Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தோழர் சதாசிவத்தின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

தோழர் சதாசிவத்தின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

  • PDF

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவப் பட்டம் பெற்ற 26 வயதான இளம் தோழர் சதாசிவம், கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி அகால மரணமடைந்து விட்டார்.

 

கல்லூரிப் பருவத்தில் மார்க்சியலெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவாளராகச் செயல்பட்ட அவர், வேலை கிடைக்காமல் தவித்த போதிலும் புரட்சிகர உணர்வு குன்றாமல் ஊக்கமுடன் செயல்பட்டார்.

 

புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற அவரது புரட்சிகர உணர்வை நெஞ்சிலேந்தி, அவரது புரட்சிகர கனவை நனவாக்கத் தொடர்ந்து போராட உறுதியேற்போம். மனித உரிமை பாதுகாப்பு மையம், நாமக்கல்.