இதுவரை தமிழர்களின் நலன்களுக்காக போராடி வீரமரணம் அடைந்த அனைத்துப்போராளிகளுக்கும் மக்களுக்கும் எமது வீர வணக்கங்கள்! .
குழந்தைப் போராளிகளுக்கும், போராளிகளுக்கும் சயனைட் மாலை அணிவித்து அழகுபார்த்த பிரபாகரன் எதிரியிடம் சரணடைந்ததும், எதிரி யுத்ததர்மத்தை மீறி கோடாலியால் தலையை பிளந்து கொலை செய்ததும் யாவரும் அறிந்தததே!.
ஆனால் 'சிலர்' பிரபாகரன் வருவார் என்று மாயக்கதைகளை பரப்பி இதமது பதவி பண ஆசைகளை நிறைவு செய்ய முயற்சிக்கின்றனர் .
இறந்த மாவீரர்கள், EXPORAMA வில் - 1 .5 இலட்சம் குரோணர்கள்( முப்பது இலட்சம் ரூபா ) செலவழித்து மாவீரர் களியாட்டம் கொண்டாடச் சொல்லி அவர்கள் சொல்லவில்லை . முட்கம்பி வேலியிலிருந்து வெளியேறும் மக்களுக்கே அப்பணம் உபயோகிப்பதையே மாவீரர் விரும்பினார்கள், மாவீரர் களியாட்டத்தால் மாவீரரை அவமதிக்காதீர் . அப்பணத்தை எமது மக்களுக்கே செலவளியுங்கள் .
பண, பதவி வெறியர்களிடம் ஏமாறாதீர்கள் !
மக்கள் விரோதிகளை இனம்கண்டு தூக்கிஎறியுங்கள் !
பிரபாகரன் வரமாட்டார், சிங்கள பேரினவாத்திடமிருந்தும், பதவி வெறியர்களிடமிருந்தும், தமிழர்கள் உரிமைபெற்று வாழ மக்களாகிய நாமே போராடுவோம் !
பிரபாகரன் வரமாட்டார,
மக்களாகிய நாமே போராடுவோம் !
விழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு 23 .11 .2009
நன்றி துரோகிகளே !
தலைவரைப்பற்றி கதைக்ககூடாது, இயக்கத்தைப்ப்றி பேசாதே என்று வாய் பூட்டி வைத்த அரசியல் தலைமை இன்று தடுமாறுகிறது.
முதல்முதலாக் நோர்வேத்தமிழர்கள் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்கள். ssb ( statistisk Sentarl byro- www.ssb.no ) தரவின் படி கள்ள வோட்டைக் கழித்தால், 10636 பேருக்குப்பதிலாக 2100 பேரே வாக்களித்து ஈழத்தமிழர் பேரவையை செல்லாக்காசாக்கி விட்டார்கள் . ஒரு சர்வாதிகாரி 20 %
மக்களால் தெரிவு செய்யப்பட்டால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளலாமா?
80 % மக்கள்எங்கள் வேண்டுகோளை ஏற்று தேர்தலை பகிஷ்கரித்தார்கள் .நன்றி ஐயா நன்றி . புலிகள் தான் ஏகபோக பிரதிநிதிகள் என்று துவக்குக்காட்டிச் சொன்ன காலம் போய்விட்டதே . எம்மைப்போலவே இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்கச்சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!
இந்தத் தேர்தல் பிழையாக நடந்ததையும் தோல்வியில் முடிந்த்தத்தையும் ஒப்புக்கொண்டு, தேர்தலை ரத்துச் செய்து புதிய தேர்தலை வேறுவிதமாக நடத்த யோசிக்கும் தேர்தல் குழுவின் பெரும்பான்மைக்கும் நன்றி.
அந்த முடிவை மாவீரர் மேடையில் அறிவிக்காமல் அதற்கு முன்னரே அறிவியுங்கள் . நன்றி .புலிகளுக்கு வால்பிடித்தால் தியாகி, மாவீரர் .எதிர்த்தால் துரோகி .
80 % நோர்வே தமிழர்கள் துரோகிகள் ( Bergan 90 % துரோகிகள் )
நன்றி துரோகிகளே ! நன்றி துரோகிகளே ! நன்றி துரோகிகளே !
மற்ற நாடுகளில் இந்த மாதிரித்தேர்தல் விளையாட்டுக்களில் பலரும் இறங்காமல் எச்சரித்த நோர்வே மண்ணின் மணிகளுக்கு நன்றி ஐயா !! நன்றி !!
தேர்தலில் நின்றவர்களை தேடிச்தேடிச் சுட்ட 'தலை', உயிரோடிருந்திருந்தால் இந்ததத் தேர்தல் நடக்க விட்டிருக்குமா ??
( ஒரே ஒரு கேள்வி : 27 ம் திகதியோடு TCCயைக் கலைக்கப் போகிறீர்கழாம் . மெய்யா ? . அது தான் TCC யை விட பெரிய அமைப்பு வந்து விட்டதே . உங்கள் கொள்கை - ஒரு தலைவர் - ஒரு இயக்கம் .ஒருதலைவன் போய்விட்டால் - ஒரு இயக்கம் தானே மிஞ்சி இருக்கின்றது, அது NCET தானே? )
ssb ( statistisk Sentarl byro- www.ssb.no ) தரவு
நீங்கள் நேரடியாக சரி பார்த்துக்கொள்ளுங்கள்
Resultat av i går dagens NCET_styre valg
Befolkning med Srilankesiskbakgrunn i 1. januar 2009: 13 436
Singaleser ca -500
Barn under 16 år -2 300
Netto stemmeberetige 10 636
Kilde: tamilvalg.comValg oppmøte 2479 - med falsk stemmer - Riktig
tall under 2100 . Vi har bevis på falsk stemmer ( Mikro video kamera)
Antall Ikke møttende stemmeberettige 8 557
Oppmøte i prosent ift. stemmeberettige 20 %
விழித்துக்கொண்ட தமிழ் மக்களமைப்பு 23 .11 .2009
< Prev | Next > |
---|