Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் “அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!” – ம.உ.பா.மையத்தின் அறைகூவல்!!

“அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!” – ம.உ.பா.மையத்தின் அறைகூவல்!!

  • PDF

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளையின்  எட்டா ம்  ஆண்டு தெ hடக்  க வி ழ hவை முன்னிட்டு, 4.11.2011 அன்று மதுரையில் "செயலுக்கான கருத்தரங்கம்' நடைபெற்றது. கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மதுரைக்கிளை துணைச்செயலரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை நூல்வடிவில் வெளியிட்டு, இந்நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது போலீசு தாக்கியதில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான திரு.வெள்ளைச்சாமியின் நேருரை, நேரில் பார்த்த  பரமக்குடி வழக்குரைஞர் திரு.பசுமலை அளித்த சாட்சியம் ஆகியன ம.உ.பா.மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை மெய்ப்பிப்பதாக இருந்தது. "பரமக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள்: பார்ப்பனிய சாதிவெறி அரசு பயங்கரவாத கூட்டுச் சதி' என்ற தலைப்பில் ம.உ.பா .மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  வழக்குரைஞர் ராஜு, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய போலீசு அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும்  வரை ம.உ.பா.மையத்தின் போராட்டம் ஓயாது என்று சூளுரைத்தார்.

"முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் அப்சல் குரு ஆகியோரின் தூக்கு தண்டனை: அரசியல் அநீதி' என்ற தலைப்பில் உரையாற்றிய பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

தோழர் பாலன், இவ்வழக்கின் சட்டப் பின்னணியை விரிவாக விளக்கியதோடு, அரசியல் சார்ந்த பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் நிரபராதிகளான இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார்.

இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்குச் சுவரொட்டி அச்சிடக்கூடாது என்று அச்சகங்களை மிரட்டிய போலீசு, விளம்பரப்படுத்தி கட்டப்பட்டிருந்த பேனரையும் கழட்டிச் சென்றது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்த எழுச்சிகரமான இக்கருத்தரங்கில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரத்தை நேரடியாகப் பதிவு செய்துள்ள வீடியோ பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகிவரும் இன்றைய சூழ லில்,   மனித உரிமை  ஆர்வலர்களையும் உழைக்கும் மக்களையும் செயலுக்கு  அறைகூவியழைப்பதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை