சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்
சுப்பனைக் காண லானேன்.
`தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே'
என்றுநான் சொன்ன வுடனே
கோபித்த மாப்பிள்ளை `மதம்என்னல் மலையுச்சி
நான்அதில் கொய்யாப் பழம்;
கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்
கோட்டமே' என்று சொன்னான்.
தாபித்த அந்நிலையில் அம்மாப்பிள் ளைக்குநான்
தக்கமொழி சொல்லி அவனைத்
தள்ளினேன். மலையுச்சி மீதே யிருந்தவன்
தன்புதுப் பெண்டாட் டியின்
சோபனக் கட்டிலில் தொப்பென்று விழுந்தனன்.
துயரமும் மனம கிழ்வும்
சுப்பனே அறிகுவான் நானென்ன சொல்லுவேன்
தூயஎன் அன்னை நாடே!
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt252
மலையிலிருந்து
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode