Wed04242024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் திரு.மாசானபு புகோகா. சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

திரு.மாசானபு புகோகா. சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

  • PDF

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

பாறையில் வளர்ந்துள்ள ஆலமரம் வனத்துறையின் ஆழியார் மூலிகை பண்ணையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனைக்காக பாறையின் மேல் வைக்கப்பட்ட இந்த ஆலமரக் கன்று பாறையிலுள்ள மிக சிறிய வெடிப்பில் தனது வேர்களை விட்டு பிளந்து இன்று பெரிய விருட்ஷமாக மாறத் துவங்கியுள்ளது. கூடவே ஒரு கொடிக்கும் வளரும் சுழலையும் உருவாக்கி தந்துள்ளது. திரு.மாசானபு புகோகா சொன்னது உண்மைதானோ? சுனாமிக்குப் பின் எளிய அலையாத்திக் காடுகளை வளர்க்க வலியுறுத்தாமல் பெரும் பொருட் செலவில் தடுப்பு சுவர் எழுப்பலாம் என்பதும், மரங்களை நட்டு மழையை பெற்று சேமிப்பதை வலியுறுத்தாமல் கடல் நீரை குடிநீராக மாற்றக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யலாம் என்பதும் இந்த வகைதானோ? என்ற ஐயம் என்னுள் நீண்ட நாட்கள் இருந்ததுண்டு.


இயற்கை நமக்கு கற்பதற்கு நிறைய தருகிறது. நாம் கற்க மறுக்கிறோம். விளைவுகளை நாம் தினமும் செய்தியாக படிக்கிறோம், பார்க்கிறோம். காலம் தாழ்த்தாமல் கற்க ஆரம்பிப்போம்.