Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம், மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது

உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம், மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது

  • PDF

இந்தத் தீர்மானத்தின் பெயரில் தான், தமிழினத்தையே அழித்தனர். தமிழினத்தை பல பத்தாகப் பிளந்தனர். இதுவே எம் கடந்தகால, நிகழ்கால வரலாறாகிக் கிடக்கின்றது.

இன்று புலத்து மாபியாப் புலிகளின் ஒரு பகுதி, மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்கின்றனர். வேடிக்கை என்னவென்னால் கடந்த காலத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்தவர்களை துரோகிகள் என்று கூறி போட்டுத் தள்ளியவர்கள் தான், மீண்டும் வட்டுகோட்டைத் தீர்மானம் என்கின்றனர். சரி இந்த நாடகம் எல்லாம் இன்று எதற்கு?

 

தமிழ் மக்களை ஏமாற்றி சுருட்டிய பணத்தை தமதாக்கவும், புதிதாக பணத்தை கொள்ளையிடவும், தமிழ்மக்கள் மேல் தங்கள் அதிகாரத்தை தக்கவைக்கவும், உளுத்துப் போன வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள எடுத்து கடை விரிக்கின்றனர்.

 

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் யாரால் முன்வைக்கப்பட்டது. தமிழ் மக்களை ஓடுக்கிய, மேலாதிக்க சமூகப் பிரிவுகளால், சொந்த சுயநலத்;துடன் தமிழனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. யாழ்மேலாதிக்க வலதுசாரியக் கும்பலால் தான், இடதுசாரிய போராட்டத்தை மழுங்கடிக்கும் வண்ணம் சொந்த பித்தலாட்டத்துடன், இந்தத் தீர்மானத்தை குறுந்தேசிய இனவாத அடிப்படையில் தமிழ் மக்கள் மேல் திணித்தனர். இப்படி தமிழ் மக்களின் பெயரில் சிலர், தங்கள் சமூக மேலாதிக்கத்தை தமிழ் மக்கள் மேல் திணித்தனர்.

 

இந்தத் தீர்மானம் நிலவிய மேல் சாதிய சமூக ஆதிக்கத்தை தக்கவைத்தது. பிரதேச மேலாதிக்கத்தை முன்னிறுத்தியது. ஆணாதிக்க வக்கிரத்தை பின்பற்றியது. தமிழ் மக்களை, தமிழ் சுரண்டும் வர்க்கம் சுரண்டும் உரிமையை முன்னிறுத்தியது. இதை மூடிமறைக்க, இதன் மேல் ஒரு அரசியல் இடது பித்தலாட்டத்தை செய்தது. இப்படி தமிழ் மேலாதிக்க சமூக ஓடுக்குமுறையை முன்னிறுத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானம், இதை மூடிமறைக்க சிங்கள மக்களை மட்டும் தன் எதிரியாக முன்னிறுத்திக் காட்டியது. தமிழனுக்கு எதிரான, சமூக மேலாதிக்க தமிழ் எதிரிகளை இனம் காட்ட மறுத்தது. அன்னிய நாட்டு எதிரிகளை இனம்காட்ட மறுத்தது. 

 

இப்படி உருவான வலதுசாரிய தீர்மானத்தை, அனைத்து தமிழ் மக்களின் பெரு விருப்பம் என்றது. சாதிய ரீதியாக, பிரதேச ரீதியாக, ஆணாதிக்க ரீதியாக தமிழனை தமிழன் ஓடுக்க தமிழ் தேசியத்தின் பெயரில் கோரியது. தமிழனை தமிழன் சுரண்டுவதை, தமிழன் பெயரில்  அங்கீகரித்தது. இப்படி பெரும்பான்மை தமிழனுக்கு எதிரானதை, பெரும்பான்மை தமிழன் அங்கீகரித்தான் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பெயரால் கூறுவது, வலதுசாரிய பாசிசத்தின் அரசியல் அடிக்கட்டுமானமாகும்.

 

இதைத்தான் இன்று மீண்டும் புலி மாபியாக் கும்பல் ஜனநாயக வழியில் முன்வைக்கின்றனராம்! அன்று இந்த வலதுசாரிய குறுந்தேசிய தீர்மானம் என்ன செய்தது? தமிழன் மேலான தமிழனின் ஒடுக்குமுறையை மறுத்தவர்களை, துரோகியாக்கிக் கொன்றது. இப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்மொழிந்து அதைப் பின்பற்றியவர்கள்,  தமிழ் மக்களின் பெயரில் தமிழனைக் கொன்றனர். புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும், இறுதியில் புலிகளும், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பெயரில் தூக்கிய துப்பாக்கிகள் மூலம், தமிழனுக்கு தமிழனை பலியிட்டனர். இப்படி தமிழினத்தையே அழித்தனர். தமிழ் இனத்தை பல கூறுகளாக சிதறடித்தனர்.

 

இப்படித்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம், தமிழன் மேலான தமிழனின் சமூக ஒடுக்கு முறைகளைக் பேணக் கோரியது. கடந்தகாலம் முதல் இறுதி புலி வரையான வலதுசாரிய பாசிச செயலை, இன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தும் மாபியாக்கள் விமர்சனம் செய்யவில்லை. ஏன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தன்சொந்த பித்தலாட்டத்துடன் மக்களை ஏமாற்றக் கூறிய இடது கோசங்கள் எதையும், கடந்த காலத்தில் புலிப் பாசிட்டுக்கள் பின்பற்ற தவறி அதை கருவறுத்ததை இந்த மாபியாக்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. இப்படி உளுத்துப் போன தீர்மானத்தைக் கொண்டு, தமிழனை ஏமாற்றித் தமிழன் தின்ன முனைகின்றான். 

 

அன்று இந்த தீர்மானத்தின் வலதுசாரிய போலித்தனத்தை மறுத்தவர்களை, தமிழ்த்தேசியம்  துரோகியாக்கியது. இப்படி தமிழனை தமிழன் கொல்லவே, இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்று கோரியது. இதைத்தான் புலிகள் தமிழனுக்கு எதிராக முன்னிறுத்தி, தமிழனத்தையே நாறடித்து அழித்தனர்.

 

உளுத்துப் போன அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை இன்று தூக்கிகொண்டு, புலத்து புலி மாபியாக்கள் தமிழன் சாகின்றான் என்று ஓப்பாரி வைக்கின்றனர். தமிழனையே சாகடித்தவன் மீண்டும் ஒப்பாரி வைப்பது, தன்னுடன் சேர்ந்து ஒப்பாரி வைக்க வரும்படி தமிழினத்தைக் கோருவதும் இன்று அரங்கேறுகின்றது. தமிழினத்தை அழித்தும், அழிக்கவும் உதவிய புலத்துப் புலித் துரோகிகள், தங்களை மூடிமறைத்துக் கொண்டு தமக்கு வே~ம் கட்டி மீண்டும் பவனி வர முனைகின்றனர். இவர்கள் தான் தமிழினத்தை உள்ளிருந்து அழித்த, அதன் பெயரில் திண்டு கொழுக்கும், தமிழனுக்குள் இருக்கும் முதல்தரமான துரோகிகள் ஆவர்.

 

பி.இரயாகரன்
13.11.2009

 

Last Updated on Friday, 13 November 2009 09:07