பி.இரயாகரன் -2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் நாட்டில் இதை அமுல் செய்யும் வண்ணம் ஜனாதிபதி மாடு வெட்டுவதை "மிருகவதை"யாக கூறியதுடன், இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி கூறி இருக்கின்றார். தான் மாட்டு இறைச்சியை உண்பது இல்லை என்று கூறியவர், மாட்டு இறைச்சியை உண்ண விரும்புகின்றவர்கள் இறக்குமதி செய்து உண்ணும் படி கூறுகின்றார்.

ஒடுக்கப்பட்ட சாதிகள், உழைக்கும் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிராக, ஒடுக்கும் சாதிகளும், மத அடிப்படைவாதிகளும் அரசின் ஆதரவுடன் ஒன்றிணைந்து ஒருமுகத் தாக்குதலை தொடங்கி இருக்கின்றனர்.

தென்னாசிய சாதிய சமூக அமைப்பில் ஒன்றில் இருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாத வகையில் மத அடிப்படைவாதமும் சாதியமும் இணைந்து இருப்பதும், அரசியல் களத்தில் மக்களை ஒடுக்கும் சக்திகளாகவும் இருக்கின்றது. இந்த பின்னணியில் மாட்டு இறைச்சி விவகாரம் அடங்கும்.

"மிருக வதை" குறித்த பித்தலாட்டம்

ஜனாதிபதி இந்து சாதி மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வண்ணம் "மிருக வதையின்" பெயரில் இதற்கு கம்பளம் விரித்து இருக்கின்றார்.

"மிருக வதை" என்பது மோசடி. மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படாவிட்டால் பொருளாதார ரீதியாக பயன்பாடற்ற மாடுகள் அநாதரவாக கைவிடப்படும். மாடுகள் பட்டினி கிடக்கவும், நோயுற்று வதைபட்டும் சாகும். உணவின்றி நோயுற்று வதைபட்டு இறக்கும் மிருகவதையை விட இறைச்சிக்காக வெட்டப்படுவது வதையல்ல.

மனிதனையே வதைத்து சாகடிக்கும் கொடிய தனியார் பொருளாதாரக் கொள்கையைக் கொண்ட சமூகத்தில் - பொருளாதார ரீதியாக பெறுமதியற்ற மாடுகள் - அரசின் மிருக வதைக் கொள்கைக்கு பலியாகும். இங்கு "புனிதமாக கருதும் மாடு - சாதி - மதம் - கருணை.." என்று எல்லாமே, பொருளாதார பெறுமதிக்கு வெளியில் இயங்குவதில்லை என்பதே உண்மை.

மிருகவதை குறித்து பேசும் போதும் பொருளாதார பெறுமானமற்ற மாடுகளின் கதியென்னவாகும் என்று சிந்திக்காது பேசுகின்றவர்கள், அது ஜனாதிபதியாக இருந்தாலும் முட்டாளாகவே இருக்க முடியும்.

மிருக வதை என்பது என்ன?

மிருக வதைக்கு எதிரான மனிதத் தன்மையானது, உயிர்கள் வாழும் சூழலைப் பாதுகாப்பதில் இருந்து தொடங்குகின்றது. சூழலை அழிக்கும் தனியார் உற்பத்தி முறை, பொருளாதார பெறுமதியற்றவற்றை அழிக்கும் கொள்கையை எதிர்த்து நிற்பதில் தொடங்குகின்றது மிருக வதைக்கு எதிரான போராட்டம். இந்த பின்னணியில் தனியார் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு மிருகங்களை பராமரிக்கும் முறை குறித்தும், அதை உணவுக்காக இலாபகரமாக வதைத்துக் கொல்லுகின்ற முறை குறித்தும் பேச வேண்டும். இதற்கு வெளியில் உயிர் பலி குறித்து பேசுவது மோசடியாகும்.

உணவுச் சங்கிலித் தொடரில், உயிர் அழிப்பு இன்றி உணவு இருப்பதில்லை. உண்ணும் அனைத்தும் உயிர் அழிப்பாகும். உயிர் அழிப்பு என்பது அடிப்படையில் வதைதான். ஏன் தாவரம் கூட உயிர் என்பதும், அது உணவுக்கு உள்ளாகும் போது வதையை அனுபவிக்கின்றது. இங்கு உயிர் வதை குறித்து பேசுவது, குறுகிய அரசியல் சமூக நோக்கம் கொண்டதுக்கு அப்பால் அறிவியல் பூர்வமானதல்ல.

சமண மதம் வீதியில் நடக்கும் போது கூட உயிர் கொல்லாமையை முன்வைத்தது. தனது புலனுக்கு தெரிந்ததை மட்டும் உயிராகக் கண்டது. இன்று அறிவியல் புலன் கடந்த உணவு தொகுதி எங்கும் உயிர் இருப்பதையும் நோய்க்கு மருந்து செய்யும் போது கூட நோய்க்குரிய உயிரை அழிக்க தான் மருந்து என்பதை நிறுவுகின்றது.

இப்படி உண்மைகள் இருக்க, மிருகவதை என்பது குறித்து பேசுவது அறிவு குறித்த விவாதமும் கூட. இதைத் தாண்டி உண்மை எம்முன்னால் இருக்கின்றது. இன்று இயற்கையை அழித்து பணம் பண்ணும் தனியார் உற்பத்திக் கொள்கை உயிர்வாழ முடியாத வண்ணம் உயிரினங்களை வதைப்பதுடன், உயிர்கள் இயற்கை சூழல் இழந்து நோயுற்று மரணிப்பதும், உணவைப் பெற முடியாதால் உயிரினங்கள் வதைந்து மடிகின்றதும் எங்கும் நடந்து வருகின்றது. பல உயிரினங்கள் முற்றாக அழிந்து போகின்றது. "மிருகவதை" பேசுகின்றவர்கள் இதைக் கண்டு கொள்ளாது, மிருகவதை குறித்துப் பேசுகின்றனர்.

மிருக வதை வரம்புக்கு உட்பட்டதா?

மிருகவதை குறித்துப் பேசுகின்றவர்கள், இயற்கையின் சூழலில் இருந்து மிருகங்களைப் பிரித்து வளர்ப்பதைக் கூட வதையாக ஏன் பார்ப்பதில்லை?

மாடு வெட்டுவது மட்டும் தான் உயிர் வதையெனக் கருதுவதும், மற்றைய உயிர்களை அப்படிக் கருதாது இருக்கின்றதன் பின் இருப்பது, மானிட விரோதக் கருத்துகள் அல்லவா!.

உயிர் வதை குறித்துப் பேசுகிறவர்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கில் மனிதர்களை சித்திரவதை செய்து கொன்று குவித்தது குறித்தோ, மனிதனை பொலிஸ் நிலையங்களில் வைத்து சித்திரவதை செய்து கொல்லுகின்ற இன்றைய நிலை குறித்தோ, பொலிஸ்சுக்கு தலைமை தாங்குகின்ற ஜனாதிபதி "மிருகவதை" குறித்து பேசுகின்ற அருகதை குறித்து, பேசாத "மிருக வதை" கோட்பாடு தான் என்ன?

இந்த "நல்லாட்சியில்" ஏழை எளிய மக்கள் ஒரு நேர உணவின்றி அதற்காக அவர்கள் வாழ்க்கையில் அனுபவிக்கின்ற சித்திரவதைகள் (தற்கொலைகள், பாலியலை பண்டமாக உடலை விற்றல், பிச்சை எடுத்தல், அடிமை உழைப்பு, மற்றவர்களால் இழிவுபடுத்தப்பட்டு வாழ்தல், சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகுதல்) என்று இதை மிஞ்சிய, மிருகவதை எதுவும் நாட்டில் இருக்கின்றதா!

உணவுக்கு உயிர்கள் இழத்தல் இயற்கையின் விதி. அதை ஒரு உணவு மீது தடுக்க முனைவது அதை மானிடனுக்கு எதிராக முன்னிறுத்தல், சமூக விரோதத் தன்மை கொண்ட செயல்.

நவதாராளமயம் தான் மாட்டுக்கு மட்டும் "மிருக வதை" குறித்து பேச வைக்கின்றது

இங்கு ஜனாதிபதியின் "மிருக வதை" கோட்பாடு நவதாராளமயத்தை அடிப்படையாகக் கொண்டது.

இலங்கை சிறு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. நிலம் பகிரப்பட்டுள்ளதால் நவதாராளமயம் கோரும் பெரும் பண்ணைமுறைக்கு நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறித்தெடுப்பதற்கு மாடுகள் தடையாக இருக்கின்றது

விவசாயி தொடர்ந்து விவசாயத்தில் தன்னை நிலைநிறுத்தும் வண்ணம் மாடுகள் பொருளாதார ரீதியாக விவசாயிக்கு கைகொடுக்கின்றது. விவசாயியின் தேவைகள் (பால் - எரு - உழவு..) முடிந்தபின் அது இறைச்சிக்காக செல்லுகின்றது. இந்த வகையில் மாடு விவசாயிக்கு செலவு இன்றி (தீவனம் நிலத்தில் கிடைக்கின்றது) மேலதிக வருமானம் தரக்கூடியது என்பதால் நவதாராளமய தாக்குதலுக்கு எதிராக விவசாயியால் நின்று நீடிக்கமுடிகின்றது. மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்து விடுவதன் மூலம் மாடுகளை வளர்ப்பவர்கள் இயற்கையாக இறக்குவரை பராமரிக்க கோருவது, மாடு வளர்ப்பை கைவிடக் கோருவது இதன் பின்னான சூக்குமம். நவதாராளமயத்தின் கொள்கை "மிருக வதைக்குள்" தன்னை போர்த்திக் கொண்டு வெளிவருகின்றது.

இதற்கு பௌத்த - இந்து மத அடிப்படைவாதிகளை சார்ந்து நிற்பதும், ஒடுக்கும் சாதிய வக்கிரங்களை கொண்டு தேசிய விவசாயத்தை அழித்து விவசாயத்தை நவதாராளமயமாக்குவதுமாகும்.

நவதாராளமயம் கோரும் பண்பாட்டு அழிப்பு

மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என்று இலங்கையில் சாதிய-மத-வர்க்க பின்னணியில் இருந்து கூறுகின்ற அடிப்படையை இங்கு பொருத்திப் பார்க்க முடியும்.

வர்க்க ரீதியான சமூக அமைப்பில் ஆதிக்க சாதிய, மத பண்பாட்டு கூறுக்கு எதிரான மக்களின் பண்பாட்டுக் கூறாக மாட்டு இறைச்சி உணவைப் ஆதிக்க சக்திகள் பார்க்கின்றனர்.

மறுபக்கத்தில் நவதாராளமயம் பல்வேறு உணவு பண்பாடுகளை அழித்து அதனிடத்தில் ஒற்றைப் உணவுப் பண்பாட்டைக் கோருகின்றது. இதை தங்களிடம் இருந்து இறக்குமதி செய்து உண்ணவும் கோருகின்றது. மாட்டு இறைச்சியை உண்ண விரும்புகின்றவர்கள் இறக்குமதி செய்து உண்ணுமாறு ஜனாதிபதி கூறுகின்ற பின்னணியும் இது தான்.

நவதாராளமயமும் ஒடுக்கும் சாதிய மதவாதிகள் மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியில், "மாடு வெட்டுவதற்கு" எதிரான மானிட விரோத செயல்கள் முன்னுக்கு வருகின்றது. இன்று பல முனையிலும் மக்களைக் குதறுவதை தடுத்து நிறுத்தும் போராட்டங்கள் கட்டிமைக்கப்படுவதன் அவசியத்தை மானிடம் முன்னிறுத்துகின்றது.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது