதை கச்சத்தீவு பற்றியதாகவும் கூட திரிக்கின்றனர். கச்சத்தீவு இன்று இலங்கையின் பிரதேசம் என்பதை, இனவாதிகள் மறுப்பதன் மூலம் அத்துமீறி மீன்பிடிப்பதை இதனூடாக குறிப்பாக நியாயப்படுத்துகின்றனர்.
Last Updated on Thursday, 10 February 2011 09:25
"சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது."என்ற உண்மை, இனவாதத்தை பேசுவதற்கும், அதனை பாதுகாப்பதற்குமான அரசியல் அரணல்ல. மக்களைச் சார்ந்து இருக்காத எல்லா நிலையிலும், இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கு எதிராகவே அது இருந்துள்ளது. "பிரிக்க முடியாத உறவு" மக்களின் வாழ்வை மேம்படுத்தி, அதை வாழவைக்கவில்லை. போராட்டத்தை வளர்க்கவில்லை. மாறாக அதை அழித்தது. "பிரிக்க முடியாத உறவு" வர்க்கம் கடந்ததல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் போராட்டம் நடந்து இருந்தால், பின்தளத்தை பயன்படுத்தல் என்பது வர்க்கம் சார்ந்து கேள்விக்குள்ளாகியேயிருக்கும். தமிழன் என்ற வர்க்கமற்ற நிலையில்தான் "பிரிக்க முடியாத உறவு" அரசியல் இனவாதத்தில் முகிழ்கின்றது.
Last Updated on Tuesday, 08 February 2011 09:28
எந்த ஒரு விடையத்தையும் தங்கள் குறுகிய அரசியலுக்கு ஏற்ப குறுக்கிக் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால், உண்மை விடையம் திரிபடைந்துவிடும். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். "கேட்பதற்கு நாதியற்ற நிலையில் மக்களும் நவீன அடிமைச் சின்னமாக மாற்றப்பட்டு விட்டார்கள். ஈழ நிலவரம் இவ்வாறு இருக்க எஞ்சியிருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள்தான். நீண்டகால அரசியல் நோக்கில் ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாகவும் இருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் பிளவுபடுத்தும் நீண்டகால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு." என்கின்றார் இனியொரு கட்டுரையாளர் அகில். இனியொரு சபா நாவலன் என்ன கூறுகின்றார் "தமிழ் நாட்டு மீனவர் கொலைகளின் பின்னணியிலும் இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களின் அரசியல் பொதிந்திருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்று." என்கின்றார்.
இவர்கள் தொடர்ந்து சொல்ல வருவது எல்லை கடந்த இந்திய மீனவர்களினால், இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதாகும்.
1. இது ஈழப் போராட்டத்துக்கு உதவிகரமானது.
2. எல்லை கடந்த தமிழக மீனவர்கள் என்ற வர்க்கமற்ற தங்கள் இனம் சார்ந்த இனவாதக் கொள்கை, பன்நாட்டு மீன்பிடிக்கு எதிரானது.
3. சிங்கள மீனவர்கள் இலங்கை தமிழர்களின் கடல்களில் மீன்பிடித்தல் என்பது, இலங்கை தமிழருக்கு எதிரானது. தங்கள் மீன்பிடித்தல் என்பது அப்படியல்ல. அப்படி இனவாத அளவுகோல்களை முன்னிறுத்திய தர்க்கங்கள்.
Last Updated on Sunday, 06 February 2011 14:49
தமிழக மீனவர்கள் பிரச்சனையின் தனித்துவத்தை மறுப்பதுதான், தமிழக தமிழினவாத புலியிச அரசியல் உள்ளடக்கமாகும். இலங்கை இனப்பிரச்சனையை மீனவர் பிரச்சனைக்குள் உள்ளடக்கி, இலங்கை இனப்பிரச்சனையை முதன்மைப்படுத்திய தமிழினவாதம் தான் தமிழகத்து தமிழினவாதமாகும். குறிப்பாக தமிழக மீனவர்களின் (வர்க்க) அரசியல் மற்றும் சமூக பொருளாதார நலன் சார்ந்த, எந்த உள்நாட்டு அரசியலையும் கொண்டவாகள் அல்ல இவர்கள். மீனவர் படுகொலை அரசியலை முன்னிறுத்திய இனவாதம்தான், இலங்கை சார்ந்து அவர்கள் மூடிமறைத்து முன்தள்ளும் மக்கள் விரோத அரசியல். இப்படி ஒரு குறுகிய அரசியலையே, தமிழக தமிழினவாதம் முன்தள்ளுகின்றது. இது குறிப்பாக தமிழக தேசிய இன முரண்பாட்டை பேசாத, புலித்தேசிய தமிழினவாத அரசியலாகும். இந்திய மீனவர்களின் வர்க்க வேறுபாட்டையும், அவர்களின் குறிப்பான கோரிக்கையையும் மறுத்து முன்வைக்கும், குறுகிய இனவாத அரசியலாகும்.
Last Updated on Saturday, 05 February 2011 13:34