இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதி கோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது . அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மத தலைவர்களும் இந்த ஆற்பாடத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழிபேசும் மக்களுடன் பிக்குகள் பலரும், கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் . இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜி லிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவ சமாசக் கட்சித்தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.