Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலியிசம் என்பது என்ன?

புலியிசம் என்பது என்ன?

  • PDF

படுகொலை, கொள்கை கோட்பாடற்ற மாபியாத்தனம். தாம் ஏன், எதற்காக, எந்த இலட்சியத்துக்காக, எப்படி போராடுகின்றோம் என்பதை சொல்ல முடியாத கும்பல். இவர்களுக்கும் மனித குலத்துக்குமான உறவு என்பது, கடைந்தெடுத்த பாசிசம்.

 

 

இவர்களின் மொழி படுகொலை தான். இதுவல்லாத வேறு எந்த ஒரு அரசியலும் கிடையாது. அதனிடம் அரசியல் தர்க்கம் கிடையாது. விவாதிக்கும் அரசியல் நேர்மை கிடையாது. இலட்சியம் என்பது வெறும் கோசமாக மாறிவிட்ட நிலையில், மக்களை வெறும் மந்தைகளாக மாற்றிவிட்ட நிலையில், அடக்குமுறையைத் தவிர அதனிடம் ஒரு அரசியல் மொழி இருப்பதில்லை.

 

இப்படிப்பட்ட அரசியல் அனாதைகளின் இருப்பு என்பது, அரசியல் படுகொலைகள் மூலம் தம்மை தக்கவைப்பது தான். இப்படி 10000 க்கு மேற்பட்ட தமிழர்களை இனம் கண்டு கொன்றதன் மூலம் தான், புலியிசம் இன்று வரை நீடிக்கின்றது. அதுமட்டுமல்ல ஊர் உலகத்தில் உள்ள இலங்கைத் தமிழரை எல்லாம் புலிகளின் அதிகாரத்தின் முன் நிறுத்தினால், மற்றொரு 10000 பேரை உடனடியாகவே கொல்லும் ஒரு பட்டியலையும் வைத்துள்ளனர். அந்தளவுக்கு மக்களுக்கு எதிரான செயல்பாடுகள், வீங்கி வெம்பி காணப்படுகின்றது. உண்மையில் இதற்குள் அதன் தர்க்கம், அதன் அரசியல் எல்லாம். இதுவே சாரமாகி புலியிசம் உயிர்வாழ்கின்றது.

 

இதை செய்வதற்கும், நியாயப்படுத்துவதற்கும் அது கையாளும் தர்க்கம் என்பது, இழிவானதும் கேடுகெட்ட துரோக வழிகளுமே. எடுத்த எடுப்பில் துரோகி, எட்டப்பன், பொம்பளைப் பொறுக்கி, நிதி மோசடிக்காரன், கைக் கூலி என்று முத்திரை குத்தி கட்டமைப்பதே புலியிச அரசியல். புலியின் அரசியலே இதுதான். இதற்கு வெளியல் அ, ஆ எதுவும். தெரியாது. அவர்கள் கட்டமைக்கின்ற அவதூறுகளுக்கு அரசியல் அடிப்படைகள், ஆதாரங்கள் எதையும் முன்வைப்பதில்லை. மாறாக பொய்யும் புரட்டும், கற்பனையும் புளுகும், அதர்மமான வழிகளில் வரலாற்று மோசடி செய்து விதம் விதமாக கட்டமைப்பதே அவர்களின் பாசிச மொழி.

 

உண்மையில் இதை கேட்பவன் மந்தையாகவும், கேள்வி கேட்கும் ஆற்றலற்ற மலட்டுக் கூட்டமாகவும், விசுவாசமே அறிவாகவும் கொண்ட சைக்கோக்களாக வைக்கப்படுகின்றனர். உள்ளடக்கத்தில் அரை லூசுகள். எந்த சொந்த உணர்வு அற்றவர்கள். வெறியேற்றப்பட்டு முறுக்கிவிடப்பட்டால் சுழலும் பொம்மை இயந்திரங்கள். சுய ஆற்றலற்றது. சுய அறிவற்றது. சுய புத்தியற்றது.

 

கற்றல், கற்பித்தல், கேட்டல், கேட்டவற்றை விவாதித்தல் என அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அப்படி இருந்தால் மட்டும் தான், தேசியம் என்று ஊட்டப்படுகின்றது. இதை கடைப்பிடிக்கின்ற அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக, அதையே பெருமையாக மாற்றிவிடுவதே புலியிசம்.

 

ஒன்றையே கேட்கவும், அதையே மீள ஓதவும் தூண்டப்படுகின்றது. மற்றையவற்றை பார்க்காமல் கேட்காமல் இருக்கவும் கூடிய, பண்ணை மந்தைகளாக வேலியிட்டு அடைக்கப்படுகின்றனர். இவர்கள் தான் புலி விசுவாசிகள்.

 

இவர்கள் தம் விசுவாசத்தை சந்தேகிக்க முடியாது. இதன் மேல் அறிவியல் பூர்வமாக, எதையும் உணர்ந்து செயல்படுவது கிடையாது. உண்மையில் மனித அறிவுக்கும், புலி விசுவாசத்துக்கும் இடையில் எந்த உறவும் இருப்பதில்லை. எதிர்நிலை மனப்பாங்கே உண்டு. அறிவு என்பது புலிக்கு எதிரான துரோகம் என்பதே, இவர்களின் அகராதி கூறுகின்றது. சமூதாயத்தின் கருத்தை கேட்காத வண்ணம், இவர்களின் சொந்தக் காது இறுக அடைக்கப்பட்டு, கண் கட்டப்பட்டு, வாய் பொத்தப்பட்ட நிலையில் தான், புலி விசுவாசிகள் கூட்டம் உருவாக்கப்படுகின்றது. கத்து என்றால் அது கத்தும், அழு என்றால் அழும். சிரி என்றால் சிரிக்கும். இதற்கு வெளியில் அதனிடம் எந்த உணாச்சியும் கிடையாது.

 

இந்தக் கூட்டத்துக்கு சில வான வேடிக்கைகள் போதும். இதன் மூலம் விசுவாசத்தின் பலனை அடைந்ததாக அவர்களை நம்ப வைக்க முடியும். இப்படிபட்ட அற்புதமான புலியிசம் தான், எமது சமுதாயத்தில் இன்றுவரை ஆதிக்கம் வகிக்கின்றது.

 

உண்மையில் தமிழ் தேசிய போராட்டத்தின் சரியான தேசியக் கூறுகள், எந்த எதிரியையும் அரசியல் இராணுவ கூறுகளில் வெல்லப் போதுமானது. படுகொலைகளுக்கு பதில், அவதூறுகளுக்கு பதில், பாசித்துக்கும் மாபியாத்தனத்துக்கும் பதில், உயர்வான மனித விழுமியங்களைக் கொண்டது. அந்தளவுக்கு தமிழ் தேசியம் மக்களின் வாழ்வை அடிப்படையாகவும், அவர்களின் சமூக பொருளாதார கூறுகளைக் கொண்டது. அது கொண்டுள்ள அரசியல் சாரம், அதன் அரசியல் தர்க்கம், மனித குலம் சார்ந்தது. மனிதக் கூட்டுறவை உருவாக்கும் அடிபடையில் மிகப்பலமானது. அதன் உண்மையான தர்க்கமும் சாரமும், படுகொலையையோ, பாசிசத்தையோ மாபியாத்தனத்தையோ அடிப்படையாக கொண்டதல்ல. மாறாக அது தன்னளவில், அதன் உண்மை மிகப்பலமானது. எந்த எதிரியையும் வெற்றிகொள்ளக் கூடியது.

 

புலிகள் இதை மறுக்கின்றமையால் தான், பாசிசமும், மாபியாத் தனமும் அவசியமாகின்றது. தமிழ் தேசிய அரசியலைக் கைவிட்டு, படுகொலையை தனது மொழியாக்குகின்றது. தன்னைச் சுற்றி அறிவற்ற கூட்டத்தை, பினாமிகளை, பிழைப்புவாதிகளை உருவாக்கிக் கொள்கின்றது. அறிவுக்கு பதில் அரை லூசுகளைக் கொண்ட லும்பன்களை, சமூக அறிவியல் மேதைகளாக புழுக்கவைக்கின்றது.

 

இப்படி இதை வழிநடத்தும் பாசிட்டுகள். அதற்கேற்ற பினாமிக் கூட்டங்கள். இதற்கு பின்னால் சில லுர்சுகள். அதற்கு ஏற்ற பன்னாடைகள். இதுவே எங்கும் நிரம்பிய புலியிசம். இதுவே புலியிசத்தின் தாற்பரியம். வேடிக்கை என்னவென்றால், பாசிட்டுகளைத் தவிர, மற்றவர்கள் தம்மை தாம் மறைத்துக்கொண்டு, ஊர் பெயர் தெரியாத பெயர்களில் சந்தர்ப்பவாதிகளாக இருந்தபடி பிழைப்பதும், ஊளையிடுவதும்.

 

அரை லூசுகளாக, அதற்கேற்ற பன்னாடைகளாக, அவதூறுகளை புனைவதும் புணர்வதுமாக இவர்கள் அரசியல் வாழ்கின்றது. அறவியல் பூர்வமாக, அரசியல் ரீதியாக விவாதிக்க வக்கற்று விடுகின்றனர். சொந்த இலட்சியத்தைக் கூட, கருத்தியல் ரீதியாக வைக்க முடியாதளவுக்கு லூசுக் கூட்டமாகிவிடுகின்றது. குறைந்த பட்சம் ஒரு விடையத்தை விளங்கிக்கொள்ளும் மனித ஆற்றல், மனித அறிவு, மனித நேர்மை எதுவுமற்றவர்களாகி விடுகின்றனர். மாறாக மோசடிகள், அறிவின்மையும், அயோகியத்தனமும், ஒழுக்கக்கேடும் கொண்டு புலித் தேசியத்தையே விபச்சாரம் செய்பவர்களாகிவிடுகின்றனர்.

 

தமிழ் தேசியம் என்றால் என்னவென்று அறிவியல் பூர்வமாக, விளக்க முடியாதவர்கள் இவர்கள். அதை காட்டுமிராண்டித்தனமான வழிகளில், முடிவாக படுகொலை மூலம் பதிலளிப்பவர்கள். இதுதான் இவர்களின் தேசியம். இதனால் இது தமிழ் தேசியமல்ல, புலியிசமாகின்றது. புலித் தேசியத்தை புலியிச பாசிச வழிகளில், மற்றவன் மீது கொத்திக் கிளறுவது, நலமடிப்பதுமே இவர்களின் உயர்ந்தபட்ச ஊடக வரையறை.

 

தமிழ் மக்கள் என்று இவர்கள் கூறும் அந்த மக்களின் சமூக பொருளாதா அரசியல் வாழ்க்கையையே நலமடித்து, அதை அறுப்பவர்கள் இவர்கள். இவர்கள் கூறும் அந்த தமிழ் மக்களுக்கு அடிப்படையான ஜனநாயக உரிமையை வழங்க முடியாது என்பவர்கள் தான், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்கின்றனர். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்றவர்கள் தான் இந்தப் புலிகள். இவர்கள் தான் தமிழ் மக்களுகாக போராடுகின்றனர். தமிழ் மக்கள் இவர்களைத் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

 

தமிழ் மக்கள் அடிப்படை மனித உரிமைகளையும், அவர்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வையும் மறுப்பவர்கள். அதை குழிதோண்டிப் புதைக்கும் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும், எந்த அரசியல் பொருளாதார ஒட்டுறவும் கிடையாது. மக்களுடனான உறவின் மொழி காட்டுமிராண்டித்தனமான பாசிச உறவே.

 

இந்த தமிழ் மக்கள், தமக்கான அடிப்படை உரிமையைக் கோரினால் கிடைப்பதோ அவதூறுகளும், பட்டங்களும், மரணங்களும். விதவிதமான பட்டங்கள். விதவிதமான படுகொலைகள். இதுதான் புலியிசம். இது தான் பிரபானிசம்.

 

துரோகி, பொம்பளைப் பொறுக்கி, எட்டப்பன் என்று நீண்ட பட்டியல். இதையும் தாண்டினால் பச்சைத் தூசணம். முடிவாக படுகொலை. இதுதான் எமது தேசத்தின் புலியிசத்தின் அரசியல் வரலாறு. பேரினவாதத்தின் நுகத்தடியின் பின்னால் கட்டமைக்கப்பட்ட, தமிழ் மக்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது.

 

குறிப்பு : அண்மையில் எனக்கு எதிராக சில லூசுகள் இப்படித்தான் பொங்கினர். அதன் அறிவியல், அதன் நேர்மை, அதன் சாரம் அனைத்தையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பி.இரயாகரன்
13.06.2007

Last Updated on Saturday, 06 December 2008 07:24