82 ஆண்டுகளாக எவரும் மரணமடைவில்லை - வியத்தகு சிற்றூர்

திபெத்தின் இமயமலை அடிவாரத்தில் துங்குங் என்னும் சிற்றூர் உள்ளது. கடந்த 82 ஆண்டுகளாக, இச்சிற்றூரில் குழந்தகள் பிறந்த வண்ணம் உள்ளனவேயன்றி எவரும் மரணமடைவில்லை என்பது, வியக்கத்தக்கதாகும். 1924ஆம் ஆண்டு அங்குக் கடைசி ஈமச் சடங்கு நடைபெற்றது. அதன் பின்பு, யாரும் இறக்கவில்லை.


1942ஆம் ஆண்டு, இச்சிற்றூரின் மக்கள் தொகை, 680. இது வரை, அது 6 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மிக மூத்தவருக்கு வயது 142. மிக இளையவனுக்கு இன்னும் ஒரு வயது ஆகவில்லை.

 

தரை மட்டத்திலிருந்து சராசரியாக 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இச்சிற்றூரில், காற்றின் அடர்த்தி, குறைவாக உள்ளது. கடும் குளிரும் நிலவுகிறது. அங்குப் பெரிய மரங்கள் வளர்வதில்லை. சிற்றூர் மக்கள், ஆண்டுதோறும் காய்கறிகள் உண்பது அரிது. அங்குள்ள வாழ்க்கை நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. ஆனால் துங்குங் சிற்றூர், நீண்ட ஆயுள் சிற்றூராக மாறியுள்ளமை, உண்மையே. இதற்கான காரணம், புரியாத புதிராகவே விளங்குகிறது.

 

http://tamil.cri.cn/1/2007/08/23/61@59152_1.htm