Sat04202024
Last update11:47:46 am
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாடசாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீசிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்விவேளைதோ றும்கற்று வருவதால் படியும்!மலைவாழை அல்லவோ கல்வி? -- நீவாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!படியாத பெண்ணா யிருந்தால் -- கேலிபண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!கடிதாய் இருக்குமிப் போது -- கல்விகற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt147