Language Selection

பி.இரயாகரன் -2008

மகிந்த சிந்தனையும் பிரபாயிசமும், மனிதத் தன்மையற்ற கெடுபிடியான இரக்கமற்ற ஒரு மக்கள் விரோத யுத்தத்தையே நடத்திவருகின்றது. இதில் சிக்கி தவிக்கும் மக்களையிட்டு எந்த அக்கறையற்ற சுயநலமே, இன்று எங்கும் புரையோடிக்கிடக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களையி;ட்ட எமது அக்கறை தான், இதை செய்பவர்கள் இவர்கள் மேலான எமது கடும் விமர்சனமாக மாறுகின்றது.  

இலங்கையில் புலியை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள பின்னணியோ, மிகவும் ஆபத்தான பாசிசமாகும். புலிப் பாசிசமோ மக்களை யுத்தப் பணயப்பொருளாக வைத்துக் கொண்டு நடத்துகின்ற மனித விரோத யுத்தத்தையே, தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாதம் அறிவிக்கும் புலித் தடை சூழ்ச்சிமிக்கதும், ஆபத்தானதுமாகும். இதன் மூலம் தமிழினத்தை அழித்தொழிக்கும் யுத்தத்தை, சர்வதேச ஆதரவுடன் பேரினவாதம் நடத்த முனைகின்றது.

மக்கள் விரோத யுத்தத்தால் தமிழ் மக்களோ சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்ளையும் அனுபவிக்கின்றனர். இவை அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா? இதற்காக கவலைப்படுவதோ, தேச விரோதமாக இன்று சித்தரிக்கப்படுகின்றது.

தமிழ்மக்கள் இன்று எதை விரும்புகின்றனர்? இந்த யுத்தத்தையா? இந்த யுத்தத்தை ஆதரிப்பதையா? தற்காப்பு பெயரிலான மற்றொரு யுத்தத்தையா? அல்லது இவற்றில் இருந்து ஒரு விடுதலையையா? சொல்லுங்கள்! நெஞ்சில் துணிவிருந்தால், உங்களிடம் ஓரு துளி நேர்மை இருந்தால், அதைச் சொல்லுங்கள்.

தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.

எல்லாம் புலிமயமாகி அழிகின்றது. ஒருபுறம் எல்லாவற்றையும் புலிமயமாக்கி பேரினவாதம் அழிக்கிறது. மறுபுறத்தில் எல்லாம் புலியாகி அழிகின்றது. இந்த சமூக பாசிச விதிக்குள், தமிழினம் தன் மீட்சிக்கான எந்த சொந்த சமூகமாற்று வழியுமின்றி அழிகின்றது. மாற்றுக் கருத்தற்ற பாசிச அழிவுக் கருத்துத் தளத்தில், எல்லாம் பாசிச சிந்தனையாகி ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுகின்றது.

இது ஒட்டுமொத்த மக்களை ஏமாற்ற, திட்டமிட்டுக் களமிறங்குவதாகும். இது தம்மைத் தாம் மூடிமறைத்துக் கொள்கின்றது. மக்களின் நலனுடன்தான், தாம் இருப்பதாக பாசாங்கு செய்கின்றது. தனக்கு பின்னால் இடதுசாரி வேஷத்தை அணிகின்றது.

அரசை எதிர்க்க நாம் புலியை ஆதரிக்கவேண்டும். அரசுக்கு எதிராக வேறு யார் தான் உள்ளனர். இதை புலிகள் மட்டும் சொல்லவில்லை. இடதுசாரிய புல்லுருவிகளும் இப்படிக் கூறுகின்றனர்.

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

ஐனநாயகம், சுதந்திரமும் மூலதனத்துக்கே ஒழிய மக்களுக்கல்ல என்பதும், அதன் போலித்தனமும், இன்று ஐரோப்பாவின் வீதிகளில் இழுத்து வைத்து நாறடிக்கப்படுகின்றது.

பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

புலிகளின் அழிவும், பேரினவாதத்தின் உச்சக் கொக்கரிப்பும் இன்று அன்றாட செய்தியாகின்றது. இதில் இருந்து மீள்வதற்கான புலிகளின் முயற்சிகள் அனைத்தும், இன்று தோல்வியைத் தழுவுகின்றது. தாம் ஏன் தோற்றுப்போகின்றோம் என்பதைக் கூட அறிய முடியாத சூனியத்தில், அவர்கள் காய்களை நகர்த்துகின்றனர்.

இது பிரபாகரன் பற்றிய வரலாறல்ல. மாறாக வலதுசாரியான பிரபாகரனை, யார்? எப்படி? பாசிட்டாக்கினார்கள் என்பதை இனம் காணும் கட்டுரை. பலரும் தனிப்பட்ட பிரபாகரனையே, பாசிட்டாக சித்தரிக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மாறாக தனிப்பட்ட பிரபாகரன் அப்படி மாற்றப்பட்டார் என்பதே உண்மை. பிரபாகரனின் அறியாமையையும் பலவீனத்தையும் பயன்படுத்தி, பாசிட்டாக்கியவர்கள் பற்றிய கதை இது. இங்கு பிரபாகரன் வெறும் கருவிதான்.

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள், இந்து பயங்கரவாத அடையாளங்களை  தரித்திருந்தனரே, ஏன்!?

 

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள (முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம் மூலம்), இந்து பயங்கரவாத அடையாளங்களையே தம் கவசமாக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தான் மிக வெற்றிகரமான, முழு உலகை அதிரவைத்த ஒரு தாக்குதலை அவர்கள் இலகுவாக நடத்த முடிந்தது.

இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

உலகளவில் கொள்ளையடித்தவர்களால் உருவாகியுள்ள உலக நெருக்கடி, தெளிவாக எமக்கு ஒன்றை கற்றுத் தருகின்றது. அரசுகள் என்பது மக்களை ஏய்க்கும் கொள்ளைக் கோஸ்டிகளை வழிநடத்தும் திருட்டுக் கோஸ்டி என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இவர்களின் 'ஜனநாயக" ஆட்சியில் சர்வதேச நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் மீதோ, மக்களின் நிதியைக் கொள்ளையடித்தவர்கள் மீதோ எந்த நீதி விசாரணையும் கிடையாது. பணத்தைத் திருடி வைத்துள்ளவர்களிடமிருந்து அதை மீளப் பறிமுதல் செய்தது கிடையாது.

இதன் அரசியல் சாரம் என்ன? ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளுவது தான். இதை விட வேறு இதில் ஒன்றுமில்லை.

 

பிள்ளையான் கோரும் பொலிஸ் அதிகாரம், தன் எதிரிகளை இதைக் கொண்டு ஒடுக்குவதற்குத் தான். கருணா உட்பட யாரையும் இவரின் 'ஜனநாயகம்" கிழக்கில் அனுமதிக்காது. இதற்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருகின்றார். 

மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக்  கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.