Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

ம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும்

  • PDF

//இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்திஇ சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்) சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன் குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன் அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். //

சபா நாவலன் அருள் செழியன் அருள் எழிலன் அனைவரும் தாங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சுயவாக்குமூலங்களை தெளிவாக பதிவு செய்திருக்கின்றனர். அப்படி இருக்கின்றபோது அவர்கள் இதனை அவதூறு என்று மறுப்பதனை எவ்வாறு மகஇக ஏற்றுக் கொள்கிறது?

//இரயாகரன் இக்கட்டுரைகள் மீது குறுக்கு விசாரணை நடத்திஇ தீர்ப்பு வழங்கி இன்னொரு கட்டுரையை வெளியிட்டார். பிறகு தேசம் நெற்இ தமிழரங்கம் தளங்களில் இவை தொடர்பான கட்டுரைகள்இ பின்னூட்டங்கள்இ விவாதங்கள் தொடர்ந்தன.

“அருள் எழிலன் வினவு தளத்தில் எழுதுகிறார். சபா.நாவலன் பங்கேற்கும் புதிய திசைகள் அமைப்புடன் இணைந்து ம.க.இ.க ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. எனவே வினவு தளம் மற்றும் ம.க.இ.க இது பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கோரும் பின்னூட்டங்களும்இ “இதுவரை ம.க.இ.க கருத்து தெரிவிக்காத மர்மம் என்ன” என்று கேள்வி எழுப்பி மகஇகவின் மீது சேறடிக்கின்ற பின்னூட்டங்களும் தமிழரங்கம் மற்றும் தேசம் நெற் ஆகிய இரு தளங்களிலும் பிரசுரமாகின. இலங்கை புதிய ஜனநாயக கட்சியையும் பின்னூட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தகைய பின்னூட்டங்களைப் பிரசுரித்த இரயாகரனோஇ அல்லது தேசம் நெற் ஜெயபாலனோ அவை பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களுடைய மவுனம் தற்செயலானதல்ல என்றே கருதுகிறோம்.//

பின்னூட்டங்கள் வகைதொகையின்றி நிபந்தனையிட்டு தமிழரங்கத்தால் எந்த ஒழிந்திருக்கும் பெயர்களிலும் என்றும் விடப்படுவதில்லை. பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்ற போது அவை வெளிவரும் பெயர்கள் அதனை வெளியிடும் நபருக்கு பிரத்தியேகமானது. அவற்றுக்கு பதில் தழிழரங்கத்தால் என்றும் பின்னூட்டத்திற்கு பின்னூட்டமாக தரப்படுவதில்லை என்பது பொதுவான நடைமுறை. எனவே இவற்றை நாங்கள் பிரசுரித்துவிட்டு மவுனமாக இருந்தது தற்செயலானதல்ல என்பது கற்பனை.

//இப்பிரச்சினையில் குற்றச்சாட்டை முன்வைக்கும்  இரயாகரன்இ குற்றம் சாட்டப்படும் நாவலன் மற்றும அருள் எழிலன் ஆகியோர் எம்முடன் தொடர்பில் உள்ளவர்கள். குற்றச்சாட்டோ அருள் எழிலனின் சகோதரர்இ அருள் செழியனுக்கும் குகநாதனுக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டு. இது பற்றி இரயாகரன் ஒரு பதிவு எழுதிஇ தேசம் நெற் அதனை வழிமொழிந்த மறுகணமேஇ “ம.க.இ.க என்ற அமைப்பு அது பற்றி முடிவு சொல்லவேண்டும்” என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லது வரம்பு மீறிய ஆணவம் என்று கருதுகிறோம்.//


இது குறிப்பிட்ட பின்னூட்டங்களை இட்ட வாசகர்களை நோக்கியதாயின் சரியானது. ஆனால் இது தமிழரங்கத்தின் உள்நோக்கம் என கருதப்படுமாயின் அது தவறானது மட்டுமல்ல அவதூறானதுமாகும்.


//“நானே ராஜா நானே மந்திரி” என்ற வகையிலான அமைப்பாக ம.க.இ.க இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை இக்கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றிருக்க முடியும். துரதிருஷ்டவசமாக நாங்கள் ஜனநாயக பூர்வமாக இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். மேலும் ஜனநாயக பூர்வமான பரிசீலனையோ ஆய்வோ தேவைப்படாத அறுதி உண்மையாகவும் இரயாகரனின் “தீர்ப்பை” நாங்கள் கருதவில்லை.

இப்பிரச்சினையில் குகநாதனின் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கூறும் இரயாகரனும் சரி அதனை வழிமொழிகின்ற பெரும்பான்மையான பின்னூட்டக்காரர்களும் சரி அனைவருமே “குகநாதன் என்பவர் ஒரு பிழைப்புவாதி அன்று புலிகள் முதல் இன்று ராஜபக்சே டக்ளஸ் வரை யாருடனும் தனது ஆதாயத்துக்காக கூட்டு சேரக்கூடிய ஒரு நேர்மையற்ற மனிதர் பல பேரை நம்ப வைத்து ஏமாற்றிய மோசடிப்பேர்வழி” என்பதை வெவ்வேறு அளவுகளில் ஒப்புக் கொள்கிறார்கள். “நான் யாரையும் ஏமாற்றியதில்லை” என்று குகநாதனே கூட சொல்லிக்கொள்ளவில்லை. “அவ்வாறு மற்றவர்களை ஏமாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத தான் தள்ளப்பட்டதை”த் தான் விவரிக்கிறார்.

தங்களாலேயே மோசடிப்பேர்வழி என்று மதிப்பிடப்படும் ஒரு நபர் “சென்னையில் வைத்து தன்னைக் கடத்திப் பணம் பறித்து விட்டதாக” செழியன் நாவலன் அருள் எழிலன் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மை இருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூட இரயாகரனுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. //

சம்பவங்களின் உண்மைகள் குகநாதனின் சொற்களில் மட்டும் வைத்துப் பார்க்கப்படவில்லை. ஆனால் கட்டைப்பஞ்சாயத்து சரியானதா, கடத்தல் சரியானதா என்பதே இங்குள்ள மையமான கேள்வி. இக் கேள்வியை விலத்தி வைத்துவிட்டு குகநாதன் குணவியல்புகளை நம்புவது நம்பாமல் விடுவததென்பதல்ல இங்குள்ள கேள்வி.


இது கட்டைப்பஞ்சாயத்தா இல்லையா? பணத்தை மீளப்பெறக் கையாண்ட வழிமுறைகள் சரியா தவறா என்பதே இங்குள்ள கேள்வி. அதனை நாவலன் செய்திருந்தால் என்ன, யார் செய்திருந்தால் என்ன, அது அரசியல் ரீதியில் சரியானதென விளக்கமுடியுமா?

//சென்னையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்படுபவர்கள் ம.க.இ.க மற்றும் வினவு தளத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பது இரயாகரனுக்கு தெரிந்ததுதான். எனினும் இச்சம்பவம் குறித்து எழுதுவதற்கு முன்னால் அவர் எங்களிடம் தொடர்பு கொள்ளவோ விசாரிக்கவோ இல்லை. இரயாகரன் நீண்ட நாட்களாக எம்முடன் தொடர்பில் உள்ளவர் என்பதால்இ அவர் இவ்வாறு எங்களிடம் விசாரித்திருக்க கூடும் என்று வாசகர்கள் யாரேனும் தவறாக கருதிக்கொண்டிருந்தால் அதனைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை குறிப்பிடுகிறோம்.//

குற்றங்களை வெளிக்கொணரும்போது அவர் யாருடன் தொடர்பில் உள்ளார் யாருடன் தொடர்பில் இல்லை என்பது அவ்வளவு முக்கியமானதா என்ன?

 //எங்களைப் பொருத்தவரை வினவு தளம் தொடங்கிய பின்னர்தான் எமக்கு சபா.நாவலன் அறிமுகம். புதிய திசைகள் குழுவினருடன் பொது முழக்கங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் – சமீபத்திய நிகழ்வு. அதற்கு முன் மகஇக செயலரின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்திருக்கிறது. புதிய திசைகள் சார்பில் லண்டன் வானொலிப் பேட்டி ஒலிபரப்பானது. ஆபரேசன் கிரீன் ஹன்ட் மற்றும் நேபாளப் புரட்சியில் இந்தியத் தலையீட்டுக்கு எதிராக நாவலன் மற்றும் தோழர்கள் இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

புதிய திசைகள் குழுவினருடன் மகஇக இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை சீர்குலைப்பதற்கு தான் முயற்சிப்பதாக நாவலன் பிரச்சாரம் செய்தார் என்று இரயாகரன் எழுதியிருக்கிறார். அத்தகைய கருத்து எதையும் நாவலன் எம்மிடம் கூறியதில்லை.//

உங்களுக்கு இரயாகரன் அவ்வாறு பிரச்சாரம் செய்தார் என கூறியிருக்காவிட்டால், லண்டனில் அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்யாததாகி விடமுடியுமா?

//இதற்கு மேல் நாவலனுடன் எமக்கு உள்ள தொடர்பு பற்றிய விளக்கங்கள் இங்கே அவசியமற்றவை என்று கருதுகிறோம்.

அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப்பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களைப் போலவே அவரும் புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை. அவருடன் தீவிர கருத்து வேறுபாடு கொண்ட பத்திரிகையாளர்கள் கூட அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கியதில்லை. அவருடைய சகோதரரான அருள் செழியனுடன் எங்களுக்கு தொடர்பிருந்த்தில்லை.//

புலிகள் பற்றிய அருள் எழிலனின் அபிப்பிராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சுப் போடும் விமர்சனங்களை யார் செய்தார்களோ அவர்களை நோக்கி இக் கேள்வி செல்லட்டும். ஆனால் அவரது சம்பந்தம் பற்றி கேள்வி எழுப்பினால் அது அவர் புலிகள் மீது கொண்டிருந்த அபிப்பிராயத்தின் மேலான காழ்ப்பில் எழுந்த அவதூறு என குறிப்பிடுவது பொருத்தமில்லை. இது இங்கு பொருத்தமான வாதம் அல்ல.

இன்றைக்கு புலிகளின் மேல் அபிப்பிராயம் கொண்டிருந்த அருள் எழிலன் மீளாய்வு செய்து தன்னை மாற்றிக் கொண்டு வருகின்றார். அது வரவேற்கப்பட வேண்டியதே. அன்று அவர் புலிகள் மேல் கொண்டிருந்த அபிப்பிராயம் புலிகளின் நேர்மையீனங்களையும் உள்ளடக்கியது தான். எனவே அவர்களது நேர்மையீனங்களையும் இன்று தான் அவரால் அறிய முடிகின்றது என்றால் அது எங்களது தவறல்ல. அல்லது புலிகள் பற்றிய நேர்மையீனங்களின் பின்புலத்தில் தான் அவரது அபிப்பிராயமும் கட்டப்பட்டிருந்தது எனின், அது அவரது நேர்மைக்கு அன்றைக்கும் இன்றைக்கும் குந்தகமானது தான். புலிகளுக்காக அன்று இயங்கியவர்கள் சடுதியாக இன்று மாறி தாங்கள் புலிகளல்ல என்று இன்று புலத்தில் புதிதாக அமைப்புக்களை உருவாக்கும் நச்சுச்சுழலுக்குள் மக்கள் மீண்டும் மயக்கப்படுகிறார்கள். புலிகளின் பிரமுகர்களாக இருந்தவர்களை அதன் பாசிசப் போக்குகளுக்கு குடைபிடித்தவர்களை சாமரம் வீசியவர்களை குஞ்சம் கட்டியவர்களை அரசியல் நியாயம் கற்பித்தவர்களை முன்னணியில் நின்றவர்களை பத்திரிகைத்துறையுடன் நின்று முண்டு கொடுத்தவர்களை, பணம் பறித்தவர்களை சேர்த்த பணத்தை முடக்கியவர்களை, சொந்த மக்களையே கருவறுத்தவர்களை எவ்வாறு நாங்கள் மதிப்பிடுவது?

//இக்குற்றச்சாட்டை இரயாகரன் தனது இணையதளத்தில் எழுப்பி அதனைத் தொடர்ந்து இதில் வினவு மற்றும் ம.க.இ.க வை தொடர்பு படுத்தும் பின்னூட்டங்கள் வரத் தொடங்குவதற்கு முன்னமேயே நாவலன் அருள் எழிலன் பிறகு அருள் செழியன் ஆகியோர் எங்களது தோழர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விசயங்கள் குறித்த தமது விளக்கத்தை அளித்தனர்.//

தமிழரங்கம் இவற்றை வெளிக்கொணரும் முன்பே உங்களுக்கு அவர்கள் விளக்கம் தந்தார்கள் எனில் அவர்கள் இங்கு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதை தாங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள. பிறகு இவை எவ்வாறு அவதூறு ஆகும்?.

இந்த சம்பவத்துக்கான விளக்கத்தைத்தானே பொது வெளியில் தமிழரங்கமும் கோரியிருந்தது? இது கட்டைப்பஞ்சாயத்து எனவும் கூறியிருந்தது.

உங்களுக்கு அந்த விளக்கத்தை அவர்கள் தர முன்வந்தார்கள் எனில் ஏன்? அந்த விளக்கம் என்ன?

அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அதன் அடிப்படையில் அவர்கள் இங்கு சம்பந்தப்படவுமில்லை தவறேதும் இழைக்கவுமில்லை என்றால் அவ்விளக்கம் என்ன?

அவர்களது அந்த விளக்கங்கள் அரசியல்ரீதியாக சரியென நீங்கள் ஏற்றுக்கொண்டல் அதை முன்வையுங்கள்.

//அவர்களது விளக்கங்கள் மற்றும் தமிழரங்கம் தேசம் நெற்றில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை பரிசீலித்ததன் அடிப்படையில் நாவலன் அருள் எழிலன் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுளை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இப்பிரச்சினையில் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில் ஆவணங்கள் சாட்சியங்கள் சத்தியப் பிரமாணங்கள் ஆகியவை ஒரு அளவுக்குத்தான் பயன்படுகின்றன. சத்தியம் செய்பவனின் யோக்கியதை என்ன என்பது பற்றிய நமது மதிப்பீடு அவர்களது வாயிலிருந்து வரும் சொல்லை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுடைய சமூக செயல்பாடு நடைமுறை ஆகியவற்றிலிருந்தே இத்தகைய மதிப்பீட்டை நாம் வந்தடைகிறோம். குகநாதன் இந்தப் புறம். நாவலன் அருள் எழிலன் அந்தப்புறம் – இவர்களது கூற்றுகள் நடந்த நிகழ்ச்சி பற்றி இரு வேறு சித்திரங்களை வழங்கும் நிலையில் நாங்கள் எழிலனையும் நாவலனையும் நம்புகிறோம். செழியனுடன் இத்தனை காலம் எங்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததில்லையெனினும் அவர் குறித்த எழிலனின் மதிப்பீட்டை நம்புகிறோம். இது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல.//

இத்தனை காலமும் குகநாதனுடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்பு எந்த வகைப்பட்டது. இதில் எங்கு நேர்மை பூத்துக்குலுங்கியது. அருள் எழிலன் செழியன் மீதான மதிப்பீட்டில் குகநாதனுடைய நேர்மையீனங்களும் பணக்கொடுப்பனவுகளும் ஏன் மறைந்திருந்தனவா? வெளிச்சத்துக்கு வந்தனவா? கூடியிருக்கும் வரை நண்பன். குழப்பம் வந்தவுடன் மட்டும் தான் குகநாதன் கொள்ளைக்காரனா? அன்றைக்கு உறவு செழித்தது. இன்றைக்கு உறவு முறிந்தது. அன்றைய குகநாதன் தான் இன்றைய குகநாதன். ஒரு சின்ன மாற்றம். அன்றைக்கு அவர் புலிக்குகைக்குள் இருந்தார். இன்று அரச பாசிசக் குகைக்குள் இருக்கின்றார். ஆனால் அவரது நேர்மையீனத்தோடு கூட்டு வைத்திருந்தவர்கள் இன்று தங்களை மட்டும் சுற்றவாளிகளாக்கியது எவ்வாறு?

 

//இரயாகரனும் ஜெயபாலனும் குகநாதனை நம்புகின்றனர். “குகநாதன் தவறான நபராகவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் அவர் கூறுவது உண்மையாக இருக்க முடியாதா?” என்ற கேள்வி எழலாம். அந்த சாத்தியக்கூறை நாங்கள் நிராகரிக்கவில்லை.

அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையில் இரயாகரனுடைய கட்டுரை அவருடைய விசாரணை முறை விவாத முறை தீர்ப்பு வழங்கும் முறை குகநாதனுக்கு அவர் வக்காலத்து வாங்கும் முறை ஆகியவை பற்றியெல்லாம் எங்களுக்கு விமரிசனங்களோ கேள்விகளோ இல்லை என்று கருதிவிடவேண்டாம்.//

குகநாதனுக்கு யாரும் வக்காலத்து வாங்கவில்லை. இங்கு நபர் அல்ல பிரச்சனை. நடந்த நிகழ்வுகள் எதிரிக்காயிருப்பினும் சரியானதா என்பதே கேள்வி. இப்படிப் பார்த்தால் சம்பவத்தை தவிர்த்து நடந்தவற்றை மறுத்து நாவலனுக்கு வக்காலத்து வாங்குவதாக உங்களையும் நாங்கள் குறிப்பிட முடியும்

//இப்பிரச்சினையை பொதுத் தளத்துக்கு அவர் கொண்டு வந்துவிட்டதால் அவை குறித்து அவருடன் தனிப்பட்ட முறையில் பேசவோ விவாதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. அது சரியும் அல்ல.
குகநாதனிடம் கேட்பதற்கும் குகநாதனின் பேட்டியை வெளியிட்ட தேசம் நெற் ஜெயபாலனிடம் கேட்பதற்கும் கூட எங்களிடம் கேள்விகள் உள்ளன.

அத்தகைய கேள்விகளை நாங்கள் இணையத்தில் எழுப்புவதும் விவாதிப்பதும் கொசிப்புக்கும் அரட்டைக்கும் மட்டுமே பயன்படும். குற்றம் என்ன குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை ஒருபோதும் பயன்படாது என்று கருதுகிறோம்.

ஆகவே இத்தகையதொரு பிரச்சினையில் இணையத் தளத்திலேயே குறுக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது பெயர் தெரியாத நபர்களின் கட்டுரையை வெளியிட்டு முகவரியை வெளியிட விரும்பாத பின்னூட்டக்காரர்களின் மூலம் சேறடிப்பது என்ற வழிமுறைகளை உண்மையை அறிய விரும்பும் யாரும் ஏற்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.//

இது இனியொருவுக்கே மிகமிக பொருந்தும். அங்கே தான் எக்ஸ்(xxx)  வை கள் அதிகம். மற்றவர்களுடைய பெயர்களை களவாடி பின்னூட்டமிடும் பின்னூட்டங்கள் அதிகம். இது இனியொரு மீதான விமர்சனமா?

//நாவலன் எழிலன் செழியன் ஆகியோர் மீது இரயாகரன் வைத்திருப்பது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. அதற்கு அவர் நாவலனிடம் கோரியிருப்பது சுயவிமரிசனம். “ஆள் கடத்தல் பணம் பறித்தல் மஃபியா வேலை மாமா வேலை”  என்று அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சுயவிமரிசனம் எப்படி தீர்வாகும்? இது என்ன வகை மார்க்சிய லெனினிய நடைமுறை என்று எங்களுக்கு விளங்கவில்லை. இரயாகரன் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதே எம் கருத்து.

ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதைப் போல இப்பிரச்சினையில் நாவலன் எழிலன் ஆகியோர் பற்றி நாங்கள் தெரிவித்திருப்பது எங்களது கருத்து மட்டுமே. தீர்ப்பு அல்ல. முழுமையானதொரு விசாரணை இப்பிரச்சினையில் நடந்துவிட்டதாக நாங்கள் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருதவும் இடமில்லை.
நடந்திருக்கும் பிரச்சினையின் அடிப்படை ஒரு பணப்பரிவர்த்தனை விவகாரம். இதில் நியாயம் பேச வருபவர்கள் என்ன நடந்தது என்று இரு தரப்பினரையும் முழுமையாக கேட்கவேண்டும். தீர்ப்பு கூற வருபவர்கள் அந்த தீர்ப்பின் அமலாக்கத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்களும் குற்றம் சாட்டுபவர்களும் விசாரணையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
எமது தரப்பில் நாவலன் அருள் எழிலன் அருள் செழியன் ஆகியோரிடம் இதனைக் கூறிவிட்டோம். குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை நகரத்தில் ஒரு பகிரங்க விசாரணைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.//

அப்போ நீங்கள் அவர்களுடன் உரையாடிய பின் எடுத்த முடிபுகள் தான் இவை. அவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தான் இந்த அழைப்பு. மற்றவர்கள் இந்தியாவுக்கு வரக்கூடிய சூழல் இருக்கின்றதா என்ற விபரங்களைக் கூட அறிவதற்கு மறுபக்கத்தில் இருக்கக் கூடிய தொடர்புகளை துண்டித்துவிட்டு விசாரணைக்கு நாடுகடந்து வருமாறு அழைப்பது முன்னேற்பாடான முடிவல்லவா?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை.

//இப்பிரச்சினையில் எந்த விதத்திலும் மகஇக விற்கு தொடர்பில்லை என்ற போதிலும்//

தொடர்பு இல்லைத்தான். ஆனால் உங்களுக்கு மற்றையவர்கள், தமிழரங்கம் அதனை வெளிக்கொணர முன்னரே விளக்கம் தந்தார்கள் எனில் அது எதற்காக? தாங்கள் கேட்டுக்கொண்டதன் பட்சத்திலா அல்லது தாமாகவே முன்வந்தார்களா? தாமாகவே முன்வந்தார்கள் எனின் ஏன்?

//குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா என்று அறிந்து கொள்வதில் இரயாகரனை விடவும் ஜெயபாலனை விடவும் நாங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனென்றால் உங்களது இணையத்தளங்களில் நாங்கள் சேறடிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.//

தமிழரங்கம் ம.க.இ.க மீது எங்கே எப்போது சேறடித்திருக்கின்றது என்பதை குறிப்பிட முடியுமா? நாங்கள்  எப்போதும் கட்டுரைகளுக்கு ஊடாகவே பதிலிறுப்பவர்கள். எனவே அப்படியான சேறடிப்புக் கட்டுரைகளை சுட்டிக்காட்ட முடியுமா?

ம.க.இ.க மீது அதன் மையமான அரசியல் மீது உடன்பாடு கொண்டு நாங்கள் இணையத்தளம் உருவாவதற்கு நீண்ட காலம் முன்பாகவே புதிய ஜனநாயகம், புதிய கலாச்சார ஆக்கங்களை புலத்தில் கட்டுரைகளாகவும் முழு இதழ்களாகவும் எடுத்துச் சென்றோம். பல திடீர் மார்க்சியவாதிகளின் வருகைக்கு முன்பாகவே இவ்விதழ்களை குறிப்பிட்டளவு அறிமுகப்படுத்தியிருந்தோம்.

இணையம் ஆரம்பித்ததன் மறுகணமே ம.க.இ.க வின் ஒலி ஒளி கலை நிகழ்வுகளையும் நாங்கள் வலையேற்றுவதற்கும் வெளிக்கொணரவும் உழைத்ததன் பயனாய் அவைகள் இணையத்தில் பார்வைக்கு கிடைத்தன. புலிகள், அரசு மற்றும் ஏனைய இயக்கங்கள், குழுக்கள் மத்தியில் தனியே நின்று மேற்கொண்ட இவ்வேலைகளுக்கு மத்தியிலும் சர்வதேச கடப்பாடுகளை நாம் மறக்கவில்லை.

ம.க.இ.க எமது தோழமை அமைப்பு அதனது கருத்துக்களின் வீச்சுக்களுக்கு இணையத்தில் நாம் முதன்முதலாக களம் அமைத்தோம். இதன் பின்னரே வினவு தளம் வெளிவந்தது. அதன் வரவானது மேலும் எங்களுக்கு இணையத்தில் தோழமையான இன்னுமொரு வலைப்பதிவு என்ற வகையில் உற்சாகம் தந்தது. இவ்வாறு நிலைமைகள் இருக்க நாங்கள் சேறடிப்பதாக நீஙகள் கூறுவது வேடிக்கையானது தான். நாங்கள் ஒரு தடவை கருத்தியல்ரீதியில் ரதி எழுதிய வரலாறு தொடர்பாய் வினவுடன் முரண்பட்டு விவாதம் நடத்தினோம். வினவு என்பது வினவுதற்காகத்தானே முரண்பாடுகள் எழுகின்றபோது அவற்றை வினவுவது தவறானதல்லவே. தாங்கள் குறிப்பிடும் சேறடிப்பு என்பது என்ன என்பது புரியவில்லை.

 
//குற்றம் சாட்டுகின்ற இரயாகரன் குகநாதன் ஜெயபாலன் ஆகியோர் சென்னைக்கு வரட்டும். //


எப்படி நாங்கள் வரமுடியும்? இரயாகரன் இலகுவாக இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு ஏதுவாகவா?

//அவர்களது நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் மற்றும் நாவலன்இ செழியன்இ எழிலன் ஆகியோரின் நம்பிக்கைக்கு உரிய பொதுவான நபர்கள் ஆகியோரின் முன்னிலையில் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. வழக்குரைஞர்களோ நடுநிலையாளர்களோ விசாரணையை நடத்தட்டும். கேள்விகள் பதில்கள் குறுக்கு விசாரணைகள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாகப் பார்வையாளர் முன்னிலையில் நடக்கட்டும். புனை பெயர்களில் பின்னூட்டம் போட்டவர்கள் மகஇக வின் மீது சேறடித்தவர்கள் தம் கையில் ஆதாரம் இருப்பதாக மார்தட்டுபவர்கள் என யாராக இருந்தாலும் நேரில் வரலாம். தமது குற்றச்சாட்டுகளை கூறலாம். முறையாக விசாரணை நடப்பதை உறுதி செய்து கொள்ள அவை அனைத்தையும் ஒளிப்பதிவும் செய்து கொள்வோம்.

குகநாதன் சட்டப்படி கைது செய்யப்பட்டாரா- கடத்தப்பட்டாரா தற்போது “கட்டப் பஞ்சாயத்து” என்று கூறும் ஏற்பாட்டுக்கு அவர் அன்று உடன்படக் காரணம் என்ன எவ்வளவு பணம் கொடுத்தார் யாரிடம் வாங்கிக் கொடுத்தார் இதில் நாவலனின் பாத்திரம் என்ன குகநாதனுக்கும் செழியனுக்கும் இடையிலான வணிக உறவில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் என்ன அவற்றில் ஏமாற்றியது யார்-ஏமாந்தது யார் குகநாதன்-புலிகள் குகநாதன்-டக்ளஸ் குகநாதன்-ராஜபக்சே அரசு இவர்களுக்கிடையிலான உறவு என்ன 2008 நவம்பரில் நாவலனை அவதூறு செய்த தேசம் நெற்றை மறுத்து நாவலனின் நடத்தைக்கு நற்சான்றிதழ் வழங்கிய இரயாகரன் தற்போது அவரைக் “கிரிமினல்” என்றும் குகநாதனை “சூழ்நிலையின் கைதி” என்றும் மதிப்பிடுவதற்கான பின்புலம் என்ன.. என்பன போன்ற எல்லாக் கேள்விகளுக்கான விடையையும் அனைவர் முன்னிலையிலும் சம்மந்தப் பட்டவர்கள் கூறட்டும்.//

இங்கேயும் நீங்களும் ஒரு சுயவாக்குமூலம் தருகின்றீர்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பின்னணியில் குகநாதனிடமிருந்து அறவிட கையாளப்பட்ட வழிமுறையில் குறிப்பிடப்படும் நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் அவை விளக்கமளிக்கப்படவேண்டியவை என்பதையும்.

இது தானே எல்லாருடைய கேள்வியும். அதனை எவ்வாறு அவதூறு அல்லது அவர்கள் சம்பந்தப்படவில்லை என மறுக்கிறார்கள் என கூறமுடியும்.

//இறுதியில் விசாரணைக்குப் பொறுப்பேற்கும் நடுநிலையாளர்கள் தமது முடிவைச் சொல்லட்டும். “ஆள் கடத்திப் பணம் பறித்தார்கள்” என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாவலன் அருள் எழிலன் அருள் செழியன் ஆகியோர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நாங்களே முன் நின்று ஏற்பாடு செய்கிறோம். அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை பாதிக்கப் பட்டவர்கள் கூறட்டும்.

விசாரணையின் முடிவில் ஒத்த கருத்து எட்டப்படாமலும் போகலாம். ஆனால் விசாரணையின் ஒளிப்பதிவைப் பார்க்கின்றவர்கள் உண்மை யாரிடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து நீதிமன்றத்தில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்பினால் அதற்குத் தேவையான வழக்குரைஞர்களையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.//

ஏற்கனவே இருக்கின்ற ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என்பவை எதில் அடங்கும் அவை எங்கே?

//தான் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகவும் சென்னை வருவதில் தனக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றும் தேசம் நெற்றில் குகநாதன் கூறியிருக்கிறார். ஒரு வேளை அவருக்கு வேறு வழக்குகளோ சிக்கல்களோ இருந்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டியது குற்றம் சாட்டியவரது தனிப்பட்ட பொறுப்பு. குகநாதனை அழைத்து வரவேண்டியது அவரது குற்றச்சாட்டை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கிய இரயாகரனின் பொறுப்பு.

இது போகிறபோக்கில் ஒருவர் மீது மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்ட விமரிசனம் அல்ல. அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருக்கும் ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு. எனவேஇ குற்றத்தை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் பொறுப்பு. அந்தப் பொறுப்பிலிருந்து வழுவும் உரிமை அவர்களுக்கு கிடையாது.
“குற்றம் சாட்டப்படுபவன்தான் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்பது இந்தியாவில் அமலில் இருந்த பொடா சட்டத்தின் அணுகுமுறை. இந்து பாசிஸ்டுகள்தான் இச்சட்டத்தின் தீவிர ஆதரவாளர்கள். எனவே இத்தகைய நீதி வழங்கும் முறையை பாசிஸ்டுகளின் அணுகுமுறை என்றும் கூறலாம். புலிப்பாசிசத்தை எதிர்ப்பதாக கூறுபவர்களின் விசாரணை முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்கவேண்டும்.//

ஆமாம் புலிப்பாசிசத்தை எதிர்ப்பவர்களின் நடைமுறை ஜனநாயகபூர்வமானதாக இருந்ததா என்பதே எமது கேள்வியும். குகநாதன் கடத்தப்பட்டது அவரிடமிருந்து பணம் வசூலிப்பட்டது அவரது மனைவியிடம் நடாத்தப்பட்ட உரையாடல் என்பன ஜனநாயகபூர்வமானதா என்ற கேள்வியைத் தானே நாங்கள் கேட்டோம்.

//பிறக்கும்போதே கருச்சிதைவு செய்யப்பட்ட ஈழப்போராட்டம் புலிகள் என்றொரு பாசிச இயக்கத்தை மட்டுமல்ல அதற்கு சற்றும் குறைவில்லாத பிற இயக்கங்களையும் ஜனநாயக முகமூடி அணிந்த பல வண்ணப் பிழைப்புவாதிகளையும் தன்னை மையப்படுத்தி அனைவர் மீதும் சேறடிக்கும் புலம்பெயர் அறிவுஜீவிகளையும் பெற்றெடுத்திருக்கிறது. “எது தனிப்பட்ட வன்மம்-எது அரசியல் விமரிசனம் எது அம்பலப்படுத்தல்-எது ஆள்காட்டி வேலை எது புத்தாக்கம்-எது சீர்குலைவு” என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு சீர்கெட்டிருக்கும் இந்தச் சூழலைக் காட்டிலும் எதிரிகளுக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. இப்பிரச்சினை விவாதிக்கப்படும் முறையையும் இதற்கு வரும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது அம்சா தன்னுடைய பணியை இலண்டனில் திறம்பட செய்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.//

நாங்கள் எல்லோருமே தளத்திலிருந்த இயக்கங்களிலிருந்து இயங்கி விடுபட்டு வந்தவர்கள் தான். உங்களைப் போன்ற அமைப்பாக மக்கள் மத்தியில் இயங்கமுடியாத சூழல் எங்களுடையது. அதனாலேயே தான் நாங்கள் எங்கள் கடந்தகாலத்தைய அரசியல் பாத்திரம் குறித்து விரிவாகப் பேசப்படவேண்டிய கடப்பாடுடையோம். ஏனெனில் இன்னும் நாங்கள் எவற்றுக்கும் பொறுப்போ பதிலோ கூறமால், தொடர்ந்தும் அவ்வரசியலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ளாமல் மக்களுக்கு அக்குவேறு ஆணிவேறாக எமது கடந்தகாலப் பாத்திரங்களை அவர்கள் முன் போட்டுடைக்கும் தார்மீகத்திலிருந்து நழுவிவிட முடியாது. கடந்தகாலத்தை மறைத்து மறுத்து திடீர் என அரசியலில் அவதாரம் எடுக்கும் அல்லது புலத்திலிருந்து மீண்டும் தங்களைப்பற்றிய கடந்தகாலத்தை மக்களுக்கு தெரியப்படுத்தாது புதுப்போர்வைகளுக்குள் புகுந்து மீண்டும் வெளியே வரும் நபர்கள் குறித்து, அவ்வாறான வேளைகளில் கடுமையான விமர்சனங்களை நாங்கள் முன்வைக்கின்றோம். அதனை நாங்கள் தொடர்ச்சியாக செய்வோம். இதனை இலகுவாக அவதூறு என அவர்கள் திசை திருப்புவார்களாயின் அது பற்றிய உரைகல்லுக்கு மக்கள் மத்தியிலான நடைமுறை என்பது புலத்தில் இல்லாதபட்சத்தினாலேயே, அந்த நடைமுறை என்ற உரைகல் வாய்க்கப்பெற்ற உங்களுக்கு நாங்கள் வரட்டுவாதிகளாக தெரியக்கூடும்.

நாங்கள் விவாதித்து ஏற்றுக்கொண்ட ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே ஒரு பொதுவேலை முறைக்குள் நுழைந்திருக்கின்றோம்.

அனைவர் மீதும் சேறடிக்கும் புத்திஜீவிகளாக எம்மை யாரும் வர்ணனை செய்து கொண்டால் அது எமது தப்பில்லை. அது அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வழி.

இலங்கையில் உள்ள புதிய ஜனநாயகக்கட்சியைப் பொறுத்தளவில் அவர்களை கொள்கையளவில் நாங்கள் அவர்களின் அரசியலை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவர்களது நடைமுறை சார்ந்து வர்க்க சக்தியாகவே நாங்கள் கணிப்பிடவில்லை. அதை அவர்கள் நிறுவவில்லை. அவர்களது மேல் நேரடியான விமர்சனங்களை நாங்கள் முன்வைத்திருந்தாலும், பின்வழியாக புறத்தில் விமர்சனம் செய்வது கிடையாது. எமது பகிரங்க விமர்சனங்களுக்கு வெளியில், இரகசியமான வழிகளில் எந்தப் பிரச்சாரங்களையும் அவர்களுக்கு திட்டமிட்டு நாங்கள் என்றும் செய்தவர்களல்ல. அது எங்கள் மேலான ஒரு அபாண்டமான ஒரு குற்றச்சாட்டு.

//நாவலன் அருள் எழிலன் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளினால் எங்கள் மீது விழுந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகத்தான் இப்படி ஒரு விசாரணையை முன்மொழிகிறோம் என்று யாரும் தவறாக கருதிக் கொள்ளவேண்டாம். மகஇக வின் நேர்மையின் மீது எமது அரசியல் எதிரிகள் கூட கேள்வி எழுப்பியதில்லை. மக்கள் மத்தியில் நாங்கள் பெற்றிருக்கும் மதிப்பை ஐரோப்பிய தளங்களில் அனானிப் பெயர்களில் போட்டுக் கொள்ளப்படும் பின்னூட்டங்களால் எதுவும் செய்து விட முடியாது.

இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கி நிற்பது சரியல்ல. எனவே தலையிடுகிறோம். ஒருவேளை எங்கள் மதிப்பீடு தவறு என்று விசாரணையில் தெரிய வருமானால்இ எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை. எனவேதான் தைரியமாகத் தலையிடுகிறோம். எல்லோர் மீதும் எல்லோரும் காறி உமிழ்ந்து கொள்ளும் இத்தகைய விசாரணை முறையிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இணைய உலகத்தை விடுவிப்பதற்கான சிறிய முயற்சியாகவும் நாங்கள் தலையிடுகிறோம். அங்கே காறி உமிழ்ந்த எச்சில் எங்கள் மீதும் பட்டுத் தெறிக்கின்ற காரணத்தினாலும் தலையிடுகிறோம்.

இதுதான் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் முன்வைக்கும் வழிமுறை. குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் இரயாகரன்இ குகநாதன்இ ஜெயபாலன் ஆகியோர் இந்த விசாரணையில் பங்கு பெறுவது குறித்த தங்களது பதிலை தம் இணையதளத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலோஇ மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இணையத்தில் புழங்கும் மகஇக வின் ஆதரவாளர்கள் பதிவர்கள் யாரும் “நல்லெண்ண முயற்சி” என்று கருதிக் கொண்டு இரயாகரன் ஜெயபாலன் நாவலன் போன்ற இப்பிரச்சினையில் தொடர்புள்ள யாருடனும் இது குறித்துத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுருத்துகிறோம்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

தமிழ்நாடு//

தமிழரங்கம்

Last Updated on Sunday, 03 October 2010 21:17