நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதன்முதலாக புளொட்டுக்குள் ஸ்தாபன கோட்பாடு அறிமுகம்:

ஸ்தாபன கட்டுப்பாடுகள் மூலம் இயக்க நடவடிக்கைகளை ஒழுங்குக்குள் கொண்டுவர டொமினிக் நடவடிக்கை!!

புளொட்டின் தள இராணுவப் பொறுப்பாளர் ரமணனும் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சின்னமெண்டிஸும் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பட்டு நின்றதால் சின்னமென்டிஸை யாழ் மாவட்ட அமைப்புக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக்கால் கேட்டுக்கொள்ளப்பட்டு யாழ்மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டங்களில் சின்னமெண்டிஸ் கலந்துகொண்டிருந்தபோதும் கூட அவர்களது செயற்பாடுகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. யாழ்மாவட்ட அமைப்புக்குழு கூட்டங்களில் தனது கருத்துக்களையோ அல்லது அபிப்பிராயங்களையோ தெரிவிக்காமலே ஒரு பார்வையாளர் போல் கலந்துகொள்ளும் சின்னமெண்டிஸ் வழமைபோல் தளநிர்வாகத்துடனும் மக்களமைப்புடனும் முரண்பாடான போக்கைக் கொண்டவராகவே காணப்பட்டார்.

 

 

 

தளம் வந்திருந்த படைத்துறைச் செயலர் கண்ணன் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவராகக் காணப்பட்டார். படைத்துறைச் செயலர் கண்ணனைத் தொடர்ந்து தளம் வந்திருந்த சின்னமெண்டிஸ் உட்பட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும் கூட தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதனால் படைத்துறைச் செயலர் கண்ணன் மக்கள் அமைப்பில் செயற்பட்டவர்களிடமிருந்து புகைப்பிடித்தல் பற்றிய விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

படைத்துறை செயலர் கண்ணன்(சோதீஸ்வரன்)

இதில் மக்களமைப்பைச் சேர்ந்தவர்களாகிய எமது பக்கம் கூட சில வரட்டுத்தனமான பார்வைகள் இருந்தது உண்மை என்றபோதிலும், யதார்த்தத்தில் சில மறுக்கமுடியாத உண்மைகளை உள்ளடக்கிய விமர்சனமாகவும் இது அமைந்தது. பல்வேறு ஒழுக்கக்கேடுகளையும், சீரழிவுகளையும், குறைபாடுகளையும் தன்னகத்தே கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பின் விளைபொருளான ஒரு மனிதன் விடுதலை அமைப்புக்குள் இணைந்தவுடன் தனது கடந்தகாலத்திலிருந்து உடனடியாகவும் முற்றுமுழுதாகவும் துண்டித்துக் கொள்ள வேண்டும், "தூய்மை"யான புரட்சியாளனாக மாறவேண்டும் என நாம் கருதியது எமது பக்கத் தவறாகும்.

அதேவேளை நாம் எமது செலவுகளுக்கென மக்களின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பணத்தைச் சேகரித்துக் கொண்டு, மக்கள் பணத்தில் இத்தகைய அநாவசிய செலவுகளை செய்வதுகூட தவறான ஒரு செயலே ஆகும். 1983ன் பிற்பகுதியில், தோழர் தங்கராஜாவால் அரசியல் பாசறைகள் நடத்தப்பட்ட ஆரம்பநாட்களில் பாசறையில் பங்குபற்றுபவர்களுக்கான உணவுக்கு அமைப்பின் பணமே செலவாகி வந்தது.

ஆனால் தோழர் தங்கராஜா, கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி போன்றோர் இந்த நிலையை மாற்றியமைத்தனர். நாம் மக்களுக்காகப் போராடுவதால் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்காளிகளாக மாறவேண்டும், மக்களது பங்களிப்பு அவசியம் இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். இதனடிப்படையில் மக்களிடமிருந்து உணவைப் பெற்று அரசியல் பாசறைகளில் பங்குபற்றுபவர்களுக்குக் கொடுப்பதென்றும், அமைப்பின் பணத்தில் உணவு வாங்குவதை கூடியவரை தவிர்ப்பதென்றும் முடிவு செய்திருந்தனர். மக்களிடமிருந்து உணவைப் பெறும்போது மக்களுடனான உறவு வலுப்படும் அதேவேளை அமைப்பினரும் கூட அந்த மக்களுக்கு விசுவாசமாகவும் மக்களின் நலன்களுக்காகவும் செயற்படுவார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து மக்களது உணவிலேயே நாம் தங்கியிருந்தோம். பாசறைகளில் பங்குபற்றுபவர்களிலிருந்து இந்தியாவுக்கு பயிற்சிக்குச் செல்ல வருபவர்கள் வரைக்கும் தமது உணவுக்கு மக்களிலேயே தங்கியிருந்தனர். மக்களது பணத்திலும், மக்களது உணவிலும் தங்கியிருந்த நாம், மக்களது பணத்தை புகைப்பிடித்தல் போன்ற அநாவசியமான செலவுகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தோம். இந்தநிலையில் படைத்துறைச் செயலர் கண்ணன் தனது புகைப்பிடித்தலை குறைத்துக் கொண்டதுடன் மெண்டிஸ் உட்பட ஏனைய இராணுவப் பிரிவினரையும் அதைப் பின்பற்றும்படி வேண்டினார்.

(சின்னமெண்டிஸ்)

தளநிர்வாகத்துடனும், மக்கள் அமைப்பினருடனும் முரண்பட்டு நின்ற இராணுவப் பொறுப்பாளர்களும் அவர்களது செயற்பாடுகளும் அமைப்புக்குள் ஒருவகையான குழப்பநிலையை தோற்றுவித்திருந்தது. இத்தகைய முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவையை உணர்ந்துகொண்ட தளநிர்வாகப் பொறுப்பாளர் டொமினிக் அதற்கான பணியில் இறங்கினார். புளொட் என்ற அமைப்பு உருவான காலத்திலிருந்தே அதற்கென ஒரு ஸ்தாபனக் கோட்பாடுகளோ, கட்டுப்பாடுகளோ இருக்கவில்லை என்பதால் அத்தகையதொரு ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அங்கத்தவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அமைப்புக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கும் குழப்பநிலைகளுக்கும் முடிவு கட்டலாம் என டொமினிக் கருதினார்.

டொமினிக்(கேசவன் -புதியதோர் உலகம் ஆசிரியர்)

இதற்கு ஆதரவான கருத்தையே மக்களமைப்பைச் சேர்ந்த நாமும் கொண்டிருந்தோம். டொமினிக்கின் கடின உழைப்பின் மூலம் மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் "ஸ்தாபனக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும்" என்ற சிறுகையடக்கத்தொகுப்பு எழுதி முடிக்கப்பட்டது. இந்தக் கையடக்கத் தொகுப்பை யாழ்ப்பாணத்தில் "செய்தி மக்கள் தொடர்பு திணைக்களம்" அச்சேற்றி வெளியிட்டது. புளொட்டின் இராணுவப் பிரிவினர் உட்பட அனைத்து அங்கத்தவர்களுக்கும் "ஸ்தாபனக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும்" வழங்கப்பட்டதோடு, அனைத்து அமைப்பு அங்கத்தவர்களும் ஸ்தாபனக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்திக் கூறப்பட்டிருந்தது. ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதில் மக்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கோ, மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பைச் சார்ந்தவர்களுக்கோ கடினமானதொன்றாக இருக்கவில்லை. ஆனால், குறிப்பாக இராணுவப் பொறுப்பாளர்களுக்கும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஒரு பகுதியினருக்கும் ஸ்தாபனக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதென்பது கடினமானதொன்றாகவே இருந்தது.

எமது இராணுவம் ஒரு புரட்சிகர இராணுவம், மக்கள் இராணுவம் என்று மக்கள் மத்தியிலான கருத்தரங்குகளிலும், எமது பிரச்சார வெளியீடுகளிலும், தமிழீழத்தின் குரல் வானொலிச் சேவையிலும் பறைசாற்றிக் கொண்டிருந்தோம். ஆனால், நடைமுறையில் எமது இராணுவம் "புரட்சிகர" என்ற சொல்லில் இருந்து வெகுதூரம் விலகி நின்றது மட்டுமல்லாமல், மக்களிலிருந்து அன்னியப்பட்டுக்கொண்டிருந்த ஒரு இராணுவமாகவும், மக்கள் அமைப்பினருடன் முரண்பட்டுநின்ற ஒரு இராணுவமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

 

AK-47 தோளில்தொங்க அரசியல்பாசறை நடாத்திய SR சிவராம்

(எஸ்.ஆர் என்று புளொட்டினுள்ளும் ஊடகத்துறையினரால் பின்நாட்களில் தராக்கி என்றும் அழைக்கப்பட்ட சிவராம்)

தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த இராணுவப் பொறுப்பாளர்கள் தளநிர்வாகத்துடனும் மக்கள் அமைப்பினருடனும் முரண்பாடுகளை கொண்டிருந்ததை அறிந்திருந்த எஸ்.ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் இந்த முரண்பாடுகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி தன்னை முன்னணிக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை - சூழ்ச்சிகளை- செய்யத் தொடங்கினான். பிரதேசவாதத்தையே தனது தாரக மந்திரமாகக் கொண்டிருந்த மத்தியகுழு உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான ஈஸ்வரனுடனும் சின்னமெண்டிஸுடனும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதே தனது எதிர்கால அரசியலுக்கு பயனுள்ளது என உணர்ந்து கொண்டான். அசோக் என்று அழைக்கப்பட்ட யோகன் கண்ணமுத்துவினதும், ஈஸ்வரனினதும் சிபார்சின் பேரில் எஸ்ஆர் என்று அழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம் சுழிபுரம் வழக்கம்பரை அம்மன் கோவிலடியில் படைத்துறைச் செயலர் கண்ணனைச் சந்தித்துவிட்டு வெளியே வந்து அங்கு கூடியிருந்த இராணுவப்பிரிவு உறுப்பினர்களிடம் " நான் படைத்துறைச்செயலர் கண்ணனில் ஸ்டாலினை கண்டேன்" என்று கண்ணனைப் புகழ்ந்து துதிபாடத் தொடங்கினான்.

அரசியல் மற்றும் இராணுவ விடயங்களில் சராசரி விடயங்கைக் கூட சரிவர புரிந்து கொண்டிராத படைத்துறைச்செயலர் கண்ணனை ஸ்டாலினுடன் ஒப்பிட்டதன் மூலம் தனது சூழ்ச்சித்தனமான நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டான் எஸ்.ஆர் என்றழைக்கப்பட்ட புவிராஜகீர்த்தி சிவராம். யாழ்மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் மென்டிஸுடனும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த ஒருபகுதியினருடனும் மிகவும் நெருக்கமாகிக் கொண்டிருந்த சிவராம் படைத்துறைச் செயலர் கண்ணனை ஸ்டாலின் என்று புகழ்ந்து துதிபாடியதன் மூலம் இராணுவப்பிரிவினரை உச்சிகுளிரப் பண்ணியிருந்தான். இராணுவப் பிரிவினருடன் ஏற்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்திய எஸ்.ஆர் என்ற சிவராம் "இராணுவம் வேறு அரசியல் வேறு என்று பிரித்துப்பார்க்கக் கூடாது" என்ற தனது "புதிய கண்டுபிடிப்பை" முன்னெடுத்துச் சென்று தனக்குப் பின்னிருந்த கூட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினான். இராணுவ பயிற்சியே பெற்றிராத சிவராம் யாழ்ப்பாணத்தில் வேலணையில் நடைபெற்ற ஒரு அரசியல் பாசறையில் ஏ.கே 47 துப்பாக்கியை தனது தோளில் தொங்கவிட்டபடியே புளொட்டினுள் தன்னிடம் மட்டும்தான் அரசியலும் இராணுவமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்ற மிகவும் கேலிக்கிடமான கருத்துக்களை வெளியிட்டான்.

இந்த கேலிக்கிடமான கருத்துக்களைக் கூட எஸ்.ஆர் என்ற சிவராம் தனது பேச்சுவன்மையாலும், கவர்ச்சிகரமான பேச்சாலும் அரசியல் பாசறைகளில் கலந்துகொண்டவர்களிடம் கொண்டு செல்வதில் ஓரளவு வெற்றி கண்டான். இத்தகைய கருத்துக்களுடாக எஸ்.ஆர் என்ற சிவராம் தன்னைப்பற்றிய ஒரு பிரமையை அமைப்பு உறுப்பினர்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பார்த்தன் தள இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்ட காலத்தில் இருந்து அரசியல் வேறு இராணுவம் வேறு என்ற நிலையோ அல்லது இராணுவப் பிரிவும் அரசியற் பிரிவும் முரண்பட்டோ, பரஸ்பர ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் இன்றியோ செயற்பட்டது கிடையாது. அப்படி செயற்படுவது தவறானதும் கூட என்பதை நாம் நன்கு அறிந்திருந்தோம். ஆனால் எஸ்.ஆர் என்ற சிவராமின் நோக்கமே அமைப்புக்குள் இராணுவப் பிரிவுக்கும் அரசியற் பிரிவிக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாட்டை பயன்படுத்தி தன்னை முன்னணிக்கு கொண்டு வருவதாகவே இருந்தது.

புளொட் என்ற அமைப்பையும் அதன் கொள்கையையும் முதன்மைப்படுத்தி அரசியல் வகுப்புகளை நடத்துவது என்பதைவிட தன்னையும் தனது கருத்துக்களையும் முதன்மைப்படுத்தி தனக்கு பின்னால் ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டிருந்தான் எஸ் ஆர் என்ற சிவராம். இதனால் எஸ்.ஆர் என்ற சிவராமை சுற்றிய ஒரு கூட்டம் புளொட்டினுள் விரிவடைந்து கொண்டிருந்தது. மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பினரில் ஒரு பகுதியினரும் சிவராமினது போலித்தனமானதும் கேலிக்கிடமானதுமான நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் கவரப்பட்டவர்களாய் இருந்தனர். அரசியல் வகுப்புக்களை நடத்திக் கொண்டிருந்த பாசறை ரவி(முத்து), ரகு, பிரசாத் போன்றவர்கள் கூட எஸ்.ஆர் என்றழைக்கப்பட்ட சிவராமின் கவர்ச்சிமிக்க பேச்சுக்களால் சிவராமைச் சுற்றி அணிதிரண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

இதே காலப்பகுதியில் இந்தியாவில் தோழர் தங்கராஜாவின் அரசியல்பாசறைகளில் பங்குபற்றியவர்கள் தளம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தியாவில் இராணுவப்பயிற்சி முடித்தபின் தோழர் தங்கராஜாவின் அரசியல் பாசறைகளில் பங்குபற்றி, அரசியல் செயலர் சந்ததியாரால் தெரிவுசெய்யப்பட்ட இவர்களை தளத்துக்கு அனுப்பிவைத்ததன் நோக்கம் அரசியல் வகுப்புக்களை நடாத்துவதற்கு ஆகும். இவர்களில் வவுனியா சத்தியன், டானியல், பிரகாஷ் போன்றவர்களும் அடங்கியிருந்தனர். அரசியல் வகுப்புக்களை நடாத்துவதற்காக இந்தியாவிலிருந்து தளம் அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் ஆன்மாவை இழந்துவிட்ட மனிதர்களைப் போல் காணப்பட்டனர். இதில் வவுனியா சத்தியன் புளொட்டின் ஆரம்பகாலங்களில் பெரியமுரளி, தோழர் தங்கராஜா, யக்கடயா இராமசாமி போன்றோருடன் வவுனியாவில் செயற்பட்டுவந்த ஒருவர்.

சத்தியன் அமைப்பு வேலைகளாக யாழ்ப்பாணம் வரும்போதெல்லாம் கொக்குவிலில் என்னுடனேயே தங்குவது வழக்கம். அக்காலத்தில் ஓரளவு அரசியல் தெளிவுள்ளவராக இருந்த சத்தியன், எதையுமே வெளிப்படையாகப் பேசுபவராகக் காணப்பட்டதோடு மிகவும் நட்புறவோடும் பழகக்கூடியவர். ஆனால் சத்தியன் இந்தியா சென்று இராணுவப்பயிற்சி முடித்து தளம் வந்தபின் என்னுடன் பேசுவதற்கே தயங்குபவராகக் காணப்பட்டார். முன்பு அவரிடம் காணப்பட்ட வெளிப்படையாகப் பேசும் தன்மை, நட்புறவாகப் பழகுதல் எல்லாமே அவரிடமிருந்து தொலைந்துவிட்டிருந்தது. இதற்கான காரணத்தை அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது