வன்னி திறந்தவெளிச் சிறைமுகாம், அகதிகள், தமிழ்மக்கள் நலன் என்று, புலிப்பினாமிகளின் உளறல்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இந்தப் பினாமிகள் தங்களிடம் குவித்து வைத்துள்ள பொதுச்சொத்தை, தங்களுடையதாக்க தமிழ்மக்களைச் சொல்லி நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றனர். தமிழ்மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இதில் இருப்பதில்லை.
புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!
- 02 August 2009
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2009
Last Updated on Thursday, 24 November 2011 20:59
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்
- 17 November 2011
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயகம் -
- 2011
அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப் பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னாஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, "கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
Last Updated on Thursday, 17 November 2011 21:42
ஏகாதிபத்தியம், தேசியம் தொடர்பான விவாதத்துக்கான சில கேள்விகள்
- 30 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
"கடாபி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியா?" என்று கேட்டு, அதை மறுத்து இலக்கியா எழுதியுள்ளது, அரசியல்ரீதியான கல்வியின் அவசியத்தை பரந்தளவில் முன்னிறுத்தி இருக்கின்றது. வலதுசாரியமல்லாத பொது அரசியல் தளத்தில் இந்த அரசியலே உள்ளதும், கடாபியை தேசியவாதியாக, ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியாக, மக்கள் நலம் சார்ந்த ஏதோ ஒருவராக காட்டப்படும் விம்பங்கள் முதல் அதை ஒட்டிய அரசியல் கோட்பாடுகள் மீதான விவாதத்தை இது கோருகின்றது. நான் இதையொட்டி இரண்டு கட்டுரைகளை முன்பே எழுயிருந்தேன்.
1. லிபியா சர்வாதிகாரியும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களும்
2. கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.
Last Updated on Sunday, 30 October 2011 10:38
புலிக்கு எதிராக இருத்தல் தான் புரட்சிகரமானதாம்!
- 28 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
இப்படி இடதுசாரியத்தின் பெயரில், மார்க்சியத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் சிலர் இன்று அரசியல் செய்கின்றனர். புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரியவர்களின் ஓரு பகுதியினர், புலிக்கு எதிராக இருக்கும் அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் இயங்குகின்றனர். புலியை மக்களின் முதன்மை எதிரியாக காட்டிக் கொள்வதன் மூலம், அரசு தான் அந்த எதிரியை ஓழித்ததாக கூறிக்கொண்டு, அரசின் பின் நின்று கூச்சல் எழுப்புகின்றனர். புலியை அரசுக்கு வெளியில் வேறு எந்த வகையிலும் ஓழித்திருக்க முடியாது என்றும், இதை மறுப்பது எதார்த்தத்தைக் கடந்த ஓன்று என்றும் கூறுகின்ற தர்க்கத்தைக் கொண்டும், அழித்தொழிப்பு அரசியலை தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.
Last Updated on Friday, 28 October 2011 11:14
கடாபி என்றும் எப்போதும் ஏகாதிபத்திய கைக்கூலியே ஒழிய, ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் அல்ல.
- 24 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
இன்று கடாபியைக் கொன்றவர்களும் ஏகாதிபத்திய கைக்கூலிகள் தான். கடாபி கொல்லப்பட்டது, லிபியா மக்களால் அல்ல. ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தம் மூலம் தான் கடாபி கொல்லப்பட்டான். கடாபிக்கு எதிரான லிபிய மக்களின் கோபங்களை, தங்கள் கைக்கூலிகள் தலைமையில் மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆயுதபாணியாக்கியது. இதை வான்வெளித் தாக்குதல் மூலம் ஒருங்கிணைத்து, தரைவழியாக தலைமை தாங்கியதன் மூலம் கடாபியின் கதையை முடித்தன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். இதற்காக ஐ.நா தீர்மானத்தை தனக்கு ஏற்ப திரித்தும், வளைத்துப் போட்டும், தனக்கு எதிரான முரண்பட்ட ஏகாதிபத்திய நாடுகளுடன் ஒரு ஏகாதிபத்திய யுத்தத்தை நடத்தி முடித்திருக்கின்றது.
Last Updated on Monday, 24 October 2011 17:08
யாழ் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்ட "இடதுசாரிய" ஒட்டுண்ணி அரசியல்
- 23 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
புலியை தேசியத்தின் பேரில் ஆதரித்த "இடதுசாரியம்" போல் தான், புலிக்கு எதிராக தேசியத்தை எதிர்த்த "இடதுசாரிய" அரசியலும். இதன் அரசியல் சாரம் என்பது மக்களைச் சார்ந்ததல்ல. தனக்கென சொந்தமாக எந்த அரசியலுமற்றது. புலி எதிர்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. புலிக்கு எதிரான அனைவரையும் சார்ந்து நின்று தன்னை வெளிப்படுத்துகின்றது. இது அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை சோரம் போனது. தன்னைத்தான் "மார்க்சியவாதியாகவும்", "ஜனநாயகவாதியாகவும்" கூறிக்கொள்ளும் இந்தப் பிரிவு, புலிக்கு எதிராக அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னை இனம் காட்டுகின்றது. இதைத் தாண்டி அதனிடம் வேறு மக்கள் சார்ந்த கோட்பாடோ, நடைமுறையோ கிடையாது.
Last Updated on Sunday, 23 October 2011 09:52
"துரோகி" என்ற முத்திரை குத்திய புலி அரசியலைப் போலவே, "புலி" என்ற முத்திரை குத்தும் அரசு அரசியல்
- 19 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
சமூகவிடுதலைக்கான அரசியலை மறுக்க, அரசு - புலி இரண்டும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் கையாளுகின்றன. 16.10.2011 அன்று கனடாவில் செல்வியை முன்னிறுத்தி நடந்த நினைவுக் கூட்டத்தை கொச்சைப்படுத்தி, செல்வியை கொலை செய்த புலிகளே தாமே தமக்கு எதிராக இக் கூட்டத்தை நடத்தியதாக கூறியுள்ளனர். அதை அவர்கள்
"செல்வியைக் கொலை செய்தவர்களின் பினாமியாகச் செயற்படும் சிலரே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்கள் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ... கூட்டத்தில் பங்குபற்றாது, தமது நிலைப்பாட்டை கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கிவிட்டு விலகிக் கொண்டார்கள். பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது."
என்று கூட்டத்தை புலிகள் பாணியில் முத்திரை குத்துகின்றனர்.
Last Updated on Wednesday, 19 October 2011 12:55
செல்வி முன்னெடுத்த அரசியலை முன்னிறுத்தாத அனைத்தும் நேர்மையற்றவை
- 16 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
செல்வியை நாம் நினைவுகூர்வது, அவர் கொண்டிருந்த அரசியலுக்காகத்தான். இதனால் தான் அவர் இறுதியாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் போராட்டம் புலிக்கு எதிராக மட்டுமல்ல, தான் இருந்த இயக்கத்துக்கு எதிராகவும், அந்த இயக்கத்துடன் தொடர்ந்து இருந்த தன் காதலனுக்கு எதிராக, அவரின் போராட்டம் எந்தவிதமான சரணடைவுக்கு விட்டுக்கொடுப்புக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது.
இந்த நிலையில் நாம் எதற்காக இன்று செல்வியை முன்னிறுத்துகின்றோம்? இந்த நோக்கம் கூட செல்வியின் அரசியல் நோக்கத்தை கடுகளவும் சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பலர் பல காரணங்களைக் காட்டி, தங்கள் நோக்கத்துக்கு ஏற்ப செல்வியை குறுக்கிக் காட்டிவிட முனைகின்றனர்.
Last Updated on Wednesday, 19 October 2011 12:56
செங்கொடியின் தற்கொலை அரசியலும், சந்தர்ப்பவாத அரசியலும்
- 02 September 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
தற்கொலை அரசியலை கேள்விக்கு உள்ளாக்காத சந்தர்ப்பவாத அரசியல், போராட்டங்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றது. தற்கொலை மூலம் வீங்கி வெம்பும் உணர்ச்சி அரசியல், அறிவுபூர்வமான அரசியலை புதைகுழிக்குள் அனுப்புகின்றது. அரசியல்ரீதியாக தற்கொலை போராட்டத்தை "உத்வேகப்படுத்துகின்றது" என்றால், எந்த வகையான போராட்டத்தை அது உத்வேகப்படுத்துகின்றது. அறிவுபூர்வமான வர்க்கப் போராட்டத்தையா!? அல்லது உணர்ச்சி சார்ந்த குட்டிபூர்சுவா வர்க்கம் சார்ந்த வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியலையா!?
Last Updated on Friday, 02 September 2011 09:33
தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா!?
- 31 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
மக்கள் போராடியதால் தான் நீதிமன்றம் தூக்கை நிறுத்தி வைக்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது என்று கூறினால், இதே காரணத்தைக் கொண்டு இந்திய நாடாளுமன்றம் அண்ணா ஹசாரேயின் ஜோக்பாலலின் ஒரு பகுதியை ஏற்றதாக கூறலாம். இரண்டும் மக்கள் போராட்டத்தை திசைதிருப்பும் முடிவுகளும், தீர்ப்புகளுமாகத் தான் வழங்கப்பட்டது. இதை மக்களின் வெற்றி என்று கொண்டாடுவது, இதை முதல் வெற்றி என்று சொல்வது, மக்களை திசைதிருப்புவதாகும்.
Last Updated on Wednesday, 31 August 2011 12:54
செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பவர்களை மீண்டும் தண்டிக்க தூக்கு!
- 29 August 2011
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
அப்பாவிகளுக்கு குற்றவாளிகள் வழங்கிய தீர்ப்பு இதுதான். இந்தத் தூக்குத் தண்டனை, செய்த குற்றத்துக்கானதல்ல, செய்யாத குற்றத்துக்கானது. எந்த ஆதாரங்களும் இன்றி, சித்திரவதைகள் மூலம், தடா என்ற மனிதவிரோத திடீர் சட்டத்தின் கீழ்தான், பேரறிவாளன் - முருகன் - சாந்தனை குற்றவாளிகளாக்கி தூக்குத் தண்டனை வழங்கினர். இந்த வழக்கில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்களினதும், அவர்களின் வழக்கறிஞர்களின் வாதங்களையும் கருத்தில் எடுக்காது, தன் பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக வழங்கப்பட்ட கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்புத்தான் இந்த மரணதண்டனைத் தீர்ப்பு. 20 வருடங்களுக்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு சிறைகளில் கொடிய வதைகளை அனுபவித்தவர்களை, மீண்டும் கொல்வதன் மூலம் அரசியல் செய்ய முனைகின்றது இந்திய வல்லாதிக்க அரசு.
Last Updated on Monday, 29 August 2011 15:47
முரண்பாடான தனது சர்வதேச சக்திகளுக்கு எதிரான அரசியல் சூதாட்டம்தான், அவசரகாலச் சட்ட நீக்கம்
- 29 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
தனக்கு எதிரான உலக முரண்பாட்டுக்கு தீர்வுகாண முனையும் அரசு, அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுகின்ற ஒடுக்குமுறைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஒடுக்கியாள சர்வதேச முரண்பாடுகளைச் சார்ந்து தன்னை இராணுவமயப்படுத்துகின்றது இலங்கை அரசு. இதற்காக பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டை, தனக்கு ஏற்ற அரசியல் சூதாட்டமாக்குகின்றது.
Last Updated on Monday, 29 August 2011 09:01
கூடிச் சதி செய்த குற்றவாளிகள், வழங்க முனையும் தூக்குத்தண்டனை
- 28 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
இலங்கை இனப்பிரச்சனையின் பின்னணியில் ராஜீவ் மட்டும் கொல்லப்படவில்லை. சில இலட்சம் பேர் கொல்லப்பட்டவர்கள் இருக்க, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் தண்டனை என்பது எப்படி நீதியாக இருக்கும்? இந்தத் தண்டனைக்குப் பின்னால் கையாளப்பட்ட சட்ட நடைமுறைகள் அனைத்தும், நீதியைக் கேலி செய்கின்றது. ஒரு கட்டைப் பஞ்சாயத்து மூலம், குற்றமற்றவர்கள் குற்றவாளியாக்கப்பட்டனர். இதற்காகவே தடாச் சட்டத்தின் கீழான விசாரணையையும் தண்டனையையும் வழங்கினர். இந்த தடாச் சட்டம் தொடர்ச்சியாக சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தியதை அடுத்து, நீக்கப்பட்டது என்பது மற்றொரு கதை.
Last Updated on Sunday, 28 August 2011 20:26
வடக்கில் பாலியல்ரீதியான நுகர்வுவெறி சமூக சீரழிவாகின்றது
- 24 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
தேவை கடந்த ஆடம்பரமும், வரைமுறையற்ற நுகர்வுவெறியும பாலியலிலும் (செக்ஸ்) அவற்றைக் கோருகின்றது. நுகர்வைக் கடந்த வாழ்க்கை நெறிமுறையை, சமூகம் இழந்துவிட்டது. பெருந்தொகையான பாடசாலை மாணவிகளின் கர்ப்பங்கள் கண்டு அதிர்ந்து போகும் சமூகப் பரிமாணங்கள், இதைக் குறுக்கிக் காட்டுகின்றனர். தேவை கடந்த மிதமிஞ்சிய அனைத்து நுகர்வின் பொதுவெளிப்பாட்டில் உள்ளடங்கித் தான், அது பாலியல் நுகர்வாக வெளிப்படுகின்றது. உலகில் எங்குமில்லாத அளவில், வடிவில் அது வெளிப்படுகின்றது.
Last Updated on Wednesday, 24 August 2011 09:17
மோசடிக்காரன் அன்னா ஹசாரேவுக்கு பின்னால் படித்த பகுத்தறிவற்ற முட்டாள்கள்
- 21 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
மோசடிக்காரன் அன்னா ஹசாரே ஊழல் என்று சொல்வது எதை? இதன் மூலம் யாருக்கு சேவை செய்கின்றார்? இந்த அடிப்படையில் இதை அணுகாதவரை, இதன் பின் மூடிமறைத்துள்ள சூக்குமத்தை விளங்கிக்கொள்வது என்பது, விளக்கிக் கொள்வது என்பது சிரமமானது. இங்கு "ஊழல் எதிர்ப்பு" என்பது, மூலதனத்திடம் ஊழல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோருகின்றது. இதற்குச் சிறப்பு சட்டம் தேவை என்பதை கூறாது, ஊழல் எதிர்ப்பாக மக்கள் உணர்வுகளை திருடி முன்வைக்கின்றது.
Last Updated on Sunday, 21 August 2011 17:49
மக்கள் மத்தியில் வேலை செய்தல் எப்படி?
- 20 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
வர்க்க அரசியல் முன்வைக்கும் தனிநபர்கள் முதல் கட்சிகள் வரை, மக்களை அணிதிரட்டி போராட முடிகின்றன்றதா எனின் இல்லை. விருப்பங்கள் நடைமுறையாவதில்லை. இதற்கான செயல்பாடுதான், வர்க்க அரசியலின் நடைமுறையாகின்றது. சரியான வர்க்கப் பார்வை கொண்ட கண்ணோட்டங்கள், தானாக தன்னளவில் புரட்சி செய்யாது. மக்களிடம்; அதை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு வெளியில் மக்கள் தம்மளவில், தம் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடுகின்றனர். இப்படி இருக்க வர்க்க சக்திகள் அந்த மக்களின் நடைமுறை போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டு, ஈடுபட ஏன் முடியவில்லை என்பதை, குறைந்தபட்சம் அரசியல் விவாதமாக முன்னெடுக்காத வரை, எமது வர்க்க அரசியல் அர்த்தமற்றுப் போய் விடுகின்றது.
Last Updated on Saturday, 20 August 2011 07:59
ஊடுருவித் தாக்கும் இராணுவ அணிதான், மக்கள் கண்டு அஞ்சம் கிறிஸ் மனிதர்கள்
- 18 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
புலிகளை மட்டும் இராணுவம் ஊடுருவித் தாக்கவில்லை. இன்று மக்களையும் தான் ஊடுருவித் தாக்குகின்றது. அன்று தம்மை உருமறைப்பு செய்து புலிகள் பிரதேசத்தில் ஊடுருவிய படையணி தான், இன்று மக்களை ஊடுருவித் தாக்குகின்றது. குறிப்பாக தமிழர் அல்லாத மற்றைய சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் பொதுவான அச்சமும் பீதியும். குறிப்பாக பெண்கள் கடுமையான உளவியல் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இந்த வகையில் மலையகம், முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேசங்கள், தமிழரின் எல்லையோர கிராமங்கள் எங்கும் ஒரேவிதமான விடையங்கள், செய்திகளும் வெளியாகின்றது. அரசோ இதை வதந்தி என்கின்றது. போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் அரசு அல்லவா இது.
Last Updated on Thursday, 18 August 2011 20:29
கட்சியில் நிலவும் தவறான கருத்துகளை திருத்துவது பற்றி (மாவோ)- ஒலி நூல
- 17 August 2011
- பி.இரயாகரன்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் சமூக அரசியல் கல்விச் சுற்று – முதலாவது ஒலி நூல்
கேட்பதற்கு இங்கே அழுத்தவும்
புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் கல்விச்சுற்றாக வெளிவரும் தோழர் மாவோவின் கட்டுரை.
இப்பிரசுரத்தை PDF வடிவிலும் இங்கே தரவிறக்கலாம்.
மனித சமூகம் என்பது வர்க்கங்களால் ஆனது. அதனாலேதான் அனைத்துச் சமூகங்களிலும் மனித முரண்பாடுகள் பலவிதமாக வெளிப்படுகின்றது. இந்த நிலையில் மனிதன் மனிதனாக வாழ முற்படும்போது, எங்கும் எதிலும்; போராட்டங்கள் வெடிக்கின்றது. அவற்றுக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும்வரை அவை தொடர்கின்றது. இந்த வகையிலேதான், நாமும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக அணிதிரண்டுள்ளோம்.
Last Updated on Wednesday, 17 August 2011 22:14
பிரிட்டிஸ் வன்முறைக்கு காரணம் யார்?
- 17 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
சமூகவெட்டுகள் மூலம் பிரிட்டிஸ் ஏழைகளிடம் பிடுங்கியதை, யாருக்கு கொடுக்கின்றது இந்தப் பிரிட்டிஸ் அரசு? பிரிட்டிஸ் சமூக அமைப்பில் செல்வம் யாரிடம் எப்படி எந்த வகையில் குவிக்கப்படுகின்றது? சமூகவெட்டு மூலம் நிதியை திரட்டும் அரசு, பணத்தை பல மடங்காக குவிப்பவனுக்கு வரி விலக்குகளையும் சலுகைகளையும் அழிப்பது ஏன்? இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் தான், இந்த வன்முறையைப் புரிந்து கொள்ளமுடியும்.
Last Updated on Wednesday, 17 August 2011 09:21
சிங்கள மக்கள் மேலான தமிழக தமிழினவாதிகளின் தாக்குதல்
- 16 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
1980 களில் இந்திய அரசு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியும், ஆயுதமும் பணம் கொடுத்ததுடன், சிங்கள அப்பாவி மக்களைக் கொல்லுமாறு கோரினர். இதனடிப்படையில் இந்தியா முன்னின்று வழிகாட்ட புலிகள் அனுராதபுர நகரத்தில் 150க்கு மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். இந்தப் படுகொலை நடத்தியதற்காக இந்தியா 50 கோடி இந்திய ரூபா தந்ததாக பாலசிங்கம் பின்னால் கூறினார். இந்தத் தாக்குதல் மூலம் தான் திம்புப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா வழிகாட்ட நடந்த இது போன்ற தாக்குதல் தான், எல்லைப்புற சிங்கள முஸ்லீம் கிராமங்கள் தோறும் ஆயிரமாயிரம் சிங்கள மக்களைக் கொன்று குவிக்கவும் வழிகாட்டியது. இன்று தமிழகத்தில் சிங்கள மக்கள் மேலான தாக்குதல் இதே போன்ற இனவாதத் தாக்குதல் தான். அன்று போல் இன்றும் தமிழினத்தின் பெயரில் இவை அரங்கேறுகின்றது.
Last Updated on Tuesday, 16 August 2011 20:45
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்
- 15 August 2011
- தமிழரங்கம்
- Section: சமகால நிகழ்வுகள் -
- சிறப்பு கட்டுரைகள்
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்
23.07.2011 கொழும்பு
1. இலங்கை ஒரு நவ கொலனித்துவ நாடாகும். அதற்குரிய பொருளாதார அரசியல் சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பாதுகாக்கும் வகையில் நிலவுடைமை முதலாளித்துவக் கருத்தியல், சிந்தனை, நடைமுறைகளைக் கொண்ட ஆளும் வர்க்கம் பலமுடையதாகக் காணப்படுகிறது. அதுவே இலங்கையின் தரகு- பெரு முதலாளித்துவமாக ஆட்சியதிகாரத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக வர்க்கம், இனம், சாதி, பெண்கள் ஆகிய நான்கு தளங்களில் முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நீடித்து நிலைத்தும் வருகின்றன. இவற்றில் வர்க்க முரண்பாடு அடிப்படையானதாகவும் இன முரண்பாடு பிரதானமானதாகவும் இருந்து வருகின்றன. அடிப்படை முரண்பாடு காரணமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள், பெண்கள், அரசாங்க- தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 90 சதவீதத்தினரான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்போர் சுரண்டப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை தரகு- பெரு முதலாளித்துவ சக்திகள், சொத்து சுகம் உடையோர், அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள், இவர்களுடன் கைகோர்த்து நிற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் சுரண்டுவோராக இருந்து வருகின்றனர். அவர்களது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாம்.
Last Updated on Monday, 15 August 2011 22:02
"மகிந்த சிந்தனை" பற்றிய தத்துவார்த்த திரிபுகள்
- 15 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
சிந்தனையே அல்லாத ஒன்றை, சிந்தனையாக கூறுவதில் இருந்து தொடங்குகின்றது இந்த இடதுசாரிய திரிபும், புரட்டும். சுரண்டும் வர்க்கம் எந்த வடிவில் எப்படி மக்களை மோதவிட்டு சுரண்டி ஆள்வது என்பதை தாண்டி "மகிந்த சிந்தனை" என்று ஓன்று புதிதாக கிடையாது. இதை "மகிந்த சிந்தனை" என்று ஆளும் சுரண்டும் வர்க்கம் கூறி அழைப்பதால், இதுவொரு புதிய சிந்தனையே கிடையாது. இல்லை, இது ஒரு புது சிந்தனைதான் என்று கூறுகின்ற இடதுசாரியம், ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கை மீள திணிக்கிறது என்பது தான் இங்குள்ள அரசியலாகும்.
Last Updated on Monday, 15 August 2011 11:10
சிங்கள மக்களுடன் உரையாட முனையாத அரசியல் குறுகிய இனவாதமாகும்
- 12 August 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
தமிழ்மக்கள் தங்கள் நியாயமான உரிமைகளைப் பற்றி சிங்கள மக்களுடன் பேசாத வரை, அதன் நியாயத்தன்மையை சிங்கள மக்கள் உணரவோ புரிந்து கொள்ளவோ முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தமிழ்மக்களின் உரிமைகளை நியாயமற்ற கோரிக்கையாக சிங்கள மக்களிடம் கூறுவதை நாம் தொடர்ந்து அனுமதித்து இருக்கின்றோம். இந்த எல்லையில் தான், தமிழ் மக்களை குறுந் தமிழ்தேசியமும் கூட சிறையிட்டு இருக்கின்றது. குறுகிய இனவாதம், மற்றைய இனத்துக்கு எதிராக தன் இனத்தை அணி திரட்டுகின்றது. இதைத்தான் பேரினவாதமும், குறுந்தேசியமும் செய்கின்றது. இதற்கு எதிரான உரையாடலை, போராட்டத்தை நடத்தாத வரை, நாமும் இனவாதிகளுக்கு துணை போபவர்கள் தான்.
Last Updated on Friday, 12 August 2011 08:00
More Articles...
- பேச்சுவார்த்தையின் பெயரில் புலிகளின் அதே அரசியல் முட்டாள்தனத்தை செய்த கூட்டணி
- லண்டனை சூறையாடிய ஏழை அராஜகவாதிகள்
- தமிழ்சேக்கிள் இணையம் மீதான தாக்குதல்
- "வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை" என்று கூற வர்க்கத்தின் பெயரில் ஒரு நூல்
- நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது
- மகிந்தா தலைமையில் ஆடிய கிரிக்கெட்டில் தோற்றுப்போன சிங்களப் பேரினவாதம்
- தனிமனிதர்கள் புரட்சியை நடத்த முடியாது
- நோர்வே கொலைகார பாசிட், புலிப் பாசிட்டுகளிடமும் கற்றுக்கொண்டு நடத்திய தாக்குதல்
- ஒடுக்கும் தேசியத்தை ஒத்த ஒடுக்குமுறைக்கு எதிரான தேசியம் படுபிற்போக்கானது
- எமது பிரச்சாரமும், எமக்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமும்