தமிழ் மக்களை அணி திரட்டிப் போராடாத, சிங்கள மக்களுள் பேசாத, ஆளும் வர்க்கங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தை வெறும் அரசியல் நாடகங்கள் தான். “காலக்கெடுவும்” “எழுத்து பூர்வமான” பதிலையும் கோரி இந்த நாடகத்தில் இருந்து விலகுவது, புலிகளின் அதே அரசியல் வங்குரோத்து தான். இரகசியமான பேரங்கள் மூலமான தீர்வு என்று நம்பிக்கை ஊட்டிய, தாங்கள் உருவாக்கிய அத்திவாரத்தை தங்களே தகர்த்து விட முன்வைத்த நிபந்தனை பேரினவாதத்துக்கு சாதகமானது. குறைந்தது இதிலிருந்து வெளியேறுவதற்கு கூட, தெரியாத குறுகிய அரசியல் முட்டாள்தனத்தைத் தான், தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டமைப்பு செய்துள்ளது.
பேச்சுவார்த்தையின் பெயரில் புலிகளின் அதே அரசியல் முட்டாள்தனத்தை செய்த கூட்டணி
- 11 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
Last Updated on Thursday, 11 August 2011 12:24
லண்டனை சூறையாடிய ஏழை அராஜகவாதிகள்
- 10 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
பிரிட்டிஸ் அரச குடும்பத்தைப் பார்த்து பண்பாட்டை வளர்க்கின்ற நாகரீக சீமான்களும் சீமாட்டிகளும், நேரெதிரான ஒரு காட்சியை காணும் வண்ணம் தன்னைச் சுற்றி ஒரு அராஜக சூழலை உருவாக்கி வைத்திருப்பதை கனவில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள். பணக்காரக் கூட்டம் மட்டும் வாழமுடியும் என்று நம்பி வாழும் நாகரீக சமூகம், ஏழைகளின் அராஜகத்தை நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். தன்னைச் சுற்றி நாகரீக சேரிகளை உருவாக்கி வைத்திருப்பது, தனது நாகரீகத்துக்கான கல்லறைகள் என்பதை எண்ணிக் கூட பார்த்திருக்கமாட்டர்கள்.
Last Updated on Wednesday, 10 August 2011 08:44
தமிழ்சேக்கிள் இணையம் மீதான தாக்குதல்
- 10 August 2011
- தமிழரங்கம்
- Section: சமகால நிகழ்வுகள் -
- சிறப்பு கட்டுரைகள்
ஞாயிறு காலை முதல் தமிழ்சேக்கிள் முற்றாக முடக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால்களுக்கு பின்பாக இந்த இணையத்தளத்தை முடக்குவதில், அதைக் கைப்பற்றி அழிப்பதற்கும் பெருமெடுப்பிலான பாரிய முயற்சி நடந்து இருப்பது இன்று அம்பலமாகியுள்ளது.
அதற்கான முயற்சியில் ஈடுபட்ட கம்பியூட்டர் இலக்கம் (ஐபி இலக்கம்) மூலம் எந்த நாட்டில் இருந்து, எந்த திகதிகளில் என்ற விபரம் அடங்கிய பட்டியலை இதில் இணைத்துள்ளோம். அதை அடையாளம் காணவும், இனம் காணவும், இது உதவும்.
Last Updated on Wednesday, 10 August 2011 06:26
"வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்
- 07 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
இலங்கை ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தை தடுக்க இனமுரண்பாட்டை ஆணையில் வைத்திருக்கின்றது. இந்த இனமுரண்பாடு இருக்கும் வரை, இலங்கையில் வர்க்கப்போராட்டம் சாத்தியமில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தை மறுக்க மார்க்சியத்தை புரட்டிப் போடுகின்றது நூல். "வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்.." என்று கூறிக்கொண்டு "சிங்கள பேரகங்காரவாதம் கோலோச்சும் வரை வர்க்கப் போராட்டப் பாதையில் இலங்கை மக்கள் அனைவரையும் இனவேறுபாடுகளை மறந்து வர்க்கப் போராட்டப் பாதையில் ஓரேகுடையின் கீழ் அணிதிரட்டுவது சாத்தியமில்லாதது. பிற மக்கள் சிலவேளைகளில் மிகத் தயக்கத்துடன் முனைந்தாலும் பௌத்த-சிங்கள பேரங்கார போதையில் மிதந்து கொண்டிருக்கும் சிங்கள மக்கள் வரமாட்டார்கள்" (பக்கம் 285) என்கின்றது. "போராட்டம் தொடரும்" என்பது, இங்கு வர்க்கப் போராட்டத்தையல்ல. அதைச் சொல்ல இடதுசாரிய சொல்லடுக்குகள், இடதுசாரிய வாதங்கள், இடதுசாரிய தர்க்கங்கள். இதன் அரசியல் பின்னணியில் "முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்கமே இன்று இலங்கையில் பிரதானமானதும் உடனடியானதுமான வேலைத்திட்டமாக அமைகின்றது" (பக்கம் 212) என்று கூறுவதன் மூலம், வர்க்க அரசியலில் இருந்து ஜனநாயகத்தை கூட பிரித்து அணுகுகின்ற வர்க்க அரசியலை நிராகரிக்கின்ற அரசியல் கோட்பாட்டை இந் நூல் முன்வைக்கின்றது.
Last Updated on Sunday, 07 August 2011 07:47
நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது
- 10 October 2007
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2007
கடன், எங்கும் கடன், மனித இனத்தின் மீதே கடன். மனித இனம் மீளமுடியாத வகையில், அங்குப்பிடியாகவே கடன் உலகெங்கும் மாறிவிட்டது. இந்த கடனோ நாடுகளையே திவõலாக்கி வருகின்றது. மக்கள் கடனைக் கட்டுவதுடன், வாழ்க்கை பூராவும் வட்டியைக் கட்டும் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். கடனில் இருந்து மீள முடியாத நிபந்தனைகள். வேடிக்கை என்வென்றால் கடனை வாங்குவது கூட, அவசியமான அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாகிவிட்டது. உதவி என்ற பெயரில், நிபந்தனைகளுடன் கூடிய கடன் வாரி வழங்கப்படுகின்றது. இந்தக் கடன், மனிதனின் சமூக சாரத்தையே உறிஞ்சி அழிக்கின்றது.
Last Updated on Friday, 05 August 2011 07:52
மகிந்தா தலைமையில் ஆடிய கிரிக்கெட்டில் தோற்றுப்போன சிங்களப் பேரினவாதம்
- 02 August 2011
- பி.இரயாகரன்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- முன்னணி -01
கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெறும் பொழுது போக்கும் அம்சமல்ல. கிரிக்கெட்டுக்கு குறுகிய மத இன சாதிய உணர்வு உண்டு. இப்படி அதற்கு ஒடுக்கும் பல உணர்வுகள் உண்டு. அப்படித் தான் அது விளையாட்டாகக் காட்டி வாழ்கின்றது. இதனால் தான் ஆளும் வர்க்கத்தால் அது போற்றப்படுகின்றது.
Last Updated on Wednesday, 03 August 2011 09:32
தனிமனிதர்கள் புரட்சியை நடத்த முடியாது
- 30 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
சமூக நடைமுறையில் இருந்து அன்னியமாகிய நிலையில் சமூகம் பற்றி எம்மளவில் நாம் சிந்தித்து மையப்படுத்திய சிந்தனைமுறையும், நாம் மட்டும் சரியாக இருக்கின்றோம் என்ற எம்மைச் சுற்றிய எம் சொந்த அனுபவம், இதைக் கடந்து கூட்டுவேலையை முன்னெடுப்பதில் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இரு பத்து வருடங்கள், பழக்கப்பட்ட ஒன்றாக இதுமட்டும் தான் எம்முன் இருந்திருக்கின்றது. என்னை அல்லது எம்மைச் சுற்றி அனைத்தையும் காணுகின்ற கடந்தகால இந்த நடைமுறை, இதைச் சுற்றி இயங்குகின்ற முரண்பாடுகளும் சுய முரண்பாடுகளும் கூட, எம்மை நாம் கடந்து விட முடியாதவர்களாக மாற்றிவிடுகின்றது. இதன் அர்த்தம் அரசியலை கைவிடுதல் அல்ல, அரசியலை ஆணையில் வைத்தல். அரசியல்தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. தனிமனித செயல்கள் அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டது. தனிமனித செயல், கூட்டுவேலைமுறை அனைத்தும் அரசியலுக்கு உட்படுத்தியதாக இருக்க வேண்டும். நாம் கடந்தகால நடைமுறையில் இருந்து கடந்து வருதல்;, மாற்றத்தின் முதல்படியாகும். எல்லாவற்றையும் மீளப் பார்க்கவும், சுயவிமர்சனம், விமர்சனம் செய்வதன் மூலமும் எம் காலடிகளை சரியாக முன்வைக்கமுடியும்.
Last Updated on Saturday, 30 July 2011 10:32
நோர்வே கொலைகார பாசிட், புலிப் பாசிட்டுகளிடமும் கற்றுக்கொண்டு நடத்திய தாக்குதல்
- 29 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
புலிகள் தங்கள் அரசியல் வழிமுறையை வலதுசாரிய முன்னுதாரணங்களில் இருந்தது மக்கள்விரோதமாக கற்றுக் கொண்டது போல், நோர்வே வலதுசாரிய கொலைகாரன் புலிபபாசிட்டுகளிடம் இருந்து தான் கற்றதை 1500 பக்கம் கொண்ட தன் கொள்கைப் பிரகடனத்தில் கூறியுள்ளான். (அதன் மூலம் மற்றும் பகுதித் தமிழாக்கம் இக் கட்டுரையின் இறுதியில் உள்ளது.)
Last Updated on Friday, 29 July 2011 11:18
ஒடுக்கும் தேசியத்தை ஒத்த ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியம் படுபிற்போக்கானது
- 28 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
தேசியம் பற்றி ஒற்றைத் துருவப் பார்வை, அரசியலை நிராகரிக்கின்றது. இனத்தை முன்னிறுத்திய படுபிற்போக்கான ஒடுக்கும் தேசியத்தின் அதே தேசியக் கூறையே மீள முன்வைக்கின்றது. தமிழ்த்தேசியம் இப்படித்தான் தன்னை வெளிப்படுத்தியது. இது ஒடுக்கும் தேசியத்தின் இயல்பில் இருந்து, ஒடுக்கப்படும் தேசத்தின் தேசிய இயல்பை தன்னளவில் கூட வேறுபட்டு தன்னை வெளிப்படுத்தியது கிடையாது. ஒடுக்கும் தேசம் சார்ந்த தேசிய உணர்வை, ஒடுக்கப்பட்ட தேசம் தன் தேசிய உணர்வாக கொண்டிருக்குமாயின், அது படுபிற்போக்கானது மட்டுமின்றி அதன் இயல்பில் இருந்தே தோற்றுப்போகும். இது தான் இலங்கையில் நடந்தது.
Last Updated on Thursday, 28 July 2011 21:06
எமது பிரச்சாரமும், எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமும்
- 26 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
முன்னேறிய நிலையில் எமது கருத்து ஆதிக்கமும், அதை முன்வைக்கும் திறனும், எமது செயல்பாட்டில் இல்லை. அதுபோல் எமது அமைப்பின் ஒட்டுமொத்த ஒரு கூறாக இது முன்னேறிவிடவில்லை. இது எம்மைச் சுற்றி அரசியல் எதார்த்தம். இது உள் மற்றும் வெளி முரண்பாடுகளை உருவாக்குகின்றது.
நாம் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது, எதிர்ப்பிரச்சாரத்தை நாம் எதிர்கொண்டாக வேண்டும். அதை முறியடிக்கும் அரசியற்பலத்தை நாம் பெற்றிருக்கவேண்டும். எமது பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாதபோது, எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரம் தன்னை மூடிமறைத்துக் கொண்டும், தன்னை சார்பானதாக நிறுத்திக்கொண்டும், ஒரு இடைவெளியை உருவாக்கி அதன் ஊடாக எதிர்ப்பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றது. இன்று பொதுவில் பலதரப்பும் எம்மை நோக்கிக் கூறுவது, உங்கள் கருத்துக்கள் எல்லாம் சரி, ஆனால்? என்றவாறு ஏதோ ஓன்றை எப்போதும் கூற முற்படுவதன் மூலம் தான் எதிர்ப்பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றனர். கருத்தியல்ரீதியாக இதை எதிர்கொள்ள அவர்களால் முடிவதில்லை. நாங்கள் வெளிப்படுத்தும் கருத்து சரி என்பவர்கள், அதை தம்மளவில் கூட முன்னெடுப்பதில்லை. இப்படி எதிர்ப்பிரச்சாரம் கருத்துக்கு வெளியில் அமைகின்றது.
Last Updated on Tuesday, 26 July 2011 15:32
தேர்தல் மூலம் தமிழ்மக்களை தோற்கடிக்க முனைந்து, தோற்றுப்போன பேரினவாதம்
- 24 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
யுத்தத்தில் வென்றவர்கள், தமிழ்மக்களை வெல்லவில்லை. யுத்தத்தில் வென்றவர்களை, தமிழ்மக்கள் மீளத் தோற்கடித்து இருகின்றார்கள். புலிகள் தான் அனைத்துப் பிரச்சனையும் என்றவர்கள் முன், இன்று தமிழ்மக்கள் பிரச்சனையாகியுள்ளனர். இனங்களுக்கு இடையில் அமைதியும், சமாதானமும் தோன்றிவிட்டது என்று கூறியது எங்கும் பொய்யாகியுள்ளது. வடக்கின் "வசந்தம்", கிழக்கின் "உதயம்" என்ற மகிந்தவின் பாசிசச் சிந்தனைக்கு, செருப்படி கிடைத்திருக்கின்றது.
Last Updated on Sunday, 24 July 2011 09:28
தேசியத்தின் பின் காணாமல் போன இடதுசாரியம்
- 21 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
குறுந்தேசியம் - பேரினவாத தேசியம் இவ்விரண்டுக்கும் பின்னால் இடதுசாரியம் காணாமல் போனது. முரணற்ற தேசியத்தையும், அதனடிப்படையிலான சுயநிர்ணயத்தையும் உயர்த்தி மக்களை சார்ந்து நிற்கத் தவறியது. இந்த இடதுசாரியம் குறுகிய இனவாதிகளின் பின் மக்கள் நிற்பதாக கூறிக் கொண்டு, இனவாதிகளுக்கு ஏற்ற அரசியலை முன்னெடுத்துக்கொண்டு, மக்கள் போராட்டத்தை இல்லாதாக்கியது. இந்த அடிப்படையிலான இடதுசாரிய அரசியலே இன்னமும் தொடருகின்றது. இதன் விளைவாக இன்று வரை புலம் - தமிழகம் - இலங்கை என்று எங்கும், இனவாதிகள் தான் தீர்மானகரமான சக்திகளாக தொடர்ந்து நீடிக்கின்றனர்.
Last Updated on Thursday, 21 July 2011 19:08
1983 யூலை இனப் படுகொலை மூலம், தமிழ்மக்களை அழித்த இந்தியா
- 24 July 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
1983 இனக்கலவரம் தான், இந்தியாவின் திட்டமிட்ட இனவழிப்பாக மாறியது. உடனடியாக பேரினவாதத்தால் இனம் சூறையாடப்பட்டது ஒருபுறம், நீண்டகால அடிப்படையில் இந்தியாவால் திட்டமிட்டு சூறையாடப்பட்டது மற்றது.
1983 யூலை இனப்படுகொலை என்பது, 1983ம் ஆண்டு மீண்டும் நடந்த ஒரு இனக்கலவரம். 1977, 1981 க்கு பின், பேரினவாதம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இனக்கலவரத்தை, மீண்டும் தமிழ் மக்கள் மேல் அரசு ஏவியது. சிறைக்கைதிகள் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்களை, தமிழன் என்ற ஓரே காரணத்தினால் பல தளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். ஆம் ஒரு படுகொலை. எந்த நீதி விசாரணைக்கும் உள்ளாகாத படுகொலை.
Last Updated on Friday, 22 July 2011 19:13
குறும் தேசியத்துக்குள் (புலிக்குள் - கூட்டமைப்புக்குள்) தேசியக் கூறு உள்ளதா!? இருப்பதாக கூறும் அரசியல் ஏது?
- 19 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
தேசியம் வர்க்கம் கடந்த அரசியல் கூறல்ல. வர்க்கம் சார்ந்ததாக தேசியம் உள்ள வரை புலி - கூட்டமைப்பு அரசியல் முன்வைக்கும் "தேசியமோ" தேசியமேயல்ல. தேசியம் பற்றிய வர்க்கக் கண்ணோட்டம் மிகத் தெளிவாக தேசியம் என்றால் என்ன என்பதை வரையறுக்கின்றது. இப்படியிருக்க, தான் அல்லாத வர்க்க அரசியலின் பின் தேசியமும் தேசிய சக்திகளும் இருக்கின்றது என்று கூறுவது மோசடியல்லவா? இது வர்க்கம் கடந்த ஒன்றாக தேசியத்தை புனைகின்ற, பொதுப்புத்தி சார்ந்து முன்தள்ளும் இடதுசாரிய அரசியல் புரட்டாகும். அரசியல் வெற்றிடத்தில் (புரட்சிகர சக்திகள் கையில் எடுக்காத அரசியல் வெற்றிடத்தில்) இது எதிர்புரட்சி அரசியலாகத் தொடருகின்றது.
Last Updated on Tuesday, 19 July 2011 08:36
மக்களை மிரட்டி வெல்லமுனையும் தேர்தல் பயங்கரவாதம்
- 18 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
மக்களை வகைதொகையின்றி கொன்று யுத்தத்தை வென்ற அரச பயங்கரவாதம், மக்களை மிரட்டி வெல்லமுனையும் தேர்தல் பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. எங்கும் எதிலும் வடக்கின் "வசந்த"மாகி விட்ட அரச பயங்கரவாதமும், அது வழிகாட்டும் தேர்தல் "ஜனநாயக"த்தின் வெட்டுமுகமும் வன்முறைதான். மகிந்த வழங்கிய வடக்கின் "வசந்தமும்", தேர்தல் "ஜனநாயகமும்" எது என்பதை, தங்கள் சொந்த நடத்தைகள் மூலம் அவர்களே வெளிப்படுத்துகின்றனர்.
Last Updated on Monday, 18 July 2011 09:10
1983 யூலை 23-இன் இனப் படுகொலையும்..! 2011 யூலை 23-இல் தேர்தல் என்னும் ஜனநாயகக் கொலையும்..!!
- 17 July 2011
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
1983 யூலை 23-இல் தமிழினம் மீது, சிங்கள அரச பேரினவாதம் நடத்திய வன்முறையை ஒத்ததுதான், 2011 யூலை 23-இல் நடக்கவுள்ள தேர்தல் என்ற "ஜனநாயக" கூத்து. இதே நாளில் தமிழினத்தை தேர்தல் மூலம் அடிமைகொள்ள சபதம் ஏற்று, இந்தப் பேரினவாதம் பாசிசமயமாகி கொக்கரிக்கின்றது. தேர்தல் "ஜனநாயகம்" என்ற தங்களின் போலி "ஜனநாயக"த்தைக் கூட, தமிழ் மக்கள் சுதந்திரமாக அனுபவிக்கக் கூடாது என்பதுதான் மகிந்தவின் இனவாதச் சிந்தனையாகும்.
Last Updated on Sunday, 17 July 2011 20:50
சிவத்தம்பியின் அறிவுசார் புலமையும், அதில் மிதக்க முனையும் பச்சோந்திகளும்
- 16 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் ஓன்றை ஒன்று பெருக்கி நேராவது போல்தான், சமூகத்தில் எதிர்மறைகள் ஒன்று சேர்ந்து தம்மை நேராக்குகின்றது. அரசியல் - இலக்கிய பச்சோந்தித்தனமும், சிவத்தம்பியின் அறிவும், எதிர்மறையானது மட்டுமல்ல, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவை ஓன்றையொன்று சார்ந்து, தம்மை நேர்மையானதாகவும், நாணயமானதாகவும் காட்ட முனைகின்றது. அண்மையில் மரணமான சிவத்தம்பியின் மரணம் தரும் இயல்பான துயரங்கள் ஒருபுறம், மறுபக்கத்தில் மரணத்தை முன்னிறுத்தி தம்மை அடையாளப்படுத்த முனையும் அரசியல் - இலக்கிய முயற்சிகள். வழமை போல் மரணம் மூலம் தம்மை முன்னிறுத்த முடியாது போன கவலைகளும், கோபங்களும் பலருக்கு. அரசியல் - இலக்கிய பிழைப்பை நடத்த முடியாத அளவுக்கு, அவரை நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். இருந்த போதும் அவரின் புலமையை முன்னிறுத்தி, அரசியல் சிணுங்கியபடி வெளிவந்தது. இது அவரின் புலமையற்ற நடைமுறை வாழ்வுசார் அரசியலுக்கு வெளியில் தான், அவரின் புலமைசார் தமிழ் - இலக்கியம் உள்ளதாக காட்ட முற்படுகின்றது.
Last Updated on Monday, 18 July 2011 18:33
"பிற்போக்கானதும், அடைய முடியாததுமான" கோசமா "தமிழ் ஈழம்"! இது கேலிக்குரியது
- 13 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
சுயநிர்ணயத்தை வரையறுக்கும் அரசியல்ரீதியான உள்ளடக்கம், என்றும் பிற்போக்கானதல்ல, அடையமுடியாதல்ல. இந்த வகையில் தமிழீழம் இதற்கு உட்பட்டது. இங்கு எந்த வர்க்கம் இதைத் தன் கையில் எடுக்கின்றது என்பதுதான், புரட்சிகரமானதா எதிர் புரட்சிகரமானதா என்பதைத் தீர்மானிக்கின்றது. இதற்குரிய அரசியல் சாத்தியப்பாட்டையும், அதன் அரசியல் போக்கையும் கூட இதுதான் தீர்மானிக்கின்றது. இங்கு இதன் வர்க்க அரசியல் தான் இதை வரையறுக்கின்றது.
Last Updated on Wednesday, 13 July 2011 10:37
"தமிழ் ஈழ" கோரிக்கையும், மணியண்ணையின் புரட்டும் - (மணியத்தின் அரசு ஆதாரவு அரசியல் - 02)
- 12 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
புலிகளின் வதைமுகாம் அனுபவத்தை, புலியெதிர்ப்பு அரசுசார்பு ஊடகமான தேனீயில் மணியண்ணை தொடர்ந்து எழுதி வருகின்றார். அதில் அவர் "தமிழ் ஈழ" கோசம் காரணமாகத் தான் "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி"யில் இருந்து விலகினேன் என்று கூறுவது, அரசியல் ரீதியான புரட்டு. இதனால் தான் "நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம்" என்று எழுதும் மணியண்ணை, அந்த "நாம்" யார்? அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் இப்போது எங்கே? அவர்கள் செய்த அரசியல் தான் என்ன? என்று கூறுவாரா? இங்கு "தமிழ் ஈழ" கோசத்தால் தான் தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகினேன் என்ற அரசியல் புரட்டும், அதனூடு சந்தர்ப்பவாத அரசியலையும் முன்வைக்கின்றார். "நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன்." என்று எழுதும் அவர், இந்த கொள்கையின் அடிப்படையில் அவர் செயல்பட்ட அரசியல் நடைமுறைகளும், அவர் கொண்டிருந்த கருத்துகளும் தான் எவை எனக் கூறவேண்டும்.
Last Updated on Tuesday, 08 November 2011 08:09
உணர்வும் உணர்ச்சியும் கொள்ளாத அரசியல், சமூக மாற்றத்துக்குரிய செயலை மறுக்கின்றது
- 09 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
நிகழ்வுகள் மேல் அந்தக் கணமே உணர்வுபூர்வமான உணர்ச்சியுடன் வழிகாட்ட முடியாத செயலற்ற தனம்தான், செயலுக்கு எதிரானது. சமூக மாற்றத்துக்குரிய அரசியலை இது இன்று இல்லாதாக்குகின்றது. இது எம்மைச் சுற்றிய அரசியலாக எங்கும் காணப்படுகின்றது. காலம்கடந்த பின்னான விமர்சன முறைமையே, அறிவுசார் உலகத்தின் பொதுப்பண்பாக மாறியுள்ளது. வலதுசாரியம் சமூகத்தில் இயங்குகின்ற வேகத்தில், அது கருத்துகளை உருவாக்கும் வேகத்திலும் இடதுசாரியமில்லை. இது இடதுசாரிய அரசியல் போக்கில், சந்தர்ப்பவாத அரசியலாக வெளிப்படுகின்றது.
Last Updated on Saturday, 09 July 2011 08:02
"வர்க்க ஆய்வு", "குறிப்பான சூழ்நிலை ஆய்வு" என்று படம் காட்டி செய்யும் புலி அரசியல்
- 07 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
இனியொருவும்-புதியதிசையும் தங்கள் திடீர் அரசியலுக்கு ஏற்ப, தாங்கள் புலியுடன் நடத்தும் புலி அரசியலுக்கு ஏற்ப, புலியைப் புரட்சிகரமானதாக காட்ட, புலியைத் திரிக்கின்றனர். அதே நேரம் புலி மூன்றாகப் பிரிந்து கிடப்பதாக படம் போட்டுக் காட்டுகின்றனர்.
"தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்" என்ற அரசியல் உள்ளடக்கத்தில், புலிகள் எதார்த்தத்தில் பிரிந்து இருக்கின்றனரா? எனில் இல்லை. அரசியல் ரீதியாக, நடைமுறைரீதியாக "நேர்மையான" தேசியத்தை முன்னிறுத்தி, மற்றைய இரு போக்குகளையும் விமர்சிக்கின்ற புலித் தேசியவாதிகள் அணி என எதுவும் தன்னை எதார்த்தத்தில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. தங்கள் புலி அரசியலுக்கு ஏற்ப, கற்பனையில் புலிக்குள் இந்த அணியுடன் தான் தாங்கள் அரசியல் செய்வதாகக் கூறி அதற்கு படம் போட்டுக் காட்டுகின்றனர்.
Last Updated on Thursday, 07 July 2011 10:59
சமகால அரசியலில் பச்சோந்தி வேஷம் போட்ட ஒரு பாசிட்டே 'மாமனிதன்" சிவத்தம்பி
- 01 May 2006
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2006
நாம் 'மாமனிதன்" என்று பட்டம் கொடுத்தமைக்காக மன்னிக்க வேண்டும். பட்டம் பதவிக்காகவே அன்றாடம் குலைத்து வாழும் அவரை, இதற்காக நாம் அவரை பெருமைப்பட சிறப்பிப்பது தவறானதல்ல. அவர் ஆசைப்பட்டு கடந்தகாலம் ழுழுக்க கட்டிப் பாதுகாத்து வந்த இந்த அரசியல் இலட்சியக் கனவை,
Last Updated on Thursday, 07 July 2011 05:43
புலிகளின் ஒரு பேப்பர் எதைச் சொல்லுகின்றதோ, அதைத்தான் மகிந்த செய்தார் செய்கின்றார்
- 03 July 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
மனித படுகொலைகளுக்கும், மக்கள் மேலான வன்முறைக்கும், புலிகளா இலங்கை அரசா வழிகாட்டி என்று கேட்டு பட்டிமன்றம் நடத்தலாம். ஒன்றையொன்று மிஞ்சிய, மிஞ்சுகின்ற மனிதவிரோதிகள்தான் இவர்கள். புலிகளின் வன்னித் தலைமையின் அழிவின்பின், புலத்துப் புலிகள் அதை நிறுத்திவிடவில்லை. வன்முறையை ஏவுகின்றனர். அதை நியாயப்படுத்தியும், வன்முறையை தொடரும்படியும் புலிகளின் "ஒரு பேப்பர்" எழுதுகின்றது. பார்க்க "ஒரு பேப்பர்"ரை.
Last Updated on Sunday, 03 July 2011 21:43
More Articles...
- அரசு வெட்டி நீக்காத முழுமையான வீடியோ காட்சியும், அரசின் போலி வீடியோவும்
- காத்தான்குடி இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் சிறுமிகளைக் குதறியது
- ஜனநாயகம் என்றால் என்ன?
- 'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது
- புலிகள் திருந்திவிட்டனராம்! புலியைப் பூனையாக்கும் இடதுசாரிய கோயபல்சுகள்
- புலிகள் செய்த குற்றங்கள் தற்காப்பு நிலையிலானதா!? கையறு நிலையிலானதா!?
- தீபம் தொலைக்காட்சியில் கருத்துச் சொன்னவர் மீது புலிகள் நடத்திய தாக்குதல்!!
- பிரபாகரனையும், பிரபாகரன் குடும்பத்தையும் சித்திரவதை செய்து கொன்ற காட்சியை புலிகள் தயாரிப்பதாக அரசு கூறுகின்றது.
- ஒடுக்குவதன் மூலம் தான், மகிந்த சிந்தனை வாழமுடியும்
- பெண்கள் மேல் பேரினவாதம் நடத்திய பாலியல் யுத்தம்