Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அரசியல் நாகரீகமற்ற சந்தர்ப்பவாதிகளின் மொழி

அரசியல் நாகரீகமற்ற சந்தர்ப்பவாதிகளின் மொழி

  • PDF

மனிதவிரோதிகளின் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான், எமது மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான், எமது மொழிக்கு முன்னால் வந்தது. இதுபோல் தான் புலிகளின் பாசிசத்துக்கு முன்னால் வந்தது பேரினவாதம். புலிப்பாசிசம் பேரினவாதத்தை உருவாக்கவில்லை. அதுபோல் தான் இதுவும்.

 

அரசியல் நாகரீகமற்ற சர்தர்ப்பவாதிகள் எம்மைப் பார்த்து கூறுகின்றனர் 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடையில்" எழுதும்படி. ஏதோ மொழி நாகரீகம் என்கின்றது தேசம்நெற். சரி, இதை எமக்கு சொல்வதற்கு முன்னர், உங்கள் அரசியல் நாகரீகம் தான் என்ன? அதை முதலில் சொல்லுங்கள்.

 

அரசியல் பொது வாழ்வில் நாகரீகமாக வாழமுடியாத இழிவான சமூகவிரோதக் கும்பலுடன் (புலி மற்றும் புலியெதிர்ப்பு), உங்களுக்கு என்ன அரசியல் உறவு? அதை முதலில் சொல்லுங்கள். நீங்கள் அரசியல் நாகரீகம் உள்ளவர்கள் என்றால், நாகரீகமற்ற அந்த அரசியலைப் பற்றி முதலில் பேசுங்கள், அம்பலப்படுத்துங்கள். அதைவிட்டுவிட்டு, நாம் அந்த நாகரீகமற்ற பொறுக்கிகளைப் பற்றி கதைப்பதை தடுப்பது தான், தேசம்நெற்றின் அரசியல் நாகரிகமோ? இந்த அரசியல் நாகரீகமோ. 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழி"யால் கதையுங்கள் என்று கூறுவதன் மூலம், அந்த போக்கிரிகளின் அரசியல் ஈனச்செயலை பாதுகாப்பது தான்.

 

மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற புறப்பட்ட நீங்கள், உங்கள் இந்த அரசியல் நாகரீகம் பற்றி எதுவும் சொல்லமாட்டீர்கள். நாங்கள் தான் அதைச் சொல்ல முடியும். இவர்களின் அரசியல் நாகரீகமோ, புலிக்கும் புலியெதிர்ப்புக்கும் இடையில் நடுநிலை வேஷம் இட்டு படுத்துக்கிடப்பது. இவர்களின் அரசியல் என்பது, கடற்கரையில் படுத்துக் கிடக்கும் மேட்டுக்குடிகளின் நாகரீக நினைப்பு. புலியையும் புலியெதிர்ப்பையும் அனுசரித்து அரசியல் விபச்சாரம் செய்வதே, இவர்களின் அரசியல் நாகரீகம். மக்களைக் கொன்று போடுவதற்கு உதவுவதுதான், இவர்களின் அரசியல் நாகரீகம். நாம் மட்டும் தான் இரண்டையும் எதிர்க்கின்றோம். வேறு யார் தான் இரண்டைப் பற்றியும் அன்றும் இன்றும் கதைக்கின்றனர். அதனால் இரண்டையும் அனுசரித்த படி, எம்மை எதிர்க்கின்றனர்.

 

தேசம்நெற்றுக்கு தெரிந்த அரசியல் நாகரீகம் இது. மக்களின் நாகரீகம் புலிக்கும் புலியெதிhப்புக்கும் எதிரானது. மக்களின் எதிரிகளுடன் கூடி கும்மாளம் அடிப்பது தான், தேசம் நெற்றின் இணைய அரசியல் நாகரீகம்.

 

யாரெல்லாம் இப்படி நாகரீகம் பேசிக்கொண்டு வருகின்றனரோ, அவர்கள் தாம் யார் என்று சொல்வதில்லை. கடந்த காலத்தில் என்ன அரசியல் செய்தனர். சமகாலத்தில் என்ன அரசியலை முன் வைக்கின்றனர் என்று எதையும் மூடி மறைக்கும் கடைந்தெடுத்த அரசியல் போக்கிரிகள் தான் இவர்கள். தம்மை அரசியல் ரீதியாக மூடிமறைத்துக் கொள்கின்றனர். இதனால் மக்களுடன் அதைப் பேசுவது கிடையாது. அவர்கள் தான் மொழி நாகரீகம் பற்றி பேசுகின்றனர். உங்களுக்கு அது பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதியுண்டு?

 

நீங்கள் சொல்வதா மொழி. மொழி என்பது ஆளும் வர்க்கத்தின் பண்பாடாகி, அதன் மொழியாகிக் கிடக்கின்றது. அந்த ஆளும் மொழிப் பண்பாட்டை நாகரீகம் என்பது, மக்களின் அடிமைத்தனத்தை போற்றுவது தான்.

 

மக்களை கொன்று போட்டவனை, மக்களை இழிவாடுபவனை எப்படி நாம் அழைப்பது? இவர்களை அழைக்க 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடை" என்று ஒன்று உண்டோ? மக்களின் முதுகில் குத்தி அரசியல் விபச்சாரம் செய்பவனை எப்படி அழைப்பது? அண்ணே அரசியல் விபச்சாரம் செய்யாதையுங்கோ, என்று காந்தியின் அகிம்சை வழியில் மொழியைக் கையாள வேண்டுமோ? உங்களைப் போல், மக்களின் எதிரிகளை நாம் கெஞ்சியும் கொஞ்சியும் உறவாடுவது கிடையாது. மக்கள் அவர்களை எந்த மொழியில் எப்படி அணுகுகின்றரோ, அதை அப்படி அந்த மொழியில் நாம் எழுதுகின்றோம். மக்களின் கண்ணீரை, மொழிகளில் வடிகட்டுவதற்கு நாங்கள் தயராகவில்லை. அது அரசியல் பொறுக்கிகளுக்கேயுரிய செயல் தான். கடந்தகாலத்தில் நாம் போராடிய வர்க்க மொழி மட்டும்தான், புரட்சிகரமான அரசியல் மொழியாக இருந்தது. வேறு யாரின் மொழி புரட்சிகரமாக இருந்தது? காட்ட முடியுமா? முடியாது, முடிந்த வரலாற்றில் அதற்கு இடமில்லை.

 

மக்களின் கண்ணீரை, மொழிகளில் வடிகட்டுவதற்கு நாங்கள் தயராகவில்லை. அதை உங்கள் விபச்சார விடுதியில் செய்யுங்கள். மக்களின் விடுதலையைப் பேசுகின்றவன், அரசியல் பொறுக்கியாக வாழும் போது, மொழி மூலம் அதனைப் பாதுகாக்கின்ற அரசியல் பொறுக்கிகள் அல்ல நாங்கள். அவன் உங்களுக்கு நாகரீகமான கனவானாக இருக்கலாம். எங்களுக்கு அப்படியல்ல. அவன் எங்கள் முன் பொறுக்கி தான். உங்களைப் போல் எத்தனை அரசியல் பொறுக்கிகளை, எமது போராட்டத்தில் நாங்கள் அடையாளம் கண்டவர்கள்.

 

இந்த திடீர் புதிய வேஷம், ஏன் எதற்காக ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையின் இன்றைய சூழலில், ஆளும் வர்க்கங்களே இவர்களை முன்னிறுத்துகின்றது. புலியும், புலியெதிர்ப்பு அரசியலும் முடிவுக்கு வருகின்றது. வெற்றிடத்தைக் கண்டு ஆளும் வர்க்கம் அலறும் எச்சரிக்கை தான், இப்படி தேசம் நெற் ஊடாக குசுவுகின்றது. ஏற்படும் அரசியல் வெற்றிடம், மீண்டும் பிற்போக்குக் கருத்தால் நிரப்பப்பட வேண்டும். இது தான் இந்தியா இலங்கை உளவு அமைப்புக்களின் அரசியல் பணி. அதை நோக்கிய அசைவுகள் தான், திடீர் தேசம்நெற்றின் புதிய வருகை. அதனுடன் சேர்ந்து இயங்கும் புதிய தேசம் என்ற, எனக்கு எதிரான அவதூறு இணையத்தின் தோற்றமும் கூட. இன்னமும் இன்னமும் இவர்கள் பல இணையத்தை தோற்றுவிப்பார்கள்.

 

இவர்கள் எல்லாம் தம்மை இடதுசாரியாக காட்ட முனைகின்றனர். பலரை கொண்டு வந்து வலிந்து ஒட்டி விளையாடுகின்றனர். இணைய ஆசிரியர்களே புனைபெயர்களில் வந்து வக்கரிக்கின்றனர். தேசம் சஞ்சிகையில் இடதுசாரிகளை தொட்டுக்கொள்ள பயன்படுத்தியபோல், இங்கும் அதே வேஷம், அதே சேட்டை.

 

அரசியல் வெற்றிடத்தில் சரியான அரசியல் சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதே, இதன் பின்னால் உள்ள அரசியல் அடிப்படை. இதனால் புரட்சிகரமான செயலை சேறடிப்பது அவசியமாகின்றது. அதை அரசியல் ரீதியாக ஒருநாளும் இவர்களால் செய்ய முடியாது.

 

என்ன செய்ய முனைகின்றனர். தாம் அரசியல் ரீதியாக கூடித்திரியும் அரசியல் பொறுக்கிகளைப் போல் எம்மைக் காட்டி விட்டால், புரட்சியாவது அரசியலாவது. அதையே செய்ய முனைகின்றது தேசம்நெற். புதியதேசம் என்ற பெயரில், அவதூறுக்கு தனியான இணையம். வாழ்க புரட்சி.

 

தம்மையொத்த அரசியல் பொறுக்கிகள் போல், எம்மையும் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் அரசியல் போக்கை முறியடிக்க முனைகின்றனர். இதற்கு நாம் எதிர்த்து போராடும், புலி மற்றும் புலியெதிப்புக் கும்பலுடன் சேர்ந்து அதைச் செய்ய முனைகின்றனர். இது அவர்களின் அரசியல் நாகரீமாக உள்ளது. (இந்த வகையில் தேசம்நெற் சுற்றிச்சுற்றி கற்றன் நஷனல் வங்கிக் கொள்ளை பற்றி பேசுகின்றது. அதற்கான எமது விளக்கத்துக்கு, மறுக்க கூட துப்பு கிடையாது. தேசம்நெற் என்ன செய்கின்றது. அந்த அவதூறை மீண்டும் மீண்டும் வெட்டியொட்டி அரசியல் செய்கின்றது. வேறு எப்படித் தான் தேசம்நெற் அரசியல் செய்யமுடியும். அவர்களுக்கு இதைப் பற்றி பேசுவதைத் தவிர, வேறு மாற்று அரசியல் வழி கிடையாது. பாவம் அவர்கள் வெட்டி ஒட்டும் சிரமத்தை போக்க, இதுவரை சமூகவிரோத போக்கிலிகள் எமக்கு எதிராக எழுதிய முழுவதையும் நாம் தொகுப்பாக விரைவில் வெளியிடுகின்றோம். இனி மேல் சிரமப்படாமல் அதை வெட்டி ஒட்டுங்கள். எத்தனை நாளுக்கு இதை ஒட்டி தேசம்நெற் இந்த அரசியலை செய்யப் போகின்றது, என்று பார்ப்போம்.)

 

ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்ற புலிகள், இதே போல் வேட்டையாடிய புலியெதிர்ப்புக் கும்பல், இந்திய இலங்கை மற்றும் மேற்கு கைக்கூலிக் குழுக்களுடன் சேர்ந்து 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடையில்" கருத்து விவாதம் நடத்துகின்றனராம். உங்களை பொறுக்கி என்று சொல்லாமல், எப்படி நாம் 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடையில்" அழைப்பது? கருத்து விவாதம் நடத்துகின்றனராம். சரி எதைப் பற்றி? அவர்கள் தம்மைப் பற்றி அல்ல. எம்மைப் பற்றி. 'அரசியல் அல்லாத கருத்து" விவாதம் செய்கின்றனராம்.

 

இவர்களின் விவாதமே வேடிக்கை. இவர்கள் எமக்கு மொழி நாகரீகம் பற்றி கற்றுத்தர முனைகின்றனர். விபச்சாரம் செய்யும் அரசியல் நாகரீகத்தை முதலில் அவிழ்த்துப் போடுங்கள். பிறகு மொழிக்கு வாருங்கள். உங்கள் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான் மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான் மொழிக்கு முன்னால் வந்தது. அரசியல் நடத்தையை பாதுகாத்துக் கொண்டு, தேசம்நெற் விபச்சாரம் செய்வதை நியாயப்படுத்த எமது மொழியை மறுப்பது அவசியமாகின்றது.

 

பாசிச கொலைகார புலிக்கும், கூலிக் குழுவான புலியெதிர்ப்பு கும்பலுக்கும் எதிராக ஒரு அரசியல் நாகரீகம் பற்றிய வரையறை கூட இல்லாதவர்கள் இவர்கள். அவர்களுடன் கூடி நின்று, எம்மை அவதூறு செய்யும் நாகரீகம். இப்படி ஒரு இணைய நாகரீகத்தைக் கூட பேண வக்கில்லாதவர்கள். உங்கள் அரசியல் நாகரீகம் என்பது, இப்படி மக்களை இழிவாடுவது தான். இரண்டையும் எதிர்த்து, மக்களுக்காக விவாதமும், அரசியலும் நடத்த துப்புக் கிடையாது. நீங்கள் மொழி நாகரீகம் பற்றி உளறுகின்றீர்கள். நாம் அதைச் செய்யக் கூடாது என்பதற்காக, மொழி நாகரீகம் பற்றி பேசுகின்றனர்.

 

இந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் உங்கள் 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடை"யை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மொழி நடை என்பது, பாசிசத்துக்கு படுத்து கிடப்பது தான். ஜனநாயகம் பேசும் விபச்சாரிகளுக்கு மெத்தை போடுவது தான். இதுதான் உங்கள் யோக்கியமான அரசியல் நாகரீகம். பூசிமெழுகும் மொழிநடை, எமது வர்க்கப் போராட்டத்துக்கு உதவாது. அது புலிப் பாசிசத்துக்கும், புலியெதிர்ப்பு ஜனநாயகத்துக்கும் ஜால்றாப்போடும் பன்றிகளுக்கே ஏற்ற மொழி தான்.

 

பி.இரயாகரன்
17.11.2007