Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் அரசு குறித்து - லெனின் பகுதி I

அரசு குறித்து - லெனின் பகுதி I

  • PDF


***********************************************************************************************


அரசு என்ற இந்த நூல் , யா.மி.ஸ்வேர்திலோ பல்கலைக் கழகத்தில் கி.பி. 1919 ஜீலை 11 - இல் , வி.இ.லெனின் ஆற்றிய விரிவுரை ஆகும். கி.பி.1984 இல், மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் பதிக்கப்பட்ட இந்த நூல் சில மொழிபெயர்ப்புத் திருத்தங்களுடன் வெளியிடபடுகிறது.

***********************************************************************************
தோழர்கள்ளே ! நீங்கள் முன்மொழிந்த திட்டத்தின்படி இன்றைய உரைக்குரிய பொருள் அரசு என்பதாகும். இப்பொருள் பற்றி ஏற்கெனவே உங்களுக்கு எந்த அளவு தெரிந்த்துள்ளது. என்பதை நான் அறியேன். நான் நினைப்பது சரியானால் உங்களது வகுப்புகள் இப்பொழுதுதான் தொடங்குகின்றன. இப்பொருளை முறையாக நீங்கள் அணுக தொடங்குவது இதுவே முதல் தடவையாகும். அப்படியானால் கடினமான இப்பொருள் பற்றிய முதற் பேச்சில் , எனது உரையில் பலருக்குப் போதிய அளவு தெளிவாகவும்,புரியக் கூடிய விதத்திலும் கருத்துக்களை விளக்குவதில் நான் வெற்றி பெறாமல் போகலாம். அப்படு நேர்ந்து விடுமாயின் , அது பற்றிக் கலக்கமுற வேண்டாம் என்றும் உங்களைப் கேட்டுக் கொள்கிறேன்.


ஏனெனில் , அரசு என்பது பற்றிய பிரச்சினை மிக மிகச் சிக்கலும் கடினமுள்ள ஒன்று; முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் தத்துவஞானிகளால் ஒருவேளை மற்ற எந்தப் பிரச்சினையையும்விட மிகுதியாகக் குழப்பி விடப்பட்ட ஒன்றாகும். ஆகவே இப்பொருளை, ஒரு சுருக்கமான பேச்சில் , ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது சாத்தியம் என்று ஒரு போதும் எதிர்பார்க்கக் கூடாது. இப்பொருளை பற்றிய முதற் பேச்சுக்குப்பின், விளங்கிக் கொள்ளாத, அல்லது உங்களுக்குத் தெளிவில்லாத இடங்களை நிங்கள் குறித்து வைத்து, இரண்டாவது , மூன்றாவது, மற்றும் நான்காவது முறையும் அவற்றை அணுக வேண்டும். அவ்வகையில் , நீங்கள் விளங்கிக் கொள்ளாதவற்றைப் படிப்பது மூலமும், தனிப்பட்ட விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றினாலும் , மேலும் நிறைவு செய்து விளக்கம் பெறாலாம். மீண்டும் ஒருமுறை நாம் கூடி உறையாட முடியுமென்று நம்புகிறேன். விரிவுரைகள் , உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்கசும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களிலும் சிலவற்றையேனும் படிப்பதில் நீங்கள் சிறிது நேரம் ஈடுபடுவீர்கள் என்றும் நம்புகிறேன்.


சோவியத் கட்சிப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான நூல்நிலையத்தில் உள்ள நூல் பட்டியலிலும், உதவிப் புத்தகங்களிலும் மிகமிக முக்கியமான இந்நூல்களைக் காணக்கூடும் என்பதில் ஐயமில்லை. இந்நூல்களினுடைய வாசகத்தின் சிக்கல் காரனமாக, உங்களில் சிலருக்கு முதலில் திகில் உண்டாகலாம்.இருந்தாலும், இதனால் நீங்கள் ஏதும் கலக்கமடையக்கூடாது என்று மறுபடியும் கூறுகிறேன். முதல் முறை படிக்கும் பொழுது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் பொழுது அல்லது பின்னர் அந்த்ப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட ஒரு கோணத்திலிருந்து அணுகும் பொழுது தெளிவாகி விடும். ஏனென்றால், இந்தப் பிரச்சினை மிகச் சிக்கலானது.


அதோடு , முதலாளித்துவ அறிஞர்களும், எழுத்தாளர்களும் இதனை மிகவும் குழப்பியும் விட்டிருக்கிறார்கள் என்படைத் திரும்பவும் சொல்கிறேன். ஆகவே இந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, அதில் சொந்த முயற்சியால் தேர்ச்சி பெற விரும்பும் யாரும் இதனைப் பல முறையில் முனைந்து பயில வேண்டும். அதனைத் தெளிவாகவும், திண்ணமாகவும் புரிந்து கொள்ளுவதற்குப் பல்வேறு கோணங்களிலிருந்தும் இப்பிரச்சினையைப் பரிசிலீக்க வேண்டும்.


இப்பிரச்சினைக்கே மீண்டும் திரும்புவது என்பது மிகவும் எளிது. ஏனெனில் , அரசியல் முழுவதற்குமே இது அவ்வளவு மூலாதாரமான, அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். மேலும் , தற்காலம் போல அத்தனை புயல் வீசும் புரட்சிகரக் காலங்களில் மட்டும் அல்லாமல், மிக மிக அமைதியான காலங்களில் கூட, ஒவ்வொரு நாளும் எந்த்ச் செய்தித்தாளிலும் ஏதேனும் ஒரு பொருளாதர அல்லது அரசியல் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டு இந்தப் பிரச்சினை உங்களை எதிர்நோக்கும்.


அரசு என்பது என்ன? அதன் தன்மை யாது? அதன் பொருள் என்ன? நம்து கட்சி, முதலாளித்துவத்தைக் தூக்கி எறியப் போராடும் கட்சி, அதாவது கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு விசயத்தில் கொண்டுள்ள நிலை என்ன? இக்கேள்விகளுக்கு ஏதேனுமொரு தொடர்பில் ஒவ்வொரு நாளும் நீங்கள் திரும்ப நேரும். மேலும், வெவ்வேறு நிலைமைகளில் , மிகமிக அற்பமான பிரச்சினைகளையொட்டி, மிகவும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிரிகளோடு நடத்தும் உரையாடல்களிலும், விவாதங்களிலும் இந்தப் பிரச்சினை உங்கள் எதிர்நிறக் காண்பீர்கள்.


ஆதலால், உங்கள் படிப்பின் பயனாய் , அரசு என்பது பற்றி நிங்கள் செவிமடிக்கும் உரையாடல்கள். விரிவுரைகள் ஆகியவற்றின் பயனாய் , நீ£ங்கள் இந்தப் பிரச்சினையைப் பிறர் துணையின்றியே அணுகும் ஆற்றலைப் பெறுவது மிகவும் முக்கியமாகும். இப்பிரச்சினையைப் பிறர் துணையின்றி ஆராயும் வழியை நீங்கள் கற்றால்தான், உங்கள் கொள்கைத் துணிபுகளில் போதிய அளவு உறுதி கொண்டவர்களாக உங்களை நீங்கள் கருத முடியும் . யாரையும் எதிர்த்து எந்த நேரத்திலும் அவற்றைப் போதிய வெற்றியுடன் பாதுகாத்து நிற்க முடியும்.


இச்சுருக்கமான குறிப்புகளைத் தொடர்ந்து , இனி நான் இப்பிரச்சினையையே ஆராயப் போகிறேன். அரசு என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சி, அரசைப் பற்றிக் கொள்ள வேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது? இதுவே பிரச்சினை ஆகும்.