பாரதிதாசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு)
புவியிற் சமுகம்இன்பம்
பூணல் சமத்துவத்தால்;
கவிழ்தல் பேதத்தாலடி! - சகியே
கவிழ்தல் பேதத்தாலடி! 1
புவிவேகம் கொண்டுசெல்லும்
போதில் உடன்செல்லாதார்
அவிவேகம் கொண்டாரடி! - சகியே
அவிவேகம் கொண்டாரடி! 2
தாழ்வென்றும் உயர்வென்றும்
சமுகத்திற் பேதங்கொண்டால்
வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே
வாழ்வின்பம் உண்டாகுமோ? 3
தாழ்ந்தவர் என்றுநீக்கிச்
சமுதாயச் சீர்தேடி
வாழ்ந்தது காணேனடி! - சகியே
வாழ்ந்தது காணேனடி! 4
பிறப்பி லுயர்வுதாழ்வு
பேசும்ச முகம்மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி? - சகியே
சிறக்குமோ சொல்வாயடி? 5
பிறந்தமுப் பதுகோடிப்
பேரில்ஐங் கோடிமக்கள்
இறந்தாரோ சொல்வாயடி? - சகியே
இறந்தாரோ சொல்வாயடி? 6
இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில்நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே
சுதந்தரம் உண்டாகுமோ? 7
பதம்பெறப் பணிசெய்வோர்
பகைகொண்டார் எனில்எந்த
விதம்அ·து கொள்வாரடி? - சகியே
விதம்அ·து கொள்வாரடி? 8
சோதர பாவம்நம்மில்
தோன்றா விடில்தேசத்தில்
தீதினி நீங்காதடி! - சகியே
தீதினி நீங்காதடி! 9
93
பேதம்பா ராட்டிவந்தோம்
பிழைசெய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு! - சகியே
மீதம் உயிர்தானுண்டு! 10
அற்பத்தீண் டாதார்எண்ணும்
அவரும் பிறரும்ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ? - சகியே
கர்ப்பத்தில் வந்தோரன்றோ? 11
பொற்புடை முல்லைக்கொத்தில்
புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார்நம்புவார்? - சகியே
சொற்படி யார்நம்புவார்? 12
தீண்டும் மக்களின்அன்னை
தீண்டாரையும் பெற்றாளோ
ஈண்டிதை யார்நம்புவார்? - சகியே
ஈண்டிதை யார்நம்புவார்? 13
தீண்டாமை ஒப்புகின்றார்
தீண்டா ரிடம்உதவி
வேண்டாமல் இல்லையடி! - சகியே
வேண்டாமல் இல்லையடி! 14
அடிமை கொடியதென்போர்
அவர்சோத ரர்க்கிழைக்கும்
மிடிமையை எண்ணாரடி! - சகியே
மிடிமையை எண்ணாரடி! 15
கொடியோர் பஞ்சமர்என்று
கூடப்பிறந் தோர்க்கிவர்
சுடும்பேர்வைத் திட்டாரடி! - சகியே
சுடும்பேர்வைத் திட்டாரடி! 16
தீண்டாதார் பழங்கீர்த்தி
தெரிந்தால் தீண்டாமைப்பட்டம்
வேண்டாதார் இல்லையடி! - சகியே
வேண்டாதார் இல்லையடி! 17
ஆண்டார் தமிழர்இந்நா
டதன்பின் ஆரியர்என்போர்
ஈண்டுக் குடியேறினார்! - சகியே
ஈண்டுக் குடியேறினார்! 18
வெள்ளை யுடம்புகாட்டி
வெறும்வாக்கு நயம்காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி! - சகியே
94
கள்ளங்கள் செய்தாரடி! 19
பிள்ளைக்குக் கனிதந்து
பின்காது குத்தல்போல்தம்
கொள்கை பரவச்செய்தார்! - சகியே
கொள்கை பரவச்செய்தார்! 20
கொல்லா விரதம்கொண்டோர்
கொலைசெய்யும் ஆரியர்தம்
சொல்லுக் கிசைந்தாரடி! - சகியே
சொல்லுக் கிசைந்தாரடி! 21
நல்ல தமிழர்சற்றும்
நலமற்ற ஆரியர்தம்
பொல்லாச்சொல் ஏற்றாரடி! - சகியே
பொல்லாச்சொல் ஏற்றாரடி! 22
ஏச்சும் எண்ணார்,மானம்
இல்லாத ஆரியர்
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! - சகியே
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! 23
வாய்ச்சாலத் தால்கெட்ட
வஞ்சத்தால் கலகத்தால்
ஏய்ச்சாள வந்தாரடி! - சகியே
ஏய்ச்சாள வந்தாரடி! 24
மன்னர்க் கிடையில்சண்டை
வளர்த்தார்தம் வசமானால்
பொன்னாடு சேர்வார்என்றார்! - சகியே
பொன்னாடு சேர்வார்என்றார்! 25
பொன்னாட்டு மாதர்போலும்
பூலோகத் தில்லையென்று
மன்னர்பால் பொய்கூறினார்! - சகியே
மன்னர்பால் பொய்கூறினார்! 26
வான்மறை எனத்தங்கள்
வழக்கம் குறித்தநூலைத்
தேன்மழை என்றாரடி! - சகியே
தேன்மழை என்றாரடி! 27
’ஏன்மறை?’ எங்கட்கென்றே
இசைத்தால் ஆரியர்,நீங்கள்
வான்புகத் தான்என்றனர்! - சகியே
வான்புகத் தான்என்றனர்! 28
மேலேழு லோகம்என்றார்
கீழேழு லோகம்என்றார்
95
நூலெல்லாம் பொய்கூறினார்! - சகியே
நூலெல்லாம் பொய்கூறினார்! 29
மேலும்தமை நிந்திப்போர்
மிகுக‰டம் அடைவார்கள்
தோலோதோல் கூடாதென்றார்! - சகியே
தோலோதோல் கூடாதென்றார்! 30
சுவர்க்கத்தில் தேவர்என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! - சகியே
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! 31
துவக்கத்தில் ஆரியரைத்
தொழுதால் இறந்தபின்பு
சுவர்க்கம்செல் வார்என்றனர்! - சகியே
சுவர்க்கம்செல் வார்என்றனர்! 32
தம்சிறு வேதம்ஒப்பாத்
தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி! - சகியே
நஞ்சென்று கொண்டாரடி! 33
வெஞ்சிறு வேதம்ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி! - சகியே
வஞ்சித்துக் கொன்றாரடி! 34
அழிவேதம் ஒப்பாதாரை
அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார்! - சகியே
பழிபோட்டுத் தலைவாங்கினார்! 35
பழிவேதம் ஒப்போம்என்ற
பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி! - சகியே
கழுவேற்றிக் கொன்றாரடி! 36
ஆரியர் தமைஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி! - சகியே
சேரியில் வைத்தாரடி! 37
சேரிப் பறையர்என்றும்
தீண்டாதார் என்றும்சொல்லும்
வீரர்நம் உற்றாரடி! - சகியே
வீரர்நம் உற்றாரடி! 38
வெஞ்சமர் வீரர்தம்மை
96
வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்றாரடி! - சகியே
பஞ்சமர் என்றாரடி! 39
தஞ்சம் புகாத்தமிழர்
சண்டாளர் எனில்தாழ்ந்து
கெஞ்சுவோர் பேரென்னடி! - சகியே
கெஞ்சுவோர் பேரென்னடி! 40
மாதர் சகிதம்தங்கள்
மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி! - சகியே
போதனை செய்தாரடி! 41
சூதற்ற மன்னர்சில்லோர்
சுவர்க்கக் கதையைநம்பித்
தீதுக் கிசைந்தாரடி! - சகியே
தீதுக் கிசைந்தாரடி! 42
உலகம் நமைப்பழிக்க
உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி! - சகியே
கலகங்கள் செய்தாரடி! 43
கொலைக்கள மாக்கிவிட்டார்
குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றாரடி! - சகியே
நிலைக்களம் என்றாரடி! 44
சாதிப் பிரிவுசெய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி! - சகியே
நீதிகள் சொன்னாரடி! 45
ஓதும் உயர்வுதாழ்வை
ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம்ஏற்பதோ? - சகியே
ஏதுக்கு நாம்ஏற்பதோ? 46
ஊர்இரண் டுபடுங்கால்
உளவுள்ள கூத்தாடிக்குக்
காரியம் கைகூடுமாம்! - சகியே
காரியம் கைகூடுமாம்! 47
நேர்பகை யாளிஎன்னை
நீசனென் றால்என்சுற்றத்
தார்என்னைத் தள்ளாரடி! - சகியே
சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! 48
97
வீரமில் ஆரியரின்
வீண்வாக்கை நம்பினால்நம்
காரியம் கைகூடுமோ? - சகியே
காரியம் கைகூடுமோ? 49
ஆரியர் சொன்னவண்ணம்
ஆண்டு பலகழித்தோம்
காரியம் கைகூடிற்றா? - சகியே
காரியம் கைகூடிற்றா? 50
எத்தால்வாழ் வுண்டாகும்?நாம்
ஒத்தால்வாழ் வுண்டாம்!இ·து
சத்தான பேச்சல்லவோ? - சகியே
சத்தான பேச்சல்லவோ? 51
எத்தர்கள் பேச்சைநம்பி
இரத்தக் கலப்பைநீக்கிச்
சத்தின்றி வாழ்வாருண்டோ? - சகியே
சத்தின்றி வாழ்வாருண்டோ? 52
’ஆரியப்’ பேர்மறைந்தும்
அவர்வைத்த ’தீண்டார்’ என்ற
பேர்நிற்றல் ஏதுக்கடி? - சகியே
பேர்நிற்றல் ஏதுக்கடி? 53
ஆரியர் பார்ப்பாரானால்
அவர்சொன்ன தீண்டாதார்கள்
சேரியில் ஏன்தங்கினார்? - சகியே
சேரியில் ஏன்தங்கினார்? 54
ஊர்தட்டிப் பறித்திட
உயர்சாதி என்பார்இ·தை
மார்தட்டிச் சொல்வேனடி! - சகியே
மார்தட்டிச் சொல்வேனடி! 55
ஓர்தட்டில் உயர்ந்தோர்மற்
றொன்றில்தாழ்ந் தோரைஇட்டுச்
சீர்தூக்கிப் பார்ப்போமடி! - சகியே
சீர்தூக்கிப் பார்ப்போமடி! 56
தீண்டாதார் சுத்தமற்றோர்
என்றாலச் சுத்தத்தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? - சகியே
தாண்டாதார் எங்குண்டடி? 57
தீண்டாதார் ஊனுண்டால்
தீண்டு மனிதர்வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம்! - சகியே
மாண்டன பல்கோடியாம்! 58
98
பறவை மிருகமுண்டோர்
பறையர் என்றால்மனுநூல்
முறையென்பார் பேரென்னடி? - சகியே
முறையென்பார் பேரென்னடி? 59
வெறிமது உண்போர்நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? - சகியே
நிறைமுக்கா டேதுக்கடி? 60
சீலம் குறைந்தோர்என்றால்
சீலமி லாச்சிலரை
ஞாலத்தில் ஏன்தீண்டினார்? - சகியே
ஞாலத்தில் ஏன்தீண்டினார்? 61
மேலை வழக்கங்கொண்டு
மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? 62
சாத்திரம் தள்ளிற்றென்றால்
சாற்றும் அதுதான்எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? - சகியே
கோத்திரத் தார்செய்ததோ? 63
வாய்த்திறம் கொண்டமக்கள்
வஞ்சம் யாவையும்நம்பி
நேத்திரம் கெட்டோமடி! - சகியே
நேத்திரம் கெட்டோமடி! 64
மனிதரிற் றாழ்வுயர்வு
வகுக்கும் மடையர்வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி! - சகியே
இனிச்செல்ல மாட்டாதடி! 65
கனிமா மரம்வாழைக்காய்
காய்க்கா தெனில்இரண்டும்
தனித்தனிச் சாதியடி! - சகியே
தனித்தனிச் சாதியடி! 66
எருமையைப் பசுசேர்தல்
இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி! - சகியே
ஒருசாதி இல்லையடி! 67
ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை
ஒப்பக் கருக்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே
99
இருசாதி மாந்தர்க்குண்டோ? 68
உழைப்பால் உயர்ந்தவர்கள்
தாழ்ந்தவர்கள் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி! - சகியே
பிழைப்பைக் கெடுத்தாரடி! 69
தொழிலின்றிச் சோறுண்ணாச்
சுத்தர் அசுத்தர்என்ப
தெழிலற்ற வார்த்தையடி! - சகியே
எழிலற்ற வார்த்தையடி! 70
உடல்நோய்கள் அற்றபேரை
ஒழுக்கமில் லார்என்பவர்
கடலை உளுந்தென்பரோ? - சகியே
கடலை உளுந்தென்பரோ? 71
தடையற்ற அன்பினரைச்
சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே
கடையர்க்கு வாழ்வேதடி? 72
பழிப்பவர்க் கும்உதவும்
பாங்கர் பறையர்என்பார்
விழித்துத் துயில்வாரடி! - சகியே
விழித்துத் துயில்வாரடி! 73
தழைக்கப் பிள்ளைபெறுவோர்
தாழ்வாம்; பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம்! - சகியே
அழைப்போர்கள் மேலோர்களாம்! 74
தோள்தான் பொருள்என்போர்கள்
தாழ்வாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம்! - சகியே
கூடாதோர் மேலென்பதாம்! 75
மாடா யுழைப்பவர்கள்
வறியர்;இந் நாட்டுத்தொழில்
நாடாதோர் செல்வர்களோ? - சகியே
நாடாதோர் செல்வர்களோ? 76
ஏரிக் கரையினில்வாழ்ந்
திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே
சேரியர் தாழ்ந்தார்களோ? 77
ஊருக் கிழிந்தோர்காவல்;
உயர்ந்தோர் இவர்கள்வாழ்வின்
100
வேருக்கு வெந்நீரடி! - சகியே
வேருக்கு வெந்நீரடி! 78
அங்கம் குறைச்சலுண்டோ
ஆதித் திராவிடர்க்கே?
எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே
எங்கேனும் மாற்றமுண்டோ? 79
புங்கவர் நாங்கள்என்பார்
பூசுரர் என்பார்நாட்டில்
தங்கட்கே எல்லாம்என்பார்! - சகியே
தங்கட்கே எல்லாம்என்பார்! 80
ஆதிசை வர்கள்என்பார்;
யுஆதிக்குப் பின்யார்?ருஎன்றால்
காதினில் வாங்காரடி! - சகியே
காதினில் வாங்காரடி! 81
சாதியில் கங்கைபுத்ரர்
என்பார்கள் சாட்சி,பத்ரம்
நீதியில் காட்டாரடி! - சகியே
நீதியில் காட்டாரடி! 82
வேலன்பங் காளியென்பார்
வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார்! - சகியே
காலன்தான் என்றஞ்சுவார்! 83
மேலும் முதலி,செட்டி,
வேளாளப் பிள்ளைமுதல்
நாலாயிரம் சாதியாம்! - சகியே
நாலாயிரம் சாதியாம்! 84
எஞ்சாதிக் கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி! - சகியே
பஞ்சாகிப் போனாரடி! 85
நெஞ்சில் உயர்வாய்த்தன்னை
நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால்! - சகியே
கொஞ்சமும் எண்ணாததால்! 86
செட்டி உயர்ந்தோன்என்பான்
செங்குந்தன் உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால்! - சகியே
குட்டுக்கள் எண்ணாததால்! 87
செட்டிக்கோ முட்டிநாய்க்கன்
101
சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி! - சகியே
கட்டுக் குலைந்தாரடி! 88
சேர்த்துயர் வென்றிவர்கள்
செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி! - சகியே
சூத்திரர் ஆனாரடி! 89
தூற்றிட இவ்வுயர்ந்தோர்
சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி! - சகியே
காற்றினில் விட்டானடி! 90
தம்மை உயர்த்தப்பார்ப்பார்
சமுகப் பிரிவுசெய்தார்
இம்மாயம் காணாரடி! - சகியே
இம்மாயம் காணாரடி! 91
பொய்மை வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி! - சகியே
நம்மில்நாம் காண்போமடி! 92
நான்கு வருணம்என்று
நவிலும் மனுநூல்விட்டு
ஏனைந்து கொண்டாரடி? - சகியே
ஏனைந்து கொண்டாரடி? 93
நான்கு பிரிவும்பொய்மை;
நான்குள்ளும் பேதம்என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம்! - சகியே
ஊனத்தில் உள்ளூனமாம்! 94
சதுர்வர்ணம் வேதன்பெற்றான்
சாற்றும்பஞ் சமர்தம்மை
எதுபெற்றுப் போட்டதடி? - சகியே
எதுபெற்றுப் போட்டதடி? 95
சதுர்வர்ணம் சொன்னபோது
தடிதூக்கும் தமிழ்மக்கள்
அதில்ஐந்தாம் நிறமாயினர்! - சகியே
அதில்ஐந்தாம் நிறமாயினர்! 96
மனிதரில் தீட்டுமுண்டோ?
மண்ணிற் சிலர்க்கிழைக்கும்
அநீதத்தை என்சொல்வதோ? - சகியே
அநீதத்தை என்சொல்வதோ? 97
102
’புனிதர்என் றேபிறத்தல்’
’புல்லர்என் றேபிறத்தல்’
எனுமி·து விந்தையடி! - சகியே
எனுமி·து விந்தையடி! 98
ஊரிற் புகாதமக்கள்
உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி! - சகியே
பாருக்குள் நாமேயடி! 99
நேரிற்பார்க் கத்தகாதோர்
நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி! - சகியே
பாருக்குள் நாமேயடி! 100
மலம்போக்கும் குளம்மூழ்கா
வகைமக்க ளைநசுக்கும்
குலமாக்கள் நாமேயடி! - சகியே
குலமாக்கள் நாமேயடி! 101
மலம்பட்ட இடம்தீட்டாம்
மக்கள் சிலரைத்தொட்டால்
தலைவரைக் கும்தீட்டாம்! - சகியே
தலைவரைக் கும்தீட்டாம்! 102
சோமனைத் தொங்கக்கட்டச்
சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி! - சகியே
தீமக்கள் நாமேயடி! 103
தாமூழ்கும் குளம்தன்னில்
தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி? - சகியே
போமாறு தானென்னடி? 104
பாதரட்சை யணிந்தாற்
பழித்துச் சிலரைத்தாழ்த்தும்
காதகர் நாமேயடி! - சகியே
காதகர் நாமேயடி! 105
ஓத வசதியின்றி
உலகிற் சிலரைதாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே
சூதர்க்கு வாழ்வேதடி? 106
தீராப் பகையுமுண்டோ
திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம்
நேராகிப் போனாலடி? - சகியே
நேராகிப் போனாலடி? 107
103
ஓரைந்து கோடிமக்கள்
ஓல மிடுங்கால்மற்றோர்
சீராதல் இல்லையடி! - சகியே
சீராதல் இல்லையடி! 108
தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி! - சகியே
வாழ்வெல்லை காண்போமடி! 109
சூழ்கின்ற பேதமெல்லாம்
துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! - சகியே
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! 110
ஆலய உரிமை
(’ஆறுமுக வடிவேலனே - கலியாணமும் செய்யவில்லை’
என்ற காவடிச் சிந்தின் மெட்டு)
கண்ணிகள்
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தன வோநம்
அழகிய நேத்திரங்கள்? 1
திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று
சேர்த்திட லாகும்அன்றோ? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும்ஒன்றே. 2
ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல்
லாரும் உடன்பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோசிறப்பே? 3
’தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை’ என்று
செப்பிடும் தேசத்திலே - பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி
போயிற்று நீசத்திலே. 4
என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி
தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர்
சமுக நிலைபுரியும். 5
என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
104
ஏழையர்க் கோர்கடவுள் - எனில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்
முளைக்கும் பொதுக்கடவுள். 6
உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத்
தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்
பேசிடுவீர் அன்பீர். 7
உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளிமறைவில் தரத்தான் - மிகப்
பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணின தோஅறியேன். 8
சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ - ஒரு
சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
சதியா லோசனையோ? 9
ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
என்று மதித்ததுவோ? - சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ? 10
மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடு வார்என்றீரே - அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித் தேநின்றீரே. 11
ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்
அங்கம் சிறந்தாரோ? - சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ? 12
தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ? 13
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ? - எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்திலையோ? 14
தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
சாமி விழுங்கட்டுமே - அன்றி
முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே. 15
105
இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி
இனத்தினில் பல்கோடி - மக்கள்
தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவது வோஓடி? 16
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ? 17
திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில்
சேரிஅப்பால் இல்லையே - நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே? 18
தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத்
தனிக்கோயில் காட்டுவதோ? - அவர்
வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ? 19
தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் - அவர்
வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை
மறித்திடும் நாசமக்கள். 20
தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத்
தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதிநன்றோ? 21
’தாழ்ந்தவர்’ என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்ததுவோ? - எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ? 22
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரேசமுகம் - என
ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்னசுகம்? 23
இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்
’யாம்’ என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம்
இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24
மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில்
வருவதற் கில்லைசாத்யம் - எனில்
ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற்பாத்யம். 25
106
நீடிய பத்தியில் லாதவர் கோயில்
நெருங்குவதால் தொல்லையே! - எனில்
கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே. 26
’சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ?’ - எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பிரே. 27
நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே - கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே. 28
கூறும் ’உயர்ந்தவர்’ ’தாழ்ந்தவர்’ என்பவர்
கோயிலின் செய்திவிட்டுப் - புவி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவீர் ஒன்றுபட்டு. 29
வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாதுகொண்டோ? 30
ஞாயமற்ற மறியல்
நொண்டிச் சிந்து
என்றுதான் சுகப்படு வதோ! - நம்மில்
யாவரும் யுசமானம்ருஎன்ற பாவனைஇல்லை - அந்தோ
ஒன்றுதான்இம் மானிடச் சாதி - இதில்
உயர்பிறப் பிழிபிறப் பென்பதும்உண்டோ? - நம்மில்
அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
அத்தனையும் யுசாதிகள்ருஎன் றாக்கிவிட்டனர் - இன்று
கொன்றிடுதே யுபேதம்ருஎனும் பேய்! - மிகக்
கூசும்இக் கதைநினைக்கத் தேசமக்களே! - நாம்
என்றுதான் சுகப்படு...
இத்தனை பெரும் புவியிலே - மிக
எண்ணற்ற தேசங்கள் இருப்பதறிவோம் - எனில்
அத்தனைதே சத்து மக்களும் - தாம்
அனைவரும் யுமாந்தர்ருஎன்று நினைவதல்லால் - மண்ணில்
இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம்
எட்டுல‡ம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! - இவர்
பித்துமிகக் கொண்ட வர்கள்போல் - தம்
பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல்நன்றோ? - நாம்
என்றுதான் சுகப்படு...
107
தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில்
ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர் - செவிக்
கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார் - பல்
ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம்
அறிவற்ற மாக்கள்என்று கருதப்பட்டோம் - நாம்
கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக்
கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை - நாம்
என்றுதான் சுகப்படு...
ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் - மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்தால் - இவர்
இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் - நாம்
என்றுதான் சுகப்படு...
உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
ஊரைஅடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க - மிக
முயல்பவர் தம்மிற் சிலரை - மண்ணில்
முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம்
என்றுதான் சுகப்படு...
உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
கண்டபடி விலை உயர்த்தி - மக்கள்
காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு
தொண்டு செய்யும் சாதிஎன்பதும் - நல்ல
துரைத்தனச் சாதியென்று சொல்லிக்கொள்வதும் - இவை
பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
பகர்வது தாங்கள்நலம் நுகர்வதற்கே - நாம்
என்றுதான் சுகப்படு...
வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆள்பவன் ‡த்திரியனாம் - மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
நியமித்த வைசியனென் றுயர்வுசெய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம்அற் றிருந்தவன் சூத்திரன்என்றே - சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் - இவை
108
அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும்ஒன்றாம் - நாம்
என்றுதான் சுகப்படு...
அவனவன் செய்யும் தொழிலைக் - குறித்
தவனவன் சாதியென மனுவகுத்தான் - இன்று
கவிழ்ந்தது மனுவின் எண்ணம் - இந்தக்
காலத்தினில் நடைபெறும் கோலமும்கண்டோம் - மிகக்
குவிந்திடும் நால்வரு ணமும் - கீழ்க்
குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று
எவன்தொழில் எவன் செய்யினும் - அதை
ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம்
என்றுதான் சுகப்படு...
பஞ்சமர்கள் எனப் படுவோர் - மட்டும்
பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ? - இனித்
தஞ்சமர்த்தை வெளிப் படுத்தித் - தம்
தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ? - இது
வஞ்சத்தினும் வஞ்ச மல்லவோ - பொது
வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ - நம்
நெஞ்சத்தினுள் ஈர மில்லையோ? - அன்றி
நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ? - நாம்
என்றுதான் சுகப்படு...
கோரும் யுஇமயாசலரு முதல் - தெற்கில்
கொட்டுபுனல் நற்யுகுமரிரு மட்டும்இருப்போர் - இவர்
யாருமொரு சாதி யெனவும் - இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் றேவிதனக்கே - நாம்
படைமக்கள் எனவும்நம் மிடைஇக்கணம் - அந்த
ஓருணர்ச்சி தோன்றிய உடன் - அந்த
ஒற்றுமைஅன்றோ நமக்கு வெற்றியளிக்கும்! - நாம்
என்றுதான் சுகப்படு...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#7._சமத்துவப்_பாட்டு

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது