Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் வீர வணக்கம்

வீர வணக்கம்

  • PDF

கோடான கோடி மக்களுக்காக
குருதி சிந்திய தோழர்களே
வர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....
வீழந்து புதைந்திட்ட வித்துக்களே
வீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,
..
சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமை
தலைவிரித்து ஆடிடும்
தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே
அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்
ஆல மரங்கள் சாய்ந்தடா....ஆ.........
அழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)
..
இருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்
எங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்
எதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த
மலைபோன்ற தோழன் மாண்ட துயரம்
காடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்
தர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை
கொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)
..
துப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே
ஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்
எங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்
இழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்
மண்ணில் அவரது உடல் மறைந்தாலும்
மக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)
..
தெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்
அந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்
அவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்
போனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்
மக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்
மக்கள் இதயத்தில் கலந்தானே - (2)
(கோடான)

Last Updated on Monday, 24 November 2008 20:29