Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே  செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர். 

   

இனத்தின் ஒரு பகுதியை துரோகிகள் என்று சொல்லி, ஒரு இனத்தை அழித்தான் புலித் தலைவன். அவரையே காட்டிக் கொடுத்த ஒரு துரோகி, இன்று அந்த இயக்கத்தின் புதிய தலைவராகிவிட்டார். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் பித்தலாட்டம். தன் தலைவரைக்  காட்டிக் கொடுத்தவன், தன் சர்வதேச மாபியா வலைப்பின்னல் மூலம் தன்னைத்தான் தலைவராக்கிக் கொண்டான். போராட்டத்தின் பெயரில் கேடுகெட்ட அரசியல் வக்கிரம்.

 

திட்டமிட்ட மூடிமறைக்கப்பட்ட துரோகம் மூலம் சரணடைய வைக்கப்பட்ட பிரபாகரன் தலைமையிலான இராணுவத் தலைமை, சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டது. பொட்டர் தலைமையிலான புலானாய்வு மற்றும் மற்றும் நிர்வாகப் பகுதியை, உயிருடன் வைத்து சித்திரவதை செய்து தகவல்களை பெறுகின்றனர். இதன் மூலம் பொருட்களையும் மீட்கின்றனர், ஆட்களை கைது செய்கின்றனர். இந்த நாடகத்தின் அரசியல் பின்னணியில், கே.பி கும்பல் இருந்தது. அங்கு நடந்த அனைத்தும் நன்கு தெரிந்து, அதை திட்டமிட்டு  மூடிமறைக்கின்றது.

 

இந்தளவையும் நன்கு திட்டமிட்டு செய்து முடித்த கே.பி தலைமையிலான மாபியாக் கும்பல், இன்று எதுவும் நடவாத மாதிரி தன்னைத்தான் தலைவராக்கியுள்ளது. தலைவர் வீரமரணம் அடைந்து விட்டதாக பொய் கூறும் கே.பி, உண்மையில் சரணடைய வைத்து படுகொலை செய்ய உதவிய அந்த நாடகத்தை மூடிமறைக்கின்றனர்.

 

இந்த மாபெரும் கேடி கே.பி தான் ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தி, புலிகள் எந்த கேள்வியுமின்றி ஆயுதத்தை கீழே வைத்ததாக கூறியவர். அப்படி ஆயுதத்தை கீழே வைத்த பின், சரணடையத் தானே முடியும். போராடி வீரமரணம் அடையவா முடியும்.  இந்த நிலையில் இங்கு வீரமரணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கே.பி என்ற கேடி, இங்கு மக்களுக்கு பொய் சொல்லுகின்றான்.

 

புலித் தலைமை ஆயுதத்தை திடீரென கீழே வைக்கவில்லை. அங்கு கே.பி தலைமையிலான மாபியாக் கும்பலும், சர்வதேச சதிகாரர்களும் கூடி, ஒரு சதியை அரங்கேற்றினர் என்பதே இங்கு வெளிப்படையான உண்மை.

 

இதில் கேபியின் தலைமையிலான மாபியாக் கும்பல் காட்டிக்கொடுக்கும் நோக்கமின்றி நம்பி ஏமாந்தவர்கள் எனின், இந்த சதிகாரர்கள் யார் என்பதை உலகறிய சொல்லியிருப்பார்கள். அதை செய்யவில்லை. அதே நேரம் நேர்மையற்றவர்கள். தங்கள் துரோகத்தை இதில் மூடிமறைக்கின்றனர். இதன் மூலம் தங்கள் தலைவரை கொல்ல உதவிய போர் குற்றத்தையும், இதனுடன் தொடர்புபட்டவர்களின் போர்க் குற்றத்தையும் மூடிமறைத்து  பாதுகாக்கின்றனர். போர்க்குற்ற விசாரணை என்பது, இந்தக் குற்றத்தின் உள்ளடகத்துடன் தொடர்புடையது.

 

கே.பி என்ற புலி மாபியாக் கும்பல், கடைசியில் என்ன நடந்தது என்பதையும், யார் யாருடன் சேர்ந்து இந்த சதி பேரங்களை நடத்தி, திட்டமிட்டு காட்டிக் கொடுக்கப்பட்டு சரணடைய வைக்கப்பட்டது என்பதை மக்களுக்கு சொல்லத் தயாராகவில்லை. ஆனால் தங்களை தமிழ் மக்களின் தலைவராக முன்னிறுத்தி, புலியின் தலைவராக நியமித்துக் கொள்கின்றனர்.

 

இந்த கூட்டு சதியில் ஈடுபட்ட சதிகார நாடுகளுடன் சோந்து தான், தன்னைத்தான் இன்று புதிய புலித் தலைவராக்கியுள்ளார். இதன் மூலம் இந்த மாபியாக் கும்பல் இரண்டு விடையங்களை செய்ய முனைகின்றது. 

        

1. புலிப்பினாமிய சொத்துக்களை கைப்பற்றி தனதாக்க முனைகின்றது.

 

2. தமிழ் மக்கள் தாமாக புலிக்கு வெளியில் சுயமாக போராடும் வழியை அடைத்து விட முனைகின்றது.

 

இதன் மூலம் ஒரு மாபியாத் தலைமையை தமிழ்மக்கள் மேல் நிறுவமுனைகின்றனர். பினாமிச் சொத்தைக் கொண்ட உள்ளுர் மாபியா தலைமைகளும், சர்வதேச மாபியாக் கும்பலும் ஏற்கனவே மோதத் தொடங்கிவிட்டது. உள்ளுர் மாபியாக்களுக்கும், சர்வதேச மாபியாக் கும்பலுக்கும் இடையில் நடக்கும் சொத்து மற்றும் அதிகாரத்துக்கான போராட்டத்தை, தமிழ் மக்கள் போராட்டமாக காட்ட முனைகின்றனர்.

 

இந்த அணி சேர்க்கையில் பினாமிச் சொத்தற்ற புலிப்பினாமி அறிவுத்துறை சர்வதேச மாபியாக் கும்பலுடன் நிற்கின்றது. புலிப் பினாமிச் சொத்துள்ள அறிவுத்துறை உள்ளுர் மாபியாவுடன் சேர்ந்து நிற்கினறது. இதன் மூலம் தத்தம் வழியில், தமிழ் மக்களுக்காக தாம் போராடுவதாக காட்டிக்கொண்டு, இந்த சொத்து இழுபறியை தமக்குள் தக்கவைக்க முனைகின்றனர்.

 

இப்படி மாபியாவுக்கு இடையிலான நடக்கும் சொத்துக்கான போராட்டத்தில், புலிகளின் தலைவரின் மரணத்தை மறுப்பதும் அதை வீரமரணம் என்பதன் ஊடாக மாபியாத்தனம்  வக்கிரமடைந்து நிற்கின்றது. கொல்ல உதவியவர்கள் தலைவர் வீரமரணமடைந்தாக கூறி,  கே.பி தன்னைத்தான் தலைவராக அறிவித்துவிட்டு சொத்தைக் கைப்பற்ற முனைகின்றார்.  உள்ளூர் மாபியாக்கள் தலைவர் வழிகாட்டலில் தொடர்ந்து தாம் உள்ளதாக கூறி, புலிப் பினாமிச் சொத்தை தம்முடன் தக்கவைக்க முனைகின்றனர்.

 

இப்படி தங்கள் தலைவரைக் காட்டிக் கொடுத்த துரோகிகள், தலைவர் பெயரால் சொத்துக்காக மோதுகின்றனர். இதை மூடிமறைக்கவே, இந்த ஓநாய்கள் தமிழ்மக்கள் பற்றி ஒப்பாரி வைக்கின்றது.

 

தமிழ் மக்களை ஒடுக்கி, அவர்களை நடைப்பிணமாக்கி, இன்றைய இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இந்த கயவர் மாபியாக் கூட்டம் தான். இவர்கள் தமிழ் மக்களுக்காக போராடும் தகுதி, நேர்மை என எதுவுமற்றவர்கள். புலிகள் தான், தமிழ் மக்களை தோற்கடித்தவர்கள். அவர்கள் தமிழ் மக்களுக்கு எந்த அரசியல் மீட்சியையும் ஒரு நாளும் பெற்றுத்தர முடியாது. மாறாக தமிழ் மக்களின் வீழ்ச்சிக்குத்தான் தொடர்ந்து வழிகாட்டுவர்.

 

இதற்கு வெளியில் தமிழ் மக்கள் தமக்காக தாம் போராடவேண்டும். தமது அனைத்து உரிமைகளை கோரும் வண்ணம், தம்மைத்தாம் புதிய அரசியல் மூலம் அரசியல் மயப்படுத்தவேண்டும். மற்றவனை ஒடுக்காத வண்ணம், தன் மீதான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் புதிய அரசியல் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கமைய அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடனும் சேர்ந்து போராடும் வண்ணம், புதிய அரசியல் வழியை பின்பற்ற வேண்டும். இதை நோக்கி சிந்திப்பது மட்டும்தான், தமிழ்மக்கள் மேலான உண்மையான அக்கறையாகும்.  

 

இதை விட்டுவிட்டு துரோகம் மூலம் தம் தலைமையை காட்டிக் கொடுத்த ஒரு மாபியாக் கும்பல் பின்னால் திரண்டு, தமிழ் மக்கள் விடுதலையை அடைய முடியும் என்று இன்னமும் நம்பினால், நீ ஒரு முட்டாள். அரசியல் ரீதியாக சுயஅறிவற்ற, வளர்க்கப்பட்ட மந்தைகள். புண்ணாக்கு போட்டால் மட்டும் தான் தின்னும். இல்லையென்றால் செத்துப் போகும் உணவற்ற மனித மந்தைகள். இதற்கு மாறாக மனிதனாக இரு, மந்தையாக இருக்காதே.    

                   

மக்களை நேசிக்கக் கற்றுக்கொள். உன் மக்களுக்கு நடத்த அனைத்தையும், திரும்பிப் பார். போராட்டத்தின் பெயரில் நடத்த மனித அவலத்தை வெறு. அதற்கு காரணமானவர்களை இனம் காண். மக்களை நம்பி, அவர்கள் வாழ்வு சார்ந்த எதார்த்தத்தில் இருந்து போராட முனை. இதுதான், இன்று உனக்கு முன்னாலுள்ள மிகப்பெரிய சவால்.

 

பி.இரயாகரன்
26.07.2009